[26/05, 9:28 pm] TNPTF MANI: கிராமத்து இரவு ஆழமானது.
நிஜமான நிசப்தம் நிலவுவது. பகலெல்லாம் தேய்ந்தவர்கள், பன்னிரண்டு மணி நேரம் உழைத்தவர்கள்,பகல் தூக்கத்தை தரித்தரமென்று சபிப்பவர்கள், இரவில் முற்றும் மறந்து தூங்குவார்கள் மூச்சுவிடும் பிணங்களாய்
-வைரமுத்து
[26/05, 9:50 pm] TNPTF MANI: நீ இப்போது வரவில்லை
என்றால்
எப்போதேனும் வரக்கூடும்
என்று நினைத்துக்கொள்வதைத்தவிர
கடந்துசெல்ல ஒரு பொழுதோ
சாத்திக்கொள்ள ஒரு கதவோ
எனக்கில்லை...
-மனுஷ்யபுத்திரன்
[27/05, 7:40 am] TNPTF MANI: 'என்னைப் பொருத்த வரை..' என்பது சரியா?
'என்னைப் பொறுத்த வரை..' என்பது சரியா?
இரண்டும் பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறதே.
**
எல்லாச் சொற்களுக்கும் தோற்றுவாயாவன “கட்டளைப் பொருள் தரும் வினைவேர்கள்” என்பதை நாம் அறிவோம்.
பொருத்தவரை, பொறுத்தவரை - என்பனவற்றிலுள்ள வரை என்பது இங்கே வழக்குக்குப் பொது என்பதால் அவற்றை நீக்குவோம். இப்போது மீதமிருப்பவை எவை ? பொருத்த, பொறுத்த.
இவ்விரண்டிலும் வினைவேர் எது ? கட்டளைப்பொருள் தரும் வினைவேரிலிருந்தே வினையின் பல சொற்கள் தோன்றுகின்றன, இல்லையா ?
பொருத்த என்பதில் வினைவேர் ‘பொருத்து’
பொறுத்த என்பதில் வினைவேர் “பொறு”
பொருத்து, பொறு - இரண்டும் கட்டளைப்பொருள் தருகின்றன. இது ‘வரை’ என்ற பெயர்ச்சொல்லைப் பெற பெயரெச்சம் ஆகவேண்டும், இல்லையா ? கொடுத்த கடன், படுத்த படுக்கை, எடுத்த பொருள், தடுத்த கை - இவையெல்லாம் பெயரெச்சங்கள்.
அவ்வாறே பொருத்த, பொறுத்த என்று பெயரெச்சமாகி வரையைச் சேர வேண்டும்.
இப்போது நீங்களே சொல்வீர்கள், பொருத்து என்ற வினைவேர் பொருத்த என்ற பெயரெச்சம் ஆகாது. பொருத்திய என்றுதான் ஆகும். பொருத்திய குழாய், பொருத்தியபோது என்றுதான் வரும்.
ஆனால், பொறு என்ற வினைவேர் பொறுத்த என்ற பெயரெச்சமாகி நிற்கும். பொறுத்த மீன்கொத்தி, பொறுத்த மனைவி, பொறுத்தவரை என்று ஆகும்.
ஆக, பொருத்த என்ற சொல்லாக்கம் தவறு. பொறுத்த என்பதே பொருள்தக்கவாறு ஆகிறது. பொறுத்தவரை என்பதே சரி.
என்னைப் பொறுத்தவரையில் என்பதற்கு “என்னைப் பொறுப்பாக்கிக் கூறுக என்று பணிப்பீர்களானால்...’ என்பது விரிந்த பொருள்.
-மகுடேசுவரன்
[27/05, 7:57 am] TNPTF MANI: தமிழ் எழுத்தாளன் – 706
‘
‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்’ என்பது வெறுமனே ஒரு கதையின் முடிவல்ல. நம் கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையே உள்ள நீண்ட இடைவெளியை, நம் மதிப்பீடுகளின் பொய்மையை நம் முகத்தில் ஓங்கி அடிக்கும் கலகக் குரல்தான் இது.
பொன்னகரம் மதுரை நகரத்திலுள்ள ஒரு பகுதியின் உண்மைப் பெயர் என்பார் ரகுநாதன். இருக்கலாம். ஆனால், கதையில் அது ஒரு உருவகமாகவே செயற்படுகின்றது. நம் புனிதங்களின் உருவகம். ஈவிரக்கம் இல்லாமல் தன் குத்தலாலும் கிண்டலாலும் நம் மனதில் சிருஷ்டித்துள்ள பொன்னகரங்களை உடைப்பதில் புதுமைப்பித்தன் ஒரு கலகக்காரன்தான். கடவுளரின் பிம்பங்களும் இதனுள் அடங்கும். கந்தசாமிப் பிள்ளையின் முன் கடவுள் சிறுத்துப் போகிறார். ராமனைத் திரஸ்கரித்து அகலிகை மீண்டும் கல்லாகிறாள். புதுமைப்பித்தனின் பெரும்பாலான கதைகள் வெவ்வேறு வகையில் இப்பொன்னகரங்களின் உடைவுதான்.
