கற்றதும் பெற்றதும்-16
*மணி
இன்றைய பிரச்சனைகளுக்கு நேற்றைய பதில்களை அளிப்பதுதான் அரசியல்
-மார்ஷல் மக்லூகன்
#அரசியல் எனக்குப்பிடிக்கும்
-ச.தமிழ்ச்செல்வன்
(பாரதி புத்தகாலயம்.விலை ரூ20,
இலட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான நூல்)
ஒரு அத்துவானக் காட்டையே அழிக்கவல்லது ஒரு தீக்குச்சி என்பார்கள்.அதுபோல் ஆயிரம் பக்கங்களில் உள்ள கருத்துச் செறிவை வெறும் ஐம்பது பக்கங்களில் மிக எளிமையாய் அரசியலை புரியவைத்தது இப்புத்தகம்.அரசியல் கருத்துக்களை சிறு சிறு பகுதிகளாக விளக்கியிருப்பார்.
#நமக்கு எதுக்கு வம்பு?
"இவ்விடம் அரசியல் பேசக்கூடாது" என்று டீக்கடைகளிலும் பொது இடங்களிலும் புகை பிடித்தல் தவறு என்பது போல எழுதி வைத்திருப்பார்கள். எந்தத் தாயும் தகப்பனும் தன் பிள்ளை அரசியலில் ஈடுபடுவதை பொதுவாக விரும்புவதில்லை. யாரிடம் கேட்டாலும் நமக்கு எதுக்கு இந்த அரசியல் எல்லாம் என்று சொல்லுவாங்க..உண்மையில் அரசியல் என்பது குறித்த பார்வை
#இடதும் வலதும்
இங்கிலாந்து நாட்டில் ஒரு ராஜா ஆட்சி செய்து வந்தாராம். மன்னர் ஆட்சி என்றால் அரசசபை இருக்கும் அல்லவா.. அரசருக்கு இரண்டு பக்கமும் மந்திரிகள், சேனாதிபதிகள், பிரபுக்கள் எல்லாரும் உட்கார்ந்திருப்பார்கள். நீதி நிர்வாகம் சிறைச்சாலை அத்தனைக்கும் பொறுப்பு இந்த அரச சபை. ஆனால் இந்த சபையில் தொழிலாளிகள் விவசாயிகள் இடம் கிடையாது.
இப்படி போய்க் கொண்டிருக்கையில் நாட்டுத் தொழிலாளர்கள் பெரும் போராட்டம் நடத்தினார்கள் அரசியல் உரிமை வேண்டும் என்று. வேறு வழியில்லாமல் தொழிலாளிகளும் இனிமேல் அரச சபையில் பங்கேற்கலாம் என்று உத்தரவு போட்டுவிட்டார். முதல் மந்திரிகள் எல்லாம் ஒரு சின்ன விண்ணப்பம் செய்தார்கள் நாங்கள் எல்லாம் இந்த பஞ்சைப் பராரிகள் உடன்.. எங்கள் நிலைமை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று வேண்டினார்கள்.
இப்படி ஒரு பிரச்சினை இருப்பதை நினைத்து.. சரி, நீங்கள் எல்லாம் எனக்கு வலது கைப்பக்கம் இருங்கள். தொழிலாளிகள் எல்லாம் அப்படி எனது பீட்சாங்கை பக்கமாக இருந்து விட்டு போகட்டும் சரிதானே என்று உத்தரவு போட்டு விட்டாராம். அன்று முதல் வலது என்றால் முதலாளிகள் பண்ணையாளர்கள் இடது என்றால் பாட்டாளிகள் என்று பழக்கத்திற்கு வந்து விட்டது.
#அரசு பிறந்த கதை
வரலாற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று எழுதப்பட்ட வரலாறு, இன்னொன்று எழுத்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக நடந்த வரலாறு அது எழுதப்படாத வரலாறு எனப்படும்.
1. ஆதி பொதுவுடைமைச் சமூகம்
ஆதி மனிதனாக இனக்குழுவாக வாழ்ந்து கொண்டிருந்த போது இவர்களுக்கு அரசு இல்லை வர்க்கத்தினரிடையே எல்லாருக்கும் பொதுவாக இருந்தது அரசு
2.ஆண்டான் அடிமை சமூகம்
மோதிக்கொண்ட இரண்டு இனக்குழுக்களில் தோற்ற குழு அடிமையானது. சோழர் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக அடிமையாக இருந்தது. சோழர் கால கல்வெட்டுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
3. நிலவுடமை அரசு
நான் தான் ராஜா அந்த நாடு பழம் எனக்குத்தான் சொந்தம் மக்களை நேரடியாக ஒதுக்குவது எல்லாமே ஒரு வகையில் தான். விவசாயம்தான் அடிப்படை.
