கற்கை நன்றே-36
*மணி
ஜப்பான் நாட்டில் கென்கோ என்பவர்
மனிதர்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்து எழுதியுள்ளார். அதில் மனிதர்கள் எப்போது தவறிழைப்பார்கள் என சொல்லியிருப்பார்.
மரம் ஏறுவதற்குப் பயிற்சி கொடுத்துக் கொண் டிருந்தான் ஒருவன். கற்க வந்த ஒருவன் பயிற்சியை முடித்து மரம் ஏறிக்காட்டினான். அவன் கடினமான பகுதிகளில் ஏறும்போது அமைதியாக இருந்த அந்தப் பயிற்சி கொடுப்பவர் எளிமையான இடத்திற்கு வரும்பொழுது 'ஜாக்கிரதை ' 'ஜாக்கிரதை' என்று குரல் கொடுத்தார்.
அந்த இடத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து கீழே இறங்கி வந்த அந்த இளைஞன் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டான். "நான் கடின மான பகுதிகளுக்குச் செல்லும் போது அமைதி யாக இருந்துவிட்டு எளிய பகுதிக்கு வரும்போது என்னை உஷார் படுத்தினீர்களே! என்ன காரணம்?" என்று கேட்டான்.
அதற்கு அந்த பயிற்சியளிப்பவர், கடினமான இடம் வரும்போது நீயே கவனமாக இருப்பாய். எளிமையான இடம் வருகிறபோது தான் நாம் அதீத நம்பிக்கையால் தவறிழைப்போம் என்று அறிவுறுத்தினார்.
நாம் செய்யும் செயல்களில்..அதீத தன்னம்பிக்கை,எதனையும் குறைவாக மதிப்பிடுவது,நம்மைப் பற்றிய பெருமிதம் போன்றவைகளில் தவறிழைக்கிறோம். மாற்றிக் கொள்வோம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment