[31/05, 9:29 pm] TNPTF MANI: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதொழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
உரை:தெய்வத்தை கூட தொழாமல் கணவனைத் தொழுபவள்,பெய் என்று சொன்னால் மழை பெய்யும்
கலைஞரின் குறளோவியம்:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினைவிட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி, பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணி கொள்பவளாவாள்.
அதாவது மழை பெய் எனச் சொன்னால் இயற்கை மழை அல்ல, அடிமை மழை. கணவனைத் தொழும் மனைவியும் அப்படிப்பட்ட அடிமைதான் எனும் உரை
-கலைஞர் எனும் தமிழ் ஆளுமை
[01/06, 7:01 am] TNPTF MANI: சிலர் டீ குடிப்பது
கீறி விஷ ரத்தத்தை உறிஞ்சுவது
போல் உள்ளது
-புதுமைப்பித்தன்
[01/06, 7:06 am] TNPTF MANI: நீ பெற்றுக்கொள்ளாமல் விட்டுச்சென்ற
எஞ்சிய பிரியங்களினால்
உருவாக்குவேன்
இன்னும் சில கவிதைகளை.
-சல்மா
[01/06, 7:07 am] TNPTF MANI: கடைசி நாள்
கரைக்கு வந்தோம்
அலை மட்டும் திரும்பிப் போயிற்று
-அகிலன்
[01/06, 7:07 am] TNPTF MANI: என்னைக் கேட்காமலேயே
எனது அறையினுள் வந்துவிடுகிறது
சப்தமற்ற
இந்த நண்பகல்.
பின் மதியவேளையில்
வெளியேறும் பொழுதும்
என்னிடத்தில்
சொல்லிக்கொள்வதில்லை.
கேட்காமலும், சொல்லிக்கொள்ளாமலும்
வரும்,போகும்
நண்பகலைக் காண
நீயும் ஒருமுறை
வா
எனது மகளே.
-அப்பாஸ்
[02/06, 6:29 am] TNPTF MANI: காதலை மறப்பதற்கு ஒரே வழி இன்னொரு காதல்
-பாலகுமாரன்
[02/06, 6:47 am] TNPTF MANI: உதிரும் மலர்கள்
முறைகளை ஒருங்கிணைப்பவர்கள்
ஒவ்வொன்றாக ஞாபகமூட்ட
பரபரப்புடன்
இயங்கிக் கொண்டிருந்தார்கள்
முடிந்ததும்
கூடத்திற்கு
அழைத்துவரப்பட்டார்கள்
வாழ்த்துச் சொல்ல
மேடையேறியவர்கள்
சோடியம் விளக்கொளியில்
மலர்ந்து
உதிர்ந்து கொண்டிருந்தார்கள்
புதிய மலர்களைத்
தேடித் தேடி
பகிர்ந்து கொண்டிருந்த இளைஞர்கள்
தாம் ரசித்த
தாமரை மொட்டை
பாதுகாப்பான அடுக்கில்
கனவுக்கென சேமித்துக் கொண்டார்கள்
ஒலிப் பெருக்கியின் இரைச்சல்
கூடத்தின் சப்தத்தோடு
பிணக்கு கொண்டிருந்தது
புகைப்படமெடுக்க
அழைக்காத கோபத்தில்
சாப்பிட மறுத்து
ஒரு உறவு முறை
வெளிநடப்பு செய்து கொண்டிருந்தது
மணம் கொண்டவர்களுடான
நெருக்கத்தைக் காட்டிக் கொள்ள
முனைந்த நிகழ்வுகள்
திரையோடான வாழ்க்கையை
நிதர்சனப் படுத்தியது
புனைவின் இறுதிக் காட்சியாக
மணம்கொண்டவர்களுக்கு
ஒரு கூட்டம்
திகட்ட திகட்ட
பந்தி பரிமாறியது
கடைசிப் பந்தியில் அமர்ந்த விழா அமைப்பாளர்கள்
விழாவின் கூட்டத்தையும்
விருந்தின் சுவையையும்
சிலாகித்துக் கொண்டிருந்தார்
தூர் நெளிந்த
ஈயப்பாத்திரத்தில்
மீந்த உணவெடுக்க வந்திருந்த
மேலாடையில்லாத பாவாடைச் சிறுமி
ஐஸ்கிரீம் மறுக்கப்பட்ட
புறக்கணிப்பின் வலியை
அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள்
- மண்குதிரை
[02/06, 9:23 am] TNPTF MANI: #சிகரம் இணையத்தில் வந்துள்ள எனது கீச்சுகள்
ச ப் பா ணி@manipmp
#தாத்தா இருந்தவரை கதை சொன்னார்.தாத்தா இறந்தபிறகு தாத்தாவே கதையானார்
#ஒன்பது முறை எழுந்திருக்க முயற்சி செய்தவனை பார்த்து படுக்கை சொன்னது..
இன்னும் அஞ்சு நிமிசம் தூங்கு என்று..!
#மேகம் கறுக்காததால்
மனிதர்கள் கறுத்துவிடுகின்றனர்#கோடைவெயில்
#முடி இல்லாதவர்க்கு
தலைக்கணம் இருப்பதில்லை!
#கத்தி எடுத்தவனுக்கு
கத்தியால்தான் கண்ணீர்
"வெங்காயம்"!
#உலகம் நம்மிடம் கேட்பது
"என்ன சாதித்தாய்"
உறவுகள் நம்மிடம் கேட்பது
"என்ன சம்பாதித்தாய்"!
#உறங்கும் நேரத்தை பொறுத்து, இரவின் நீளம் அமைகிறது
#ஸ்மைல் ப்ளீஸ்
சொல்லாமலே
சிரிக்க வைக்கிறது
"செல்போன்"
#உண்மையிலயே செத்துட்டானா என ஊர்ஜிதம் செய்யவே பலர் பிணத்தை உற்றுப்பார்க்கின்றனர்
-நன்றிகளுடன்
மணிகண்டபிரபு
[02/06, 9:25 am] TNPTF MANI: ஏன் எழுதுகிறீர்கள்?
வேறு என்ன? என்னுடைய டைப் ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதைப் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்.
-ஐஸக் அசிமோ
[02/06, 6:43 pm] TNPTF MANI: மழை?
பல சமயங்களில்
இளம் விதவை தன்
கணவனுடன் சரசமாடியதை
நினைத்து மகிழ்வது மாதிரி,
பால்ய கால மழையை
நினைக்க
வேண்டியிருக்கிறது
-அ.கா.பெருமாள்
No comments:
Post a Comment