4. முதலாளித்துவ அரசுகள்
இப்போது உலகம் பூராவும் இருப்பது இதுதான். இது நேரடியாக முதலாளி நம் கண்ணுக்கு தெரிய மாட்டார். ஏனெனில் உண்மையான ராஜாவான முதலாளிகள் பின்னணியில் திரைமறைவில் இருக்க.. அரசு என்பது எல்லாருக்கும் பொதுவானது போல காட்டிக்கொண்டு, நீதி, நிர்வாகம், ராணுவம் எல்லாம் முதலாளிகளுக்கு நேரடி சம்பந்தம் இல்லாதது போல மக்கள் நம்பும் விதமாக இருக்கும்.
4. சோசலிச அரசு
சோசலிச அரசு தான் உலக வரலாற்றில் முதன் முறையாக பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நலன்களைக் காப்பதற்காக உருவான அரசு. 1917 முதல் 70 ஆண்டு காலம் சோவியத் நாட்டிலிருந்து இப்போது மக்கள் சீனம் கியூபா வியட்நாம் வட கொரியா போன்ற நாடுகளில் இருப்பது.
#தமிழகத்தில் அமைந்த ஆட்சி முற்காலத்திலிருந்து இருந்ததாக விரிவாக ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளார்
#மக்களாட்சி
இந்தியாவைப் பொறுத்தவரை மாநில அரசு என்பது மத்திய அரசின் கட்டுப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். ஓட்டு போட்டு அதிகாரத்துக்கு வருவது என்பது கல்யாணம் முடிந்ததும் மருமகள் கையில் சாவிக்கொத்து வருவதுபோல. உண்மையான அதிகாரம் மாமனார் கையில்தான் இருக்கும். பீரோவில் இருக்கும் சில்லரை பணத்தை எடுத்து செலவழிக்க முடிவும் அவ்வளவுதான்.
1947 இந்தியா சுதந்திரம் பெற்றபோது 200 கோடிக்கு அதிபதியாய் இருந்தார்கள். டாப்டென் முதலாளிகள் இன்று பல மடங்கு அதிகரித்துள்ளனர். நூறு கோடி இந்திய மக்கள் சட்டைப்பையில் கிடைக்கும் சம்பளத்தை 100 கோடி உறிஞ்சு குழாய்கள் மூலம் சடக் சடக்கென்று உறிஞ்சி விடுகின்றனர்.
#ஆகவே
உண்மையான அரசியல் என்பது பொருளாதாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான். அதில் இரண்டு அரசியல் தான் இருக்க முடியும் இடதுசாரி மற்றும் வலது சாரி.
ஓட்டு போடுவது சட்டமன்ற பாராளுமன்ற நடவடிக்கைகளின் தான் அரசியல் என்று சிலர் நம்புகிறார்கள். அது சாக்கடை ஆகிவிட்டது, அரசியலே வேண்டாம், என ஒதுங்கிவிட்டால் இதுதான் முதலாளிகளுக்கு தேவை.
உரிமை, சுதந்திரம், சமத்துவம் என்று பேசுவது தான் அரசியல். அந்த அரசியலே வேண்டாம் என்று சொல்லிவிட்டால் எல்லாத்தையும் முதலாளிகளை பார்த்துக் கொள்வார்கள். இப்போது பன்னாட்டு முதலாளிகளும் கூட்டு சேர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அதிவேக அதிபயங்கர மின்னணு ஊடகங்கள் மூலமாக நம் மூளைகளை தகவமைத்துக் கொள்கிறார்கள்.
முதலாளிகளும், கார்ப்பரேட்டுகளும் என் மீது திணிக்கும் அரசியல் வெறுப்பு என்கிற கோரிக்கையை நிராகரித்து.. நமக்கான அரசியலை அடையாளம் கண்டு வெறும் பார்வையாளராக மட்டும் நின்றுவிடாமல் உற்சாகமுடன் செயல்பட ஒரு அரசை தேர்ந்தெடுப்போம். இது இன்றைய யுகத்தின் முழக்கம்.ஆகவே அரசியல் எனக்குப் பிடிக்கும்.
-தொடர்ந்து வாசிப்போம்
-தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment