நாம் நம்முடைய தவறுகளை எந்த அளவு மன்னிக்கத் தயாராக இருக்கிறோமோ அந்த அளவுக்கு மற்றவர்களின் தவறுகளைத் தண்டிக்கத் துடிக்கிறோம். நம்முடைய தவறுகள் நம் பல்லே நம் நாக்கைக் கடித்துக்கொள்வதைப் போல விபத்துகள் என நினைக்கிறோம். மற்றவர்களின் தவறுகளை திட்டமிட்ட பாதகம் என நினைக்கிறோம். வெகுண்டு எழுந்து தண்டிக்கிறோம்உண்மையில் அவர்களின் கீழ்மையின் வழியாக நாம் பார்ப்பது நம்முடைய கீழ்மையைத்தான்.-இளங்கோ கிருஷ்ணன்
No comments:
Post a Comment