[10/06, 6:35 am] TNPTF MANI: யார் மீதும் ஏறாமலிருக்க
எலுமிச்சைப் பழத்தின்
மீது ஏறிச்சென்றது லாரி
-P
[10/06, 7:31 am] TNPTF MANI: நாம் தேடும் புத்தகங்கள் நம்மையும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றன
-அ.முத்துலிங்கம்
[10/06, 7:43 am] TNPTF MANI: என்ன விசேஷம்? என்ன விசேஷம்?'
என்றெல்லாம் கேட்டு
ஆவியை வாங்காதீர்கள்.
உயிரோடு இருப்பதுதான் விசேஷம்.
-ப.பி
[10/06, 10:55 am] TNPTF MANI: நாம் வாழ்த்தி யாரும் வாழ்ந்துவிடப்போவதில்லை என்பது ஓர் ஆறுதல்.
-பேயோன்
[11/06, 6:45 am] TNPTF MANI: நிரம்பி வழிகிறது தனிமை
நிசப்தமாய் இருக்கிறது மனம்
பேசப்படாமல் கிடக்கின்றன வார்த்தைகள்
கேட்க்கப்படாமல் உள்ளது மௌனம்
-சூஃபி
[11/06, 6:48 am] TNPTF MANI: கவிதை என்பது இன்றின் ஒளி
கவிதையின் இளமை தீராதது. தேவதைகளுக்கு வயதாகாது என்று நம்புவதுபோல. வயாதாக வேண்டாம் என்று விரும்புவதுபோல. வயதாகி விட்ட தேவதைகள் பார்க்கச் சகிக்காதவையாக ஆவதுபோல. இளமை தீர்ந்தது கவிதை அல்ல; செய்யுள். கவிதை எப்போதும் நிகழ்காலத்தின் பொருள். நிரந்தரமான நிகழ்காலத்தின் பொருள். அதற்குள் நேற்றின் நிழலும் நாளையின் சாயலும் இருந்தாலும் அது இன்றின் ஒளி.
தன்னுடைய நிகழ் மனதை இன்றும் நிகழ்த்திக் கொண்டிருப்பவற்றைத்தான் 'ஆகச் சிறந்த கவிதைகள்' என்று நம்பவும் விரும்புகிறேன்.
# சுகுமாரன்
[11/06, 6:51 am] TNPTF MANI: இந்த உலகத்தை நாம் உருவாக்கவில்லை; ஆனால் இதற்கான அர்த்தத்தை நாம் தான் உருவாக்குகிறோம். எப்படி என்றால் – காட்டில் ஒரு மரம் வீழ்கிறது; அங்கே அதை கவனிக்க யாருமே இல்லை என்றால் அந்த மரம் வீழ்ந்ததில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு சத்தம் கேட்கும். அவ்வளவுதான். ஆனால் அந்த இடத்தில் அதை ஒரு மனிதன் பார்க்கிறான் என்றால் அந்த மரம் வீழ்ந்தது என்பதன் அர்த்தம் உருவாகிறது. அதைப் போலவே இரண்டு விதமான வாசகர்கள் இருக்கிறார்கள். ஒன்று, மாடு அசை போடுவதைப் போல வாசிப்பதை வாசிப்பதோடு மறந்து விடுவது. அந்தப் புத்தகம் அந்த வாசகரிடம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இன்னொரு வித வாசகர், தான் படித்ததைத் தன்னுடைய அனுபவத்தையும் ஆளுமையையும் கொண்டு மறு உருவாக்கம் செய்கிறார்.
- ஜீன் போல் சார்த்தர்
‘
-ரவி
[12/06, 6:52 am] TNPTF MANI: ஒருவன் திடீரென இறக்கிறான்
மொத்த பிரபஞ்சத்தையும்
அப்படியே போட்டது போட்டபடி
விட்டுப்போகிற அந்த தைரியம்
ஒவ்வொரு முறையும்
என்னைத் திடுக்கிட வைக்கிறது
-மனுஷ்யபுத்திரன்
[12/06, 6:54 am] TNPTF MANI: மாலைப்பொழுது
கூரை வழியாக வீட்டுக்குள் நுழைகிறது
என் மணிக்கட்டில் இருந்து
காலத்தைக் கழற்றுகிறேன்
மேஜையின் மீது அதை நேர்த்தியாக வைக்கிறேன்
சுதந்திர ஆசுவாசப் பெருமூச்சு விட்டு
கனவுகள் நினைவுகள் இவற்றின் துடுப்பை எடுத்து
இருண்ட கருமை சூழ்ந்த நீரில்
என் பார்வையின் தோணியை இழைக்கிறேன்.
