[29/05, 6:33 am] TNPTF MANI: தமிழ் வாழ்க்கை
அழைப்பு மணிகள்
வேலை செய்யாவிட்டாலும்
வந்த யாரும் திரும்பிப் போனதில்லை
குளியலறைக்குத் தாழ்ப்பாள் இல்லாத
இந்த ஒன்றரை வருடத்தில்
யாருடைய அந்தரங்கத்திற்கும்
அபாயம் நிகழ்ந்துவிடவில்லை
நாற்காலியின் ஒடிந்த கால்
சிறு சமன் குலைவுக்குமேல்
விருந்தாளிக்கு
எந்த அவமதிப்பையும் ஏற்படுத்தாது
ஒரு வாரமாய்
பிரேக் சரியில்லாத வாகனத்தில்தான்
கடந்து திரும்புகிறேன்
தெய்வம் துணையிருக்கும் இந்த நகரத்தை
அடிவயிற்றின் இடப்பக்க வலி
இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது
குறிப்பிட்ட கோணத்தில்
கொஞ்சம் படுத்துக் கொண்டால்
சமாளித்துக் கொள்ளலாம்
எல்லா இடத்திலும்
சீர்படுத்த வேண்டியவை ஏராளம்
என்றாலும் சிக்கலற்றது
தமிழ்வாழ்க்கை
-மனுஷ்யபுத்திரன்
[29/05, 6:38 am] TNPTF MANI: எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து!”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ?
-கபிலன்.
[29/05, 6:55 am] TNPTF MANI: கண்டெடுத்தோம்...
அப்படியும்
கவலைப்படுகிறோம்...
அய்யோ
யார் தொலைத்தாரோ
என்று..!”
-ராஜசுந்தரராஜன்.
[29/05, 8:12 am] TNPTF MANI: இந்த
வாழ்க்கை கிணற்றில்
யார் தூக்கிப் போட்ட
கற்கள் நாம்?
-கலாப்ரியா
[29/05, 11:46 am] TNPTF MANI: ஏக்கம்
இரண்டாம் முறையாய்
குழம்பு ஊற்றச் சொல்லி
ருசி பார்த்தாயிற்று !
உறிஞ்சிக் குடித்தே
ரசம் முழுவதும்
காலியாகிப் போனது !
பொரியல் தீர்ந்ததால்
ஊருகாயோடு...
மோர்ச்சாதமும் முடிந்தது !
எல்லாம் ருசிபார்த்து
ஏப்பமிட்ட நீ
எப்போதும் போல
"சாதம் குழைவு,
குழம்பில் உப்பில்லை
கறி போதாது"
குற்றப்பத்திரிகை
வாசித்து விட்டு
குப்புறப் படுத்துக் கொண்டாய்.
இப்படி தினந்தோறும்
சமையலில் நீ ...
குறைகாண்பதற்காக,
ஒருபோதும் நான்
கலங்கியதே இல்லை !
மனைவியென்ற முறையில்
உன்னிடம் நான்
எதிர்பார்ப்பதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான் !
ஒப்புக்காக ஒருமுறையாவது
கேட்கமாட்டாயா..!
நீ சாப்பிட்டாயா என்று !
