Thursday, 16 August 2018

படித்த வரிகள்

[15/05, 2:30 pm] TNPTF MANI: காயல்பட்டிணத்திலிருந்து வந்த முஸ்லிம்கள்தான் முதன்முதலில் பழைய இரும்புக்கடை அமைத்தார்கள்.காயல்பட்டிணத்தான் கடை மருவி காயலான் கடை ஆனது-

[15/05, 5:53 pm] TNPTF MANI: யுத்தம் தீர்மானித்தவர்கள் அழுவதில்லை. போர்க்களம் வந்துவிட்டவர்கள் புலம்புவதில்லை. துக்கத்தை அழுகையாய் மாற்றிக் கரைப்பதை விட உறைய வைத்து நெஞ்சில் நிறுத்திக் கொள்வது உத்தமம்

-பாலகுமாரன்

[15/05, 8:10 pm] TNPTF MANI: இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன்
-எஸ்.ரா

[16/05, 6:20 am] TNPTF MANI: சவுக்கடி பட்ட இடத்தை
               நீவிடத் தெரியாக் குதிரை 
               கண்மூடி வலியை வாங்கும்
               இதுவுமோர்  சுகம்தான் என்று 
               கதறிட மறுக்கும் குதிரை
               கல்லென்று நினைக்க வேண்டாம்
               கதறிட மேலும் நகைக்கும்
              உலகத்தை குதிரை  அறியும்.

-இரும்புக்குதிரை

[16/05, 6:54 am] TNPTF MANI: 'கல்லடி பட்ட நாய் போல ஓடி மறைந்தது காலம்'
- தஞ்சை பிரகாஷ்.
[16/05, 7:15 am] TNPTF MANI:

மருத்துவமனை காத்திருப்புகளில் மௌனம் பிரார்த்தனையாகி விடுகிறது."

-ராஜா சந்திரசேகர்

[17/05, 6:23 am] TNPTF MANI: தரிசனம் என்பதில் கொஞ்சம் நம் உடல் உழைப்பு வேண்டும்.அங்கே போக வேண்டும்.கூட்டத்தில் இடிபட வேண்டும்.நம் தினசரி வேஷங்களை ஒத்திப்போட்டுக் காத்திருக்க வேண்டும்.கிட்டத்தில் செல்ல தடைகள் வேண்டும்.அதன் இறுதியில் கிடைக்கும் தரிசனத்தில் அத்தனை சிரமங்களும் மேகத்தை விலக்கிவிட்டு ஜொலிக்கும் சூரியன் போல் சட்டென்று ஏற்படும் ஒரு நிமிட பரவசம் தான் தரிசனம்.

வரவேற்பரையில் உட்கார்ந்துகொண்டு டெலிபோன் பேசிக்கொண்டு சானல் மாற்றத் துடிக்கும் விரல்களுடன் பார்ப்பதல்ல.

#சுஜாதா

[17/05, 6:37 am] TNPTF MANI: உனக்கு மாற்றாக இட்டுநிரப்ப
காலம் யாரையாவது தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறது.
வரும் அனைவரும் அதன்பின் வந்தவர்களுக்கு அல்லாமல் உனக்கே மாற்றாக வந்து உன் நிலைத்தன்மையை உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள்

-யாத்திரி

[17/05, 6:46 am] TNPTF MANI: "இந்த உலகத்தில் அரசியல் தீமைகளினால் குறைவாகவும், சுயமாக உருவாக்கிக் கொண்ட அல்லது ஏற்றுக்கொண்ட தீமைகளினால் மிக அதிகமாகவும் துன்பத்திற்குள்ளாகும் இனம் இந்து சமூகமேயாகும்."
– சர்.டி. மாதவராவ்

[17/05, 6:51 am] TNPTF MANI: அவள் பார்வையின் கேள்விக்குறி அவனைத் தாக்கி, அதற்குத் தன் மனத்தில் தனக்குச் சாதகமாக அளித்துக்கொண்ட விடையும், மறுபடியும் மற்றொரு கேள்வியின் ஆரம்பம்தானே?
-மௌனி

[18/05, 7:09 am] TNPTF MANI: நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்காக கட்டிக் கொண்டது
வானம் இறங்க விரித்த
தன் மொட்டை மாடிக்களத்தை

-தேவதேவன்

[18/05, 7:28 am] TNPTF MANI: என்னவாக்கிக் கொண்டிருக்கிறாய்
என்னை நீ
ஒன்றும் புரியவில்லை
உணர்வதெல்லாம்
குறைகூற முடியாத
ஒரு வேதனையை மட்டுமே!

