[01/07, 8:52 am] TNPTF MANI: உணர்ச்சிகளின் கொதிநிலையில் சொற்கள் சினைப்படுகையில் கவிதைகள் உருவாகின்றன
-பா.அகிலன்
[01/07, 5:24 pm] TNPTF MANI: மனிதன் தன்னைப் பற்றிய நல்ல அபிப்ராயங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுகிறான்
#நகுலன்.
[01/07, 5:41 pm] TNPTF MANI: தினமொருமுறை சாவு வரும்.அதை கண்டுகொள்ளாது இருப்பதில் இருக்கிறது வாழ்வு.
-படித்தது
[02/07, 6:37 am] TNPTF MANI: சர்க்கரைநோயாளிகளுக்கு மருத்துவர் அளிக்கும் அறிவுரை காலை மாலை நடை. இரவெல்லாம் சேர்த்த சர்க்கரைச்சத்தை காலையில் நடந்து எரிக்கவேண்டும். மாலையில் அவ்வாறு பகலில் சேர்த்ததை எரிக்கவேண்டும். எரித்தழிக்கப்படாத சர்க்கரை செல்களில் சேர்ந்து உடலை செயலற்றதாக்குகிறது. நோயுற்று அழியச் செய்கிறது. சிந்தனையிலும் இதுவே. கல்வி என்பது செயலாக, அனுபவமாக மாறுவதே எரிந்தழிதல் என்கிறேன். அவ்வாறு ஆகாத கல்வி நோயுறுத்துவது.
அதையே தன்னறம் என்று சொல்கிறேன். எதில் உங்கள் அகம் தன்னைக் கண்டுகொள்கிறதோ, எதில் முழுமையாக ஈடுபடமுடிகிறதோ, எதில் நம்பிக்கை நிலைகொள்கிறதோ அதில் முழுத்தீவிரத்துடன் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது. அது ஒருபோதும் எதிர்மறைச் செயலாக இருக்காது. கசப்பையும் காழ்ப்பையும் அவநம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டிருக்காது. சலிப்பையும் துயரையும் அளிக்காது. மகிழ்ச்சியையும் வாழ்ந்தேன் எனும் நிறைவையும் அளிக்கும். அது ஒருபோதும் உலகியல் நலன் கருதியதாக, சுயநலம் சார்ந்ததாக இருக்காது. அதைக் கண்டுகொண்டு அதில் ஈடுபட்டு அதனூடகாக் கற்று உணர்ந்து அமைபவர்கள் அன்றி பிறர் ஏதேனும் உளக்கோணல் நோக்கிச் செல்வார்கள். அதுவே நோய்.
செயலினூடாகவே நாம் நமக்குரியதைக் கற்க முடியும். செயலாற்றுவதற்காக நம்மை தகுதிப்படுத்திக்கொள்ளவே வெளியே கற்கிறோம். செயலாக மாறாத கல்வி நோயுறுத்துவதே. அன்றாடவாழ்வென மாறாத ஒரு துளிக் கல்வி எஞ்சியிருந்தாலும் அது சுமைதான், நோய்தான்.செயலாக மாறாத சிந்தனை வெறுமே மூளையில் ஒரு முள் என இருந்துகொண்டிருக்கும். அதை வருடி வருடி பெரிதாக்கிக்கொண்டிருப்பதே ஒருவகை இன்பமென ஆகும். ஒருகட்டத்தில் சலித்து அப்படியே அடுத்ததுக்குக் கடந்துசெல்வோம். இன்று கணிசமான நவீன ஆன்மிகக் கருத்துக்கள் இப்படி ஆகிவிட்டிருக்கின்றன
செயலென்பது கண்மண் மறந்த அலைவாக இருக்காது. செயல் முழுமையாக செய்யப்பட்டால் ஒவ்வொரு படியிலும் நமக்குக் கற்பிக்கும். நம்முள் ஒன்று விலகிநின்று அதை நோக்கிக்கொண்டுமிருக்கும். நாம் செயலாற்றும்தோறும் அதிலிருந்து விடுபடவும் செய்வோம். தோணி அதை நாம் துடுப்பிட்டுச் செலுத்துந்தோறும் அக்கரைக்கே கொண்டுசெல்கிறது. நாம் தோணியிலிருந்து இறங்கி மேலே செல்லும் இடத்துக்கு. செயலே ஒருவகை தியானம். தியானம் செயலின் ஒருபகுதியாகக் கனியுமென்றால் அது அடுத்த நிலை. ஆக, கல்வி எதுவானாலும் அது செயலுக்கு உதவுவதாக, செயலாக மாறுவதாகவே இருக்கும்
-ஜெயமோகன்
கட்டுரையிலிருந்து
[02/07, 6:41 am] TNPTF MANI: எவன் தன்னைத்தானே செலவழிக்கிறானோ அவன் பணக்காரனாகிவிடுகிறான்
-ஸாரா பெர்ன்ஹர்ட்
[02/07, 3:31 pm] TNPTF MANI: தினமும் தெளிய வைத்து அடிக்கிறது
வாழ்தல் எனும் போதைதான்
-பாதசாரி
[02/07, 3:43 pm] TNPTF MANI: வீட்டுச்சண்டைகள் கோடை மழை போன்றது.சடசடவென தொடங்கி வேகமெடுத்து சட்டென அடங்கிவிடும்
-எஸ்.ரா
[02/07, 8:56 pm] TNPTF MANI: கைமாற்றாய் வாங்கின
நாள் ஒன்றை...
இன்றென
திருப்பி தந்தார் கடவுள்.
நல்ல மனிதர், பாவம்
எதையும் கையாடவில்லை.
#எம்_யுவன்
[02/07, 9:22 pm] TNPTF MANI: மேகங்கள் வானில் பறக்கும் நதி’
-படித்தது
[03/07, 7:09 am] TNPTF MANI: ஒரே அறைக்குள் கணவனும் மனைவியும் தங்கள் வேலைகளை மெளனமாகப் பார்க்கும்போது அற்பிதமான பந்தம் ஏற்படுகிறது.இவள் இருக்கிறாள் என்று அவனோ,அவன் இருக்கிறான் என்று இவளோ சங்கடப்படுவதில்லை. மாறாக, அவள் இருப்பது அவனுக்கும், அவன் இருப்பது அவளுக்கும் ஆறுதலும் தெம்பும் தருகின்றன.மென்மையான பாச அலை இருவரையும் இணைக்கின்றன
-மாரிஸ் கூடகெட்
[03/07, 7:12 am] TNPTF MANI: பின்யோசனை என்பது மனிதனுக்குத் தாமதமாகவே வருகிறது
-ஹெகல்
No comments:
Post a Comment