புதுமைப்பித்தன் எல்லாவற்றையும் போட்டு உடைத்தாரே தவிர அதற்கு மாற்றீடாக எதனை முன்வைத்தார் என்ற கேள்வி எழுவதுண்டு. புதுமைப்பித்தனுடைய இலக்கியக் கோட்பாட்டில் மாற்றீடுகளுக்கு இடம் இல்லை. ‘முடிவில் தர்மத்துக்கு வெற்றி கொடுக்க வேண்டியது கலைத்தொழிலில் ஈடுபடுகிறவனுடைய கடமை’ என்பதைப் புதுமைப்பித்தன் ஒப்புக்கொள்ளவில்லை. ‘தர்மம் இலக்கியத்தில் மட்டும் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதால் வாழ்வு அப்படியேயாய் விடுமோ’ என்று கேட்கிறார் அவர். ‘மகா இலக்கியங்கள், பலவித கோணங்களிலிருந்தும் வாழ்வை நோக்குவதைத் தடைசெய்வதற்காகக் கட்டம் போட்டு மாட்டப்பட்ட படங்கள் அல்ல’ என்பது அவருடைய அழுத்தமான கருத்தாகத் தோன்றுகின்றது. இலக்கியம் வாழ்வைப் பலவித கோணங்களிலிருந்து புரிந்துகொள்வதற்கான சாதனமே என்பதைப் புதுமைப்பித்தன் நன்கு உணர்ந்திருந்தார் என்பதை நாம் இதன்மூலம் அறிந்துகொள்கிறோம். புதுமைப்பித்தனின் எழுத்துகளின் மூலம் நாம் வாழ்வை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதே முக்கியம். வாழ்க்கையின் இருண்ட பகுதிகளின் மீதே புதுமைப்பித்தன் தன் பார்வையைச் செலுத்தியிருக்கிறார். நமது மதிப்பீடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள அவரது சித்திரிப்பு நமக்கு உதவுமானால் அதுவே அவரைப் பொறுத்தவரை அவரது கலையின் வெற்றி எனலாம். தமிழ்ப் புனைகதை வரலாற்றில் முதல்முதல் பண்பாடு பற்றிய முற்கற்பிதங்களை உடைத்துக் கொண்டு நடுத்தர அல்லது கீழ்மட்ட மக்களின் வாழ்வின் உண்மையான முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் புதுமைப்பித்தன்தான்.
- எம்.ஏ.நுஃமான்
[27/05, 11:36 am] TNPTF MANI: கடவுள் மீது பயம் இல்லை. அவரை நம்புபவர்களின் மேல்தான் பயமே!"
-ஸ்டீபன் ஹாக்கிங்
[27/05, 12:25 pm] TNPTF MANI: கீழடி விசிட்
*மணி
நேற்று மதுரை அருகில் உள்ள கீழடிக்கு 25 பேர் சென்றிருந்தோம்.மதுரையிலிருந்து திருபுவனம் சிலைமான் வழியாக,.ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சிறிய ஊர் கீழடி.
அதை ரோடு னு சொல்லமுடியாது.குலுங்கி குலுங்கி சென்று இறக்கிவிட்டது.பிறகு நடை பயணம் தான்.கருவேல முள்ளை கடந்து போனால் அழகான பொள்ளாச்சி தென்னந்தோப்பு போல அழகிய ரம்மியமான சூழல்.
தொல்லியல் ஆய்வு நடைபெறுவதால் உள்ளே போட்டோ எடுக்க அனுமதி இல்லை.தூரத்திலிருந்துதான் எடுத்தோம். உள்ளே சென்றால் ஓடுகள் சேகரித்து வைத்துள்ளனர். சில குழிகள் மழை பெய்ததால் பாதுகாப்புக்காக மூடி வைத்துள்ளனர். முன்பு தோண்டிய இடங்களில் கிடைத்த பொருட்களை எல்லாம் ஆய்வுக்கு அனுப்பி அதனை மூடிவிட்டு தற்போது இங்கு தோண்ட ஆரம்பித்துள்ளனர். இதில் ஓடுகள், பழங்கால பானை, செங்கல் கிடைத்துள்ளது.மேலும் சில எலும்புகள், குழந்தைகள் விளையாடிய சில்லு, பாசிகள் கிடைத்துள்ளனர்.இவை அனைத்தும் சங்ககாலத்தை சேர்ந்தவை.பானை ஓடுகள் ஒரு புறம் சிவப்பும், வெளியே வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கிறது.