-தேவதேவன்

[18/05, 7:41 am] TNPTF MANI: வெளிநாட்டு வேலைக்கு கிளம்பி வருகையில் வீட்டுக் கதவுநிலையில் மோதிக்கொள்கிறான்.அது அவனுக்கான அந்தவீட்டின் ஆசீர்வாதமுமம் முத்தமும்.!

-ஸ்டாலின்

[18/05, 8:07 am] TNPTF MANI: வார்த்தைகளின் ஊர்வலத்தில்
மெளன சாட்சியாய்
இருக்கிறோம் நாம்
[18/05, 9:23 am] TNPTF MANI: உன்னை அறிந்தால்

அது இங்கிலாந்திலிருக்கிற கிராமம். அங்கிருந்த விவசாயி ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. `பட்டீ’ (Buddy) என்று அதற்குப் பெயர்வைத்திருந்தார் அவர். அவருடைய சின்னஞ்சிறு நிலத்து வேலைகளுக்கு உதவுவது பட்டீதான். அறுத்த கதிர்களை நிலத்திலிருந்து எடுத்துவருவது, விவசாயத்துக்கான பொருள்களை ஏற்றிச் செல்வது, அவ்வப்போது பக்கத்து ஊர்களுக்கு வண்டிகட்டிக் கொண்டு போக... எனப் பல வேலைகளுக்கு உறுதுணையாக இருந்தது பட்டீ.

ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி. அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார். அவரை விவசாயி, அந்தச் சுற்றுவட்டாரத்தில் பார்த்ததில்லை. வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளும் உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார்.

விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். அவர் உட்கார்ந்ததும், `சூடாக டீ குடிக்கிறீங்களா?’ என்று கேட்டார்.

வந்தவர், அவசரமாக `வேண்டாம்’ என்று சொன்னார். அவர் கொஞ்சம் பரபரப்பாக இருப்பதை விவசாயியால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

`சொல்லுங்க... என்ன விஷயம்?’ விவசாயி கேட்டார்.

`ஒண்ணுமில்லை. நான் லண்டன்லருந்து வர்றேன். பக்கத்துல இருக்குற ஒரு ஊருக்குப் போகணும். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். அக்கம்பக்கத்துல விசாரிச்சேன். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம்னும் சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்னு...’

`ரொம்பப் பெரிய காரா?’ என்று கேட்டார் விவசாயி.

`இல்லை, இல்லை. சின்ன கார்தான்’ என்றார் வந்தவர்.

`வாங்க முதல்ல காரைப் பார்க்கலாம்’ என்ற விவசாயி, கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் சென்றார். இருவரும் கார் பள்ளத்துக்குள் விழுந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார். வெளியூர்க்காரர் சொன்னதைப்போல கார் சிறியதாகத்தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒருவேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்பட்டாலும் படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது.

`என்னங்கய்யா... காரை வெளியே எடுத்துடலாம்ல?’ என்ற வெளியூர்க்காரரின் கேள்விக்கு விவசாயி பதில் சொல்லவில்லை. வேலையில் இறங்கினார். ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார்.

பிறகு, `எங்கடா கேஸி (Casey)... இழு பார்ப்போம்!’ என்று சத்தமாகக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.

`ம்... பெய்லி (Bailey) இழுடா ராஜா!’ இன்னும் சத்தமாகச் சொன்னார் விவசாயி. குதிரை நகரவேயில்லை.

`டேய் மேண்டி (Mandy) வேகமா இழு!’ மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். குதிரை ஒரு இஞ்ச்கூட நகரவேயில்லை.

`என் செல்லம்... பட்டீ... நீயும் சேர்ந்து இழுடா!’ என்றார். அவ்வளவுதான். குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம் கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது.

வெளியூர்க்காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார். விவசாயி குதிரையை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது கேட்டார்... `சரிங்கய்யா... நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேர்ல கூப்பிட்டீங்க? அதுதான் எனக்குப் புரியலை.’

`அது ஒண்ணுமில்லை. என் பட்டீக்கு கண்ணு தெரியாது. தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா? அதான்... அதுகூட இன்னும் மூணு குதிரைகள் இருக்குற மாதிரி நம்பவெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. காரை வெளியே இழுத்துடுச்சு!’