பொழுது புலரும்பொழுது என் சிந்தனைத் தோணியில்
சூரியனைச் சுமந்து இங்கு கொண்டு வந்திருப்பேன்
அப்போது என் மணிக்கட்டில்
காலத்தின் கை விலங்குடன்
மாலை வரையிலும்
வெறுப்பூட்டும் அன்றாட வேலைகளை
நிகழ்த்துகிறேன்.
-மொழிபெயர்ப்பு கவிதை
[12/06, 7:50 am] TNPTF MANI: குனிந்து கொண்டே இருப்பவன்
சுமந்து கொண்டே இருப்பான்
-காசி ஆனந்தன்
[12/06, 7:06 pm] TNPTF MANI: இத்தனை வருடங்களாக
'சுட்டு விரல்' என்று நான்
சொல்லி வந்ததை,
'துப்பாக்கி விரல்' என்கிறது
கண் சுருக்கிக் குறிபார்க்கும்
இந்தச் சாய்கழுத்துக் குழந்தை.
பயமாக இருக்கிறது எனக்கு
காலத்தின் விஸ்வரூபம் கண்டு.
கல்யாண்ஜி.
[12/06, 9:34 pm] TNPTF MANI: சிரிப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது என்பதே நம் அக வீழ்ச்சியின் அடையாளம்தானே!
*சிறிது வெளிச்சம்
-எஸ்.ராமகிருஷ்ணன்
[12/06, 10:41 pm] TNPTF MANI: ஒவ்வொருத்தர் பத்தி எழுதியிருக்கார்..பழைய ஆளுமைகள் தான்.அண்ணாமலை,அழகப்ப செட்டியார் பத்தி தகவல்கள்.
உ.ம் என்.எஸ்.கே க்கு வசனம் எழுதமாட்டாங்களாம்.
திரு.வி.க ஒரு ஆண்,பெண் இரண்டும் நெடுநாள் வாழவில்லை.சீக்கிரம் இறந்துவிட்டன.
அலாவுதீனும் அற்புத விளக்கும் டி.எஸ்.பாலையா சொந்தப்படம்
*என்.எஸ் கே உட்ன் முக்தா சாப்பிட ஹோட்டலுக்கு போனாராம்.ஒருத்தரிடம் அறிமுகம் செய்யும்போது
இவர் தான் முக்தா,பீடி,வெற்றிலை சிகரெட் போடமாட்டார்.. அப்புறம் எதுக்காக நீ உயிர் வாழ்ற னு கேட்டிருக்கார்.
(இது பிரபலமான கவுண்டமணி நகைச்சுவை என்பது தெரியும்)
[12/06, 10:45 pm] TNPTF MANI: மனசும் ஒரு சுடுகாடுதான் போலிருக்கு.இல்லாட்டி இத்தன நெனப்பு வந்து பேயாட்டம் ஆடுமா?
-வைரமுத்து
[12/06, 10:46 pm] TNPTF MANI: உடம்பு செத்துப்போனா மண்ணுக்குள்ள பொதைக்கிறோம்.மனசு செத்துப்போனா அவன் அத உடம்புக்குள்ளயே பொதச்சிர்றான்
-வைரமுத்து
[12/06, 10:47 pm] TNPTF MANI: இன்னைக்கோ நாளைக்கோ நாங்களும் நறைக்கத்தான் போகிறோம் என்றன வெள்ளை முடிக்குள் ஊடாடிய கறுப்பு முடிகள்
-வைரமுத்து
[13/06, 7:02 am] TNPTF MANI: கற்றுக் கொண்டதோ
சொல்லித் தந்ததோ
போல இல்லை வாழ்க்கை
அது குழந்தைக் கதையில்
மந்திரவாதி எங்கேயோ
ஒளித்து வைத்த உயிர்.