-படித்தது
[29/05, 6:21 pm] TNPTF MANI: சார் கொலையும் செஞ்சுட்டு தைரியமா கடிதம் அனுப்பி இருக்கான் பாருங்களே
ஓகே அவன் கடைசியில் கையெழுத்துப் போட்டிருக்கான் பார்த்தீங்களா
ஆமா சார் இப்படிக்கு ஜீவராசி
உங்களுக்கு என்ன புரியுது
என்ன சார் இது ஜீவராசின்னா ஏதாவது உயிர் இனத்தின் பெயரா ஒண்ணும் புரியல சார்
அதை மாற்றி எழுதிப் பாருங்க
வராசிஜீ
ராவஜீசி
வசிஜீரா
சிவராஜீ
ஓகே ஐ காட் இட் நம்ம ஆள் பேரு சிவராஜா கூட இருக்கலாம்
சிவராஜ் ங்கிற பேர்ல பழைய குற்றவாளிகள் இருந்தா அவங்கள பத்தின டீடெய்ல கலெக்ட் பண்ணுங்க
*சுஜாதா
[29/05, 9:56 pm] TNPTF MANI: என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
# விக்கிரமாதித்யன்
ரத்தத்தில்
கை நனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்த வைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம்
தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகின்றவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப்
பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழ நேர்கிறது எனக்கு
கூட்டிக்
கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக்
கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக் கொடுப்பவர்களின்
கருணையில் காலங்கழிக்க நேர்கிறது எனக்கு
முதலில்
என்னை
நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
[30/05, 6:35 am] TNPTF MANI: குடிநீரென்பது
ஓடையாயிருந்தது
நதியாயிருந்தது
பின்
ஏரியாயிருந்தது
குளமாயிருந்தது
பின் ஒவ்வொரு வீட்டிலும்
கிணறாயிருந்தது
பின் சுருங்கி
ஆழ்துளைக் கிணறானது
பின்
பன்னாட்டு நிறுவனத்தின்
வியாபாரப் பொருளாகி
ஒரு லிட்டரில் அடைபட்டது
பின் அதுவும் சுருங்கி
அரை லிட்டரானது
இப்போது அதுவும் சுருங்கி
200 மிலி 100 மிலி என்றானது
அடிப்படைக் குடிநீர்
இனி சொட்டு மருந்தெனச்
சொட்டப்படுமோ?
-சௌவி
[30/05, 6:36 am] TNPTF MANI: நிதானம்
எவ்வளவு பரபரப்பான
சாலையிலும் மிதிவண்டி
ஓட்டும் ஒருவன்
உலகத்தை வைத்திருக்கிறான்
நிதானமாக"!
-மணிகண்டபிரபு
[30/05, 6:36 am] TNPTF MANI: நடக்கும் கால்களில்
வேகமும்
எதிர்ப்படுவோரின்
கரங்களிலோ
தோள்களிலோ
முட்டிக்கொண்டும்
கடக்கும் நபர்களின்
அசைவுகளிலும்
நகரும் பேருந்து
ஒலிப்பான்களின்
சத்தத்திலும்
பேருந்தினுள்ளே
ஒலிக்கும்
பண்பலையின் இரைச்சலிலும்
சத்தமின்றி
முட்டிமோதி
மௌனமாகிப் போகிறது
அழுக்குச் சேலை கட்டியிருக்கும்
அந்த யாசனைக்காரியின்
மடிக் குழந்தை
அழுகை
– இ . இளையபாரதி
[30/05, 6:37 am] TNPTF MANI: தமிழன்பன்
பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாகிட முடியாது :
பத்து
நதிகளோடு பழகி
நீங்கள்
ஒரு நதியாக முடியாது :
பத்துப்
புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள்
பதினோராவது புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள் .
- ஈரோடு தமிழன்பன்
[30/05, 6:38 am] TNPTF MANI: கடும்புதர் விலக்கிச் சென்று
களாப் பழம் சேர்ப்பார் போல
நெடும்புவி மக்கட்கான
நினைப்பினிற் சென்று
பலப்பல நுணுக்கம் சேர்ப்பார்
படித்தவர் அவற்றையெல்லாம்
கொடும் என அள்ளி உன் தாள்
கொண்டார்க்குக் கொண்டு போவாய்
-பாரதிதாசன்
(அதாவது படித்து அறிந்த அனுபவங்களை ஷேர் செய்யுங்கள் னு சொல்றார்)
[30/05, 6:45 am] TNPTF MANI: தூக்கத்தில் நடக்கும்
வியாதி
கூர்காவுக்கு!
-மணி
[30/05, 6:38 pm] TNPTF MANI: எப்போதும் தனியாகவே இருக்கும் இந்த மனத்திற்குத் தெம்பூட்ட நான் எதையாவது கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதுகேட்கும் எல்லாவற்றிற்கும் பதிலாக வேறு ஒன்றைத் தரமுடியும் அளவிற்கே இருக்கிறது வாழ்க்கை.