*சுற்றிலும் தென்னந்தோப்புகள் இருப்பதால் சிலர் நிலத்தை ஆய்வுக்கு கொடுக்க தயங்குகின்றனர். தென்னையின் சல்லிவேர் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர்
*ஒருசிலர் விழிப்புணர்வுடன் நிலத்தை தோண்டி எடுத்தவுடன் மூடிவிடுவதாக ஒப்பந்தத்துடன் பணிகளை மேற்கொள்கின்றனர்
*அங்கு உள்ள மக்களே ஆய்வு வேலைகளான்ச் குழி தோண்டுவது, மண்ணை பிரிக்கும் வேலைகளை செய்கின்றனர்.
*அன்றாடம் எடுக்கும் தொல்லியல் பொருட்களை கவரிட்டு தேதி மற்றும் நேரம் எழுதி ஆய்வுக்கு அனுப்பிவிடுகின்றனர்.
*தஞ்சை பல்கலை தொல்லியல் ஆய்வாளர்களின் மேற்பார்வையில் பணி தொய்வின்றி நடக்கிறது
*வைகையிலிருந்து ஐந்து கி.மீ தொலைவிலும், இவ்விடத்திற்கு ஓடையும் ஏரியும் இருப்பதால் நீரினால் மூழ்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது
*பல ஆண்டுகளாக தேடி இவ்விடத்தை கண்டறிந்துள்ளது தொல்லியலாளர்களின் பணிக்கு கிடைத்த ஊக்கம்.இரவிலும் பகலிலும் தக்க பாதுகாப்பு இருக்கிறது.
*மற்ற பகுதிகளை காட்டிலும் மேடான பகுதிகளைதான் ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.
*கடவுள் சிலைகள் கிடைத்தால் காலத்தை வரையறுக்க ஏதுவாக இருக்கும் என கருதுகின்றனர்.
*சதுர வடிவில் ஆழமாய் தோண்டுகின்றனர். சமநிலை எல்லை என அவர்கள் நினைத்த ஆழம்வரை தோண்டுகின்றனர்
-விரைவில் தேவையான தடயங்கள் கிடைத்தால் தமிழர்களின் தெற்கத்திய நாகரிகம் உலகளவில் பேசப்படும்.
அந்நாளுக்காக காத்திருப்போம்
-மணிகண்டபிரபு
[28/05, 7:05 am] TNPTF MANI: ஈகோ பிரச்சனையில்
முட்டின வார்த்தைகளில்
போடா மயிரென்று
பிரிந்த நண்பனை
முந்தாநாள் மார்க்கெட்டின்
மூலையில் சந்தித்தேன்
அவன் கொஞ்சம் சிரித்தானோ..?
நானும் சிரித்திருக்கலாமோ ?
'எல்லாம் மறந்தாச்சு
எப்படிடா இருக்கே ?' வென
நேசமாய் கேட்டிருக்கலாமோ?
கிட்டேப்போய் கைகுலுக்கி
காபிக்கடைக்குக்
கூட்டிப்போய்
வயித்து வலி
இப்பவும் வருதாவென
வாஞ்சையாய் விசாரித்திருக்கலாமோ ?
கர்வத்தை அணிந்து கொண்டு
கற்பனையில் நொந்து கொண்டு
இப்போது அவனும்
இப்படித்தான்
இமை நனைய
கவிதை
எழுதிக்கொண்டிருப்பானோ..?
- பட்டுக்கோட்டை பிரபாகர்.
[28/05, 7:07 am] TNPTF MANI: அனுபவம் கொடுக்கும் கடைசி பாடம் முடிவை நம்மிடமே விட்டுவிடுவதுதான்.
-படித்தது
[28/05, 7:29 am] TNPTF MANI: ஜனநாயகம் என்றால் அது ஒரு சகிப்புத் தன்மை.நமக்கு இணங்கிப் போவோருடன் சகித்துக் கொள்வது மட்டுமல்ல, நம்முடன் ஒத்துப் போகாதவர்களுடன் கூட சகித்துக் கொண்டு போதலே ஜனநாயகம்
- நேரு
[28/05, 11:54 am] TNPTF MANI: அக்காவின்
குழந்தைப் பருவத்தை
தங்கையோ தம்பியோ
வந்து சீக்கிரமே
துரத்தி விடுகிறார்கள்..!
-சம்பத்
[28/05, 1:32 pm] TNPTF MANI: தயவு செய்து
உங்கள் நிபந்தனைகளை முன்விதியுங்கள்
கடைசி நிமிடத்தில்
கட்டாயப்படுத்தாதீர்கள்
மண்டியிடவோ மறுதலிக்கவோ
யோசிக்க வேண்டும் நான்
-விக்ரமாதித்தன்
[28/05, 2:21 pm] TNPTF MANI: தல குளுந்திருக்கணும்:பாதம் சூடாயிருக்கனும் அதான் நல்ல மனுச உடம்பு
-வைரமுத்து
[28/05, 8:17 pm] TNPTF MANI: கவிழ்ந்து கிடக்கையில் பேதங்கள் இல்லை
சீட்டுகளிடையே.
-சாம்ராஜ்
No comments:
Post a Comment