-சுகுமாறன்
[13/06, 7:10 am] TNPTF MANI: ஒரு படைப்பாளி தான் என்ன படைத்தானோ அதனோடு மட்டுமே திருப்தியடைந்து விடுகிறவன் அல்ல. அவனுள் எப்போதும் தான் படைத்தவற்றின் மீதான அதிருப்தி இருந்துகொண்டே இருக்கிறது. அவன் மேலும் மேலும் அழகானவற்றை படைக்கலாமெனினும் எதுவுமே அவனை திருப்தியடைச் செய்வதில்லை. தான் இன்னும் அதிகம் கொடுத்திருக்க வேண்டும் என்றே அவன் நினைப்பான். தன்னுடைய படைப்பு அனைத்துமே இலக்கை அடையாமல் எட்டி நிற்பதை அவன் அறிவான். அவனுடைய இலக்கு எப்போதும் தூரத்திலேயே இருக்கிறது.
-ஓஷோ
[14/06, 6:49 am] TNPTF MANI: உண்மைகளை சோதிக்கிறவன் அவற்றைப் பொய்யாக்கும் வரை திருப்தியடையமாட்டான்
-ஜெயகாந்தன்
[14/06, 6:54 am] TNPTF MANI: விறகு அடுப்பில்
வீடு முழுக்க புகை மண்டுகிறது....
அனைவர் கோபமும்
அடுப்புக்கு மிக அருகில் இருக்கும்
அம்மாவை நோக்கியே போகிறது!
-இளந்தென்றல்
[14/06, 6:57 am] TNPTF MANI: கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதைகளை எப்போதும் ரசித்துப் படிப்பேன். இனிய உதயம் என்ற இலக்கிய இதழில் இந்த மாதம் அவர் எழுதிய கவிதையை நான் படித்து ரசித்தேன். அதன் ஒருசில பகுதிகள்:-கலைஞர்
அரசு ஊழியர்களே! அரசு ஊழியர்களே!
அஞ்சி அஞ்சி லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களே!
உங்களுக்கோர் நற்செய்தி; இனிமேல்
அஞ்சாமல் வாங்குங்கள்; சட்டமே அனுமதிக்கிறது!
ஆனால் எச்சரிக்கை; இருபது சதவீதத்திற்கு
மேலே போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
அப்படியே போனாலும் கவலையில்லை; நீங்கள்
தப்பாகச் சம்பாதித்த பணமே
உங்களை வெளியே கொண்டு வந்து விடும்!
தப்பே உள்ளே தள்ளும்;
தப்பே வெளியே கொண்டு வந்துவிடும்;
இதுதான் இந்நாட்டின் நீதி!
"தர்மம் வென்றது" என்கிறார்களே;
அதர்மம் அல்லவா வென்றிருக்கிறது என்று
குழம்புகிறீர்களா?
உங்களுக்கு விஷயம் தெரியவில்லை;
அதர்மம் "நியூமராலஜி"ப்படி தன் பெயரைத்
தர்மம் என்று மாற்றிக் கொண்டது!
உங்களுக்குக் கூட்டல் சரியாக வராதா?
அப்படியென்றால் நீதிபதியாகி விடுங்கள்!
அப்புறம் கூட்டல்தான், பெருக்கல்தான்!
அபாண்டமா பழி போடாதீங்க, மத்திய அரசு தலையீடு இதில் இல்லை; விலையீடுதான் நடந்தது!
நீதிபதிக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது;
ஏனெனில் அவருக்கிருந்தது வெளிநோக்கம் தான்;
வெளியே விடும் நோக்கம்!"
(இந்தப் பாணியில் அந்தக் கவிதை நீளுகிறது)
[14/06, 7:08 am] TNPTF MANI: வாசிப்பும் விமர்சனமும்!