[18/05, 11:38 am] TNPTF MANI: கடந்த காலம் குறைவாகத் தெரியும்போது கற்பனையை அதிகமாகப் பயன்படுத்துகிறோம்
-சத்தியநாதய்யர்

[18/05, 1:12 pm] TNPTF MANI: சு.வெங்கடேசன் தெற்கத்திய நாகரிக உரையில்.. முதன்முதலில் கிறுக்கல்களில் இருந்து உருவான மொழி தமிழ்.அதாவது அ எனும் எழுத்து இயல்பிலேயே இயற்கையாய் உருவாகியுள்ளது.உயிரெழுத்தில் உள்ள ஐ என்பது 9ம் இடத்தில் உள்ளது.இதே போல் ஆங்கிலத்தில் i எனும் எழுத்தும் 9ம் இடத்தில் உள்ளதால் தமிழிலிருந்து இதன் எழுத்து சென்றிருக்கலாம் என மொழியியலாளர்கள் ஆய்வு நடத்துவதாக கூறினார்.இத்தகைய பெருமை வராமலிருக்க எல்லா உள்ளடி வேலையும் நடைபெறுகிறது.

[19/05, 7:22 am] TNPTF MANI: என்னை விட்டுவிட்டு

எதோ ஒரு புள்ளியில்
என்னை விட்டுவிட்டு எல்லோரும்
போய்விடுகிறார்கள்

அவர்கள் வேகமாக நடக்கிறார்கள்
அவர்களைப் பின்தொடர்வதில்
எனக்குச் சிக்கல் ஏற்படுகிறது

நிதானமிழந்து
நின்ற இடத்திலேயே நிற்கிறேன்

அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்,
இன்னும் கொஞ்சம் வசதியான
இன்னும் கொஞ்சம் எழிலான
புகழுரைகளை என்னிடமிருந்து

அவர்களுக்குக் கீழாக
நான் என்னை வைத்துக்கொள்ள
விரும்புகிறார்கள்

நான் பேச்சைக் குறைக்கவேண்டும்
அவர்கள் பேசும்படி
என் நடத்தையில் சிறிதாகவேணும்
மாறுதல் தேவைப்படுகிறது

என்னிடம் ஒரு நல்ல குணம் உண்டு
தோற்றால் அழுவதில்லை
தோற்றுக்கொண்டே இருப்பதுமில்லை

என்னைவிட்டுவிட்டு மட்டுமே
அவர்கள் போகிறார்கள்
கடந்து போவதில்லை

-யுகபாரதி

[19/05, 7:38 am] TNPTF MANI: அம்மா உனக்கு ஓய்வில்லையா?

ஒரு கணம் சும்மா உட்கார்ந்திருக்கமாட்டாமல்
உன்னை விரட்டுவது எது?
உன் கண்ணில் கசியும்
நூற்றாண்டுத் துயர்களை நான் அறிவேன்
அசோகவனத்துச் சீதையோ, ரவிவர்மாவின்
சிந்தாகுலமிக்க சகுந்தலையோ அல்ல நீ

இந்த அகால வேளையிலும் கூட
பெருக்குமாற்றை எடுத்துக்கொண்டு
பெருக்கிய முற்றத்தையே மீண்டும் மீண்டும்
பெருக்கிய வண்ணமிருக்கிறாய்

காவியக் கற்பனைகளாலும்
தீட்டிவிடத் தீராததோ உன் ரகசியம்?

                                                     -தேவதேவன்

[19/05, 7:39 am] TNPTF MANI: உன் பிரிவில் நிகழ்வது
துயரமல்ல
எதிர்பாராத
ஒரு வெளி.

சற்று முன்
காலி செய்யப்பட்ட
ஒரு வீடு போல.

           -மனுஷ்யபுத்திரன்

[19/05, 7:42 am] TNPTF MANI: #நடையால் வழி வளரும்

நடப்பதால் நடை தொடரும்
அடியெடுத்து வைப்பதற்கு
ஆதிவழி ஏதுமில்லை.

    -புதுமைப்பித்தன்.