- கண்டராதித்தன்
[30/05, 6:44 pm] TNPTF MANI: நான்குகட்டு ஓடுவேய்ந்த
ஏகாம்பரம் இல்லாத வீட்டில்
ஏகாம்பரம் ஏகாம்பரம் என்றேன்
ஏகாம்பரம் இல்லாத
வீட்டிலெல்லாம் மூதேவி
உன் கட்டைக்குரல்தான் முட்டுகிறது
கேடு ஏகாம்பரத்திற்கா ஏகாந்தத்திற்கா
என்றது உள்ளிருந்து வந்த குரல்.
-கண்டராதித்தன்
[30/05, 6:49 pm] TNPTF MANI: நல்லவனாயிருப்பதைக்
காப்பாற்றத் தன் வாழ்நாளைச்
செலவழிக்கிறான் ஒருவன்.
அதையொரு பன்னீர்க்கரும்பைப்போல்
கடித்துத் துப்பிச்செல்கினாறன் மற்றொருவன்.
-கண்டராதித்தன்
[30/05, 6:55 pm] TNPTF MANI: மனக் குழப்பத்திற்கு மருந்து இருக்கிறது. ஒன்று தன்னை மறக்கும் அபார தெய்வபக்தி. அதாவது கேள்வி கேட்காமல், ஆவேசப்படாமல் ஆடுகள்போல எல்லாம் அவன் செயல் என்று இருப்பது. இன்னொன்று மூளை சலித்து களைத்துப்போகும்படி அதற்கு வேலை கொடுப்பது. இப்படி இரண்டில் ஒன்றைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்தால்தான் நம்மால் தப்ப முடியும்”
-புதுமைப்பித்தன்
[30/05, 7:01 pm] TNPTF MANI: “சம காலத்தின் மீது - இன்றைக்கு நடந்துகொண்டு இருக்கும் ஒரு விஷயம் சரியானதா, தவறானதா என்று முடிவெடுக்கக் குறைந்தது 20 வருஷங்கள் தேவைப்படுகின்றன. அதற்குள் அடுத்த சம காலம் வந்துவிடுகிறது
-அசோகமித்ரன்
[30/05, 7:52 pm] TNPTF MANI: மழைக்கு பின்னான காற்றில்
தலை துவட்டுகிறது மரம்!
-மித்ர தேவன்
[31/05, 7:55 am] TNPTF MANI: "பெயரில் என்ன இருக்கிறது.
நனைப்பதற்காகப் பெய்தால்
மழை
நினைப்பதற்காகப் பெய்தால்
சந்தோஷம்.
அவ்வளவுதான்"
- மணி சண்முகம்.
[31/05, 9:03 pm] TNPTF MANI: நீண்டகாலம் நண்பனாக இருந்து
விரோதியானவனை வெளியூர்
வீதியில் சந்திக்க நேர்ந்தது
பதற்றத்தில்
வணக்கம் வணக்கம் என்றேன்
அவன் நடந்துகொண்டே
கால்மேல் காலைப்
போட்டுக்கொண்டே போனான்.
இந்த முறை
உன்னை உறுதியாக அறுத்து விட்டேன்
இனி எங்கேனும்
வழியில் கண்டால் தலையை ஆட்டிக்கொள்வதென
எப்படி தலையாட்ட வேண்டுமென்று
ஆட்டி ஆட்டிப்பார்ப்பது
இது 119 ஆவது முறை
-கண்டராதித்தன்
[31/05, 9:29 pm] TNPTF MANI: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதொழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
உரை:தெய்வத்தை கூட தொழாமல் கணவனைத் தொழுபவள்,பெய் என்று சொன்னால் மழை பெய்யும்
கலைஞரின் குறளோவியம்:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினைவிட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி, பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணி கொள்பவளாவாள்.
அதாவது மழை பெய் எனச் சொன்னால் இயற்கை மழை அல்ல, அடிமை மழை. கணவனைத் தொழும் மனைவியும் அப்படிப்பட்ட அடிமைதான் எனும் உரை
-கலைஞர் எனும் தமிழ் ஆளுமை
No comments:
Post a Comment