வாசிப்பில் கண்டடையும் அறிதல் என்பது விண்ணை முட்டும் இமயத்தில் ஏறுவதற்குச் சமமானது. அதில் ஒன்றுபோலவே அனைவரும் ஏறவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் முயற்சியுடன் ஏறுபவர்கள் அனைவரும் அதன் சிகரத்தையே அடைகிறார்கள். ஒரு படைப்பின் வாசிப்பனுபவத்தை சொல்ல எப்போதும் வார்த்தைகள் போதுமானவை அல்ல. வாசிப்பின் உணர்வுகளை, எழுச்சிகளைச் சொல்ல வார்த்தைகள் உதவுகின்றன என்றாலும் சொல்ல முடியாமைக்கும் அந்த வார்த்தைகளே தடையாகின்றன. எனவே திரும்பத் திரும்ப பயன்படுத்திய வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
பெரும் படைப்புகளை வாசிக்கையில் ஆயாசம் ஏற்படுவது இயல்பு. அந்த ஆயாசத்திலேயே அந்தப் படைப்பின் சிறப்பை கண்டடையும் சூட்சுமம் மறைந்திருக்கிறது. ஆயாசம் தோன்றும் கணத்தில் மேலும் படிக்காமல் புத்தகத்தை மூடிவிடுவது நலம். மீண்டும் சற்றே இடைவெளியில் திரும்ப வாசிக்கும்போது ஆயாசம் மறைந்து புதுமையான ஒரு புரிதல், திறப்பு நிகழ்வதைக் காணலாம். வாசிப்பில் நம்மை பாதிப்பவற்றை குறிப்புகள் எடுத்துக்கொள்வதும், அது சம்பந்தமாக சொல்லப்பட்டவைகளை வேறு புத்தகங்களிலிருந்து வாசிப்பதும் வாசிப்பனுபவத்தை பன்மடங்காக பெருக்குவதற்கும் ஆயாசத்தைக் குறைப்பதற்கும் பெருமளவு உதவும்.
ஒரு படைப்பைக் குறித்து ஒரேமாதிரியான கருத்துகள் இருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு படைப்பு ஒரு சிலருக்குப் பிடிக்கலாம் வேறு சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். எனவே பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் சொல்வதையும், பிடிக்காதவர்கள் பிடித்தவர்கள் சொல்வதையும் கருத்தில் கொள்ளவேண்டியதில்லை. இருந்தாலும் மனித மனம் எப்போதும் எதிர்த்திசை நோக்கி நகரும் இயல்புள்ளதால் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் சொல்வதையும் பிடிக்காதவர்கள் பிடித்தவர்கள் சொல்வதையும் பரிசீலனைக்கு இயல்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று நம்பலாம். அதை அவர்கள் அப்போதைக்கு வெளிப்படுத்தாமல் இருக்கலாமே தவிர அவர்களின் ஆழ்மனம் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும். இது அந்தப் படைப்பை மீண்டும் வாசிக்கவும் அந்தப் படைப்பின் உண்மையான தரத்தை நிர்ணயிக்கவும் பயன்படும்.
ஒரு படைப்பை பிடிக்கும் என்பவர்கள் அதைப்பற்றி புகழ்ந்து பேசுவதும், பிடிக்கவில்லை என்பவர்கள் அதைப்பற்றி இகழ்ந்து பேசுவதும் வெகு இயல்பானது. பிடிக்கும் என்பவர்கள் அப்படைப்பின் நயம் பாராட்டுவதும், பிடிக்கவில்லை என்பவர்கள் நயமற்றவற்றை எடுத்தியம்புவதும் எப்போதும் விமர்சனங்களில் காணப்படும். எனவே இதைக் கருத்தில் கொண்டு இதுதான் சரியானது அல்லது அதுதான் சரியானது என்று குழம்ப வேண்டியதில்லை. என்னதான் விமர்சித்தாலும் ஒரு படைப்பின் உண்மை நிலையை காலம் காட்டிக்கொடுத்துவிடும். ஆக, மனிதர்களின் விமர்சனங்களை விடவும் ஒரு படைப்பின் மீதான காலத்தின் விமர்சனம் அசைக்க முடியாதது.
[14/06, 8:13 am] TNPTF MANI: தன்னை யாரென்று கண்டறிந்து கொடுப்பதற்கு ஒவ்வொரு வருத்தம் யாராவது தேவைப்படுகிறார்கள். ஒரு கடவுளைப்போல அவர்கள் பிரசன்னமாகி, ஏதோ ஒருவிதத்தில் நமக்கு நம் பாதையை அறிவுறுத்தி விடுவார்கள்.அது பாராட்டாகவும், அவமானமாகவும், அலட்சியமாகவும் இருக்கலாம்.அத்தகைய வழிகாட்டிகளை சீக்கிரம் கண்டடைந்தவர்கள் நிஜமான பாக்கியசாலிகள்
-நடிகர் சிவகுமார்
[14/06, 9:11 am] TNPTF MANI: 1. நடுத்தர வர்க்கத்தின் வாழ்வு ரெண்டுங்கெட்டான் வாழ்வு. விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் ஒரு வெறித்தனமும் உயிர்ப்பும் உண்மையும் இருக்கிறது.
2. கொலை தவிர ஏற்கனவே நான் எல்லாக் குற்றங்களையும் ஒருமுறை செய்தாகிவிட்டது.
3.தற்கொலை செய்துகொள்ளப் போன ஒரு மாற்றுத் திறனாளியைத் தேற்றி முடித்து ஆற்றுப் படுத்துகிறான் ஒரு பெருநோயாளி: "காலு இல்லேன்னு நினைச்சு நீ யாருக்கும் பாரமா இருக்காதே! இப்போ யாரோட துணையுமில்லாம எப்படி சாக வந்தியோ அந்த மாதிரி வாழப்போ"
4.மனுஷ உறவில், மனுஷ உப்பில், மனுஷ நாற்றத்தில் இப்படி ஒரு சுவையா?
5.என்னை கிறுக்கன் என்று சிலர் அழைத்தார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன்.
6.எது குறித்தும் வெட்கப்பட மாட்டேன்.வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்!
7.எம்மோடு நீங்கள் கூடி இருக்க வேண்டாம். உங்களோடு நாங்கள் கூடி இருக்கலாமல்லவோ?
- ஜெயகாந்தன்
கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படையில் எடுத்தாண்ட
மேற்கோள்கள்
[15/06, 7:04 am] TNPTF MANI: *காதல் போயின் காதல் போயின்*
இனிது காதலி திருமுகம் கண்டல்
இனிது காதலி மென்சொல் கேட்டல்
இனிது காதலி குறுஞ்செய்தி பார்த்தல்
இனிது காதலி எண்ணி இருத்தல்
இனிது காதலி கனவில் தோன்றல்
இனிது காதலி மெய்ப்புறம் தீண்டல்
இனிது காதலி வாய்ச்சுவை அறிதல்
இனிது காதலி முலைதலை சாய்த்தல்
இனிது காதலி அல்குல் தைவரல்
காதல் காதல் காதல்
காதல் போயின், காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
இனிது அவட்காய் மரித்தல் தானே!
பெற்றவர் உற்றவர் நட்பினர் அல்லால்
மரித்தால் எவர்க்கும் இல்லை சேதம்
1,24,66,39,478இல் ஒன்று
இருந்தால் என்ன? இறந்தால் என்ன?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!!
*-நாஞ்சில் நாடன்*
[15/06, 7:20 am] TNPTF MANI: காற்று!
வாதம், கால், வளி, மருந்து, வாடையே, பவனம், வாயுக்
கூதிர், மாருதம், மால், கோதை, கொண்டலே, உலவை, கோடை,
ஊதை, வங்கூழ், சிறந்த ஒலி, சதாகதி, உயிர்ப்புக்
காது அரி, கந்தவாகன், பிரபஞ்சனன், சலனன் காற்றே.
நூல்: சூடாமணி நிகண்டு (#47)
பாடியவர்: வீரமண்டல புருடர்
இவை அனைத்தும் காற்றைக் குறிக்கும் சொற்கள்:
வாதம்
கால்
வளி
மருந்து
வாடை
பவனம்
வாயு
கூதிர்
மாருதம்
மால்
கோதை
கொண்டல்
உலவை
கோடை
ஊதை
வங்கூழ்
ஒலி
சதாகதி
உயிர்ப்பு
அரி
கந்தவாகன்
பிரபஞ்சனன்
சலனன்
#உலககாற்றுதினம்
[16/06, 8:17 am] TNPTF MANI: அனுமதி
படுத்தபடுக்கையாய்
கீற்றுக்கொட்டகைக்குப் போன
பாட்டி
இறந்தபின்
ஈமச் சடங்குக்குத்தான்
வீட்டுக்கு வந்தாள்
-ந.சிவநேசன்
[16/06, 8:18 am] TNPTF MANI: என். சொக்கன்
நேற்றைக்கு என் மனைவி மகளிடம் ’மசமசன்னு நிக்காதே’ என்று சொல்ல, அவள் பதிலுக்கு ‘இதுக்கு இங்கிலீஷ்ல என்ன?’ என்று கேட்டிருக்கிறாள்.
எனக்கு அது தெரியவில்லை. ஆனால் அதற்குமுன்னால், ‘மசமச’வுக்குத் தமிழில் என்ன பொருள்?
’ஒண்ணுமே புரியலை, எல்லாம் மசமசன்னு இருக்கு’ என்று சொல்கிறோம், அதைச் சொல்லும்போதே ஒரு குழப்பமான, மசங்கலான பிம்பம் வருகிறதல்லவா?
மசங்கல், அதான் ...
அதற்கு என்ன பொருள்?
மயக்கம்/தடுமாற்றம் என்று பொருள். சமணமதத்தைச் சேர்ந்தோரை ‘மசங்கல் சமண்’ என்பார் திருஞானசம்பந்தர், புத்தி மயங்கியவர்கள் என்று பொருள்.
அந்திப்பொழுதுக்கு மசங்கல் என்ற பெயர் உண்டு, காலையும் இரவும் மசங்கியுள்ளதல்லவா?
கர்ப்பிணிப்பெண்ணுக்கு மசக்கை என்கிறோமே, அதுவும் இங்கிருந்து வந்த சொல்தான்.
’மசமசன்னு நிக்காதே’ என்பதில் உள்ள ‘மசமச’வை இரட்டைக்கிளவி என்று எடுத்துக்கொள்ளலாம். அப்போது அது ஒலிக்குறிப்பாகிவிடும், கலகலன்னு சிரிச்சான், விறுவிறுன்னு நடந்தான் என்பதுபோல மசமசன்னு நிக்காதே என்கிறோம்.
கலகல என்பதிலிருந்து கலகலப்பு, விறுவிறு என்பதிலிருந்து விறுவிறுப்பு என்ற சொற்களை அமைக்கிறோம், அதுபோல, மசமசவிலிருந்து மசமசப்பு.
இந்தச் சொல்லை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை, ஆனால் மதமத(ர்)ப்பு என்ற சொல் ஓரளவு பிரபலமானது.
மதமதப்பு என்றால், திமிர் என்று ஒரு பொதுவான பொருள் இருக்கிறது. ’கொழுத்துப்போய் மதமதன்னு திரியறான்’ என்கிறோம்.
ஆனால் அகராதியில் அதே சொல்லுக்கு ‘மதம்பிடித்துப்போயிருத்தல்’, ‘உணர்ச்சியின்றியிருத்தல்’, ‘என்னசெய்வது என்றே தெரியாமலிருத்தல்’ என்ற பொருள்களும் உள்ளன.
ஆக, ‘மசமசன்னு நிக்காதே’ என்றால், ‘என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நிற்காதே, வேலையைப் பார்’ என்று பொருள்.
இதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது?
எனக்குத் தெரியாது, நான் தமிழ்மீடியம்!
[16/06, 6:08 pm] TNPTF MANI: உன் பெயர் என்னில்
ஒரு கோடித் துளிகளில்
சுடர் விடுகிறது
உன்னை நிசப்தமாக
பிரதிபலித்தபடி
வியந்து கிடப்பதே
என் கடனென்று உணர்கிறேன்
உன் மௌனத்தால் அடித்தளமிடப்
பட்டிருக்கின்றன என் உரையாடல்கள் அனைத்தும்
உன்னுடைய அசைவற்ற
ஆழத்தின் மீது
சுழிக்கும் அலைகளே நான்
-ஜெயமோகன்
[16/06, 6:15 pm] TNPTF MANI: எப்பொழுதும் நாம் கடைப்பிடிக்க வேண்டியது...
தன்னை மீறி பிறர் மீது அன்பு செலுத்துவது.
இதன் பொருட்டு உயிர் போகுமென்றால் போகட்டும்.
பகை, வெறுப்பால் உயிர் போவதை விட அன்பினாலும், பாசத்தினாலும் போகட்டும்.
~ ஜெயகாந்தன்
[16/06, 7:44 pm] TNPTF MANI: பொம்மை
அழுக்காயிருக்கிறதென்று
மூக்கு சரியில்லையென்று
நிற்க வைத்தால்
விழுந்து விடுமென்று
இந்த கலர் சரியில்லையென்று
இதை விட
நல்லதாய்ப் பார்க்கலாமென்று
இது உன்னை விட
வயதில் பெரியவர்களுக்கென்று
ஒவ்வொன்றாய்
தவிர்த்த பின்
கடைசியாய்
ஒரு பொம்மையைக்
கை காட்டிச் சொன்னது
குழந்தை
“அப்பா
இந்த பொம்மை
விலை கம்மிதான்..!”
- க. ஆனந்த்.
[16/06, 7:51 pm] TNPTF MANI: உலகில் நீங்கள் அதிகம் கவலைப்படும் விஷயம் எது? சந்தோஷப்படும் விஷயம் எது?
நம் குழந்தைகள் சீக்கிரமாக இழக்கும் அறியாமை, நம் குழந்தைகள் சீக்கிரமாகப் பெறும் திறமை!
-சுஜாதா
[17/06, 6:56 am] TNPTF MANI: பழம் கொண்டு போக வேண்டாம்
இனிப்பு சேராமலிருக்கும்
–
இப்படித்தான் ஏ ப்ளாக்குல ஒருத்தருக்கு
என்று பயமுறுத்த வேண்டாம்
–
இன்ஷூரன்ஸ் இருக்குல்ல என்று
மகிழச் சொல்ல வேண்டாம்
–
ஆஸ்பத்திரி வாசனையே அலர்ஜியென்று
அலுத்துக்கொள்ள வேண்டாம்
–
ஆண்டவன் புண்ணியத்தில் தனக்கெதுவுமே
வந்ததில்லையென்று
வலி கூட்ட வேண்டாம்
–
அந்த நாள்ல வளைச்சுப்ப் போட்டிருப்பானென்று
நில மதிப்பு ஆராய வேண்டாம்
–
ஸ்கேன் என்னாச்சு என்று
ரிப்போர்ட்டைத் தேட வேண்டாம்
–
எல்லாம் கேட்டுக் கொண்டு பணம் புரட்டி
புரியாத மருந்துகள் வாங்கி வருபவருக்கு
வழி சொல்லி
அனபு போற்ற வரும்
மகனுக்கோ மகளுக்கோ
வாங்கித் தரவும்
ஆறாத காபி ஒன்று!
–
————————————–
-படித்தது
[17/06, 6:57 am] TNPTF MANI: கை வளையல்களில்
புதுவித டிசைன்களை
தேடினாள்!
பல மணித்துளிகளாய்..!
–
நெற்றிப்பொட்டு
பளிச்சென இருக்க
அலசினாள்
சில நாழிகைகளாய்!
–
காதணியும் கழுத்தணியும்
அணிந்து பார்த்து
வாங்கினாள்
அரை நாட்களாய்!
–
புது ரக சேலையை
தேர்வு செய்ய
கடைகளில்
தேடினாள், நாள் முழுக்க..
–
காலம் பூரா
வாழப்போகும்
ஆண் மகனை மட்டும்
பார்த்த நொடியில்
தேர்ந்தெடுத்தாள்
காதல் என்ற பெயரில்!
–
————————-
மல்லிகா ராம்
[17/06, 11:20 am] TNPTF MANI: அப்பாவாக இருப்பதன் கஷ்டம்
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
#HappyFathersDay
[17/06, 1:50 pm] TNPTF MANI: மம்பட்டிக்கு மசியல மண்ணு. பொறாம புடிச்ச மனசு மாதிரி இறுகிக்கெடக்கு கெட்டியா
-வைரமுத்து
(கள்ளிக்காட்டு இதிகாசம்)
No comments:
Post a Comment