[19/05, 11:22 am] SATHIS W: என் அன்பின் பலூனில்
கண்ணுக்குத் தெரியாமல்
ஒரு ஓட்டை விழுந்துவிட்டது
அதை ஊதி ஊதி
என் நுரையீரலை வெடித்துவிடும் போலிருக்கிறது

என் அன்பின் பானையில்
அடியில் எங்கோ
கொஞ்சம் உடைந்துபோய்விட்டது
அதை நிறைத்து நிறைத்து
என் தோள்கள் வலிக்கின்றன

என் அன்பின் விளக்கு
கொஞ்ச நேரம் அணைந்துபோய்விட்டது
அரக்கு மாளிகை ஒன்றில்
இருளில் வழி தெரியாமல் தடுமாறுகிறேன்

என் அன்பின் கணிதத்தில்
சிறு பிழை ஒன்று செய்தேன்
எல்லாவற்றிலும் இப்போது
தவறான விடையே வருகிறது

பாழடைந்த சுவரில்
சற்றுநேரம் ஆறுதலாய் சாய்ந்துகொள்ள
வேண்டும் போலிருக்கிறது
என்னால்
அது இன்னும் பாழடையும்படியாக.....
         - மனுஷ்ய புத்திரன்

[19/05, 11:48 am] TNPTF MANI: இன்றைக்குச் செவ்வாய்கிழமை
நிலா பகலிலே வரும்
ஆகவே லேசாய் குளிரும்
மெளனமாய் நறுமணம் வீசும்
வீசவே இளமை விழிக்கும்
ஊமையாய் உடலும் மாறும்
மாறவே இமைகள் பேசும்
திரும்பிய நிலவும் போகும்
போகவே இதயம் கேட்கும்
என்றைக்குச் செவ்வாய் கிழமை?

(பாலகுமாரனின் முதல் கவிதை)
நன்றி:இளங்கோ கிருஷ்ணன் கட்டுரையிலிருந்து

[19/05, 8:54 pm] Yathra Neela: அங்கேயும்
இங்கேயும்
எங்கேயும்
இருப்பான் ஈசன்
என்று எளிதாய்ச்சொல்லி விடலாம் இருப்பவனுக்கு தான்
அதன் கஷ்டம் புரியும்.

- மனோஜ்

[19/05, 8:55 pm] Yathra Neela: “உலகில் நடந்த, நடக்கும் போர்களை நாம் உற்றுநோக்கினால், அவை வளத்தை அபகரிப்பது அல்லது வளத்தை ஒரு பிரிவினருக்கு கிடைக்கவிடாமல் செய்வதால் தான் ஏற்பட்டன; ஏற்படுகின்றன.”

– வங்காரி மாத்தாய்

[19/05, 8:57 pm] Yathra Neela: அவள் வானம்
பார்த்து பழகிய
பின் தான்
வானில் வானவில்
வரதொடங்கியது..

- மனோஜ்

[20/05, 7:17 am] TNPTF MANI: எந்த மழையானலும்
வந்தாலும் சிரமம்
வராவிட்டாலும் சிரமம்
ஊருக்குப் போன
மனைவியைப் போல..

-படித்தது

[20/05, 7:19 am] TNPTF MANI: நம் அன்றாடங்களின் ஆக்கிரமிப்புகள் கூடிப்போய்விட்டதுதான் நாட்கள் வேகமாக ஓடுவதான தோற்றத்தை தருகிறது
-ஈரோடு கதிர்

[20/05, 7:28 am] TNPTF MANI: இடைவழி

எவ்வளவு தூரம்
நடக்க வேண்டியிருக்கிறது
முகம் பார்க்கும் கண்ணாடி
முன் நிற்பதற்கு
இந்த
நடுவயதில்
எவ்வளவு நேரம்
கடக்க வேண்டியிருக்கிறது
கண்ட காட்சி
தெளிவதற்கு.

-க.மோகன்ரங்கன்

[20/05, 10:19 am] TNPTF MANI: *சினேகிதனின் தாழ்வான வீடு*
*கலாப்ரியா*

கறுப்பேறிப் போன
உத்திரம்,
வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு
கையெட்டும் உயரத்தில்.

காலேஜ் படிக்கும் அண்ணன்
அதில் அவ்வப்போது
திருக்குறள்,
பொன்மொழிகள்
சினிமாப் பாட்டின்
நல்லவரிகள் – என
எழுதியெழுதி அழிப்பான்
எழுதுவான்.

படிப்பை நிறுத்திவிட்டு
பழையபேட்டை மில்லில்
வேலை பார்க்கும் அண்ணன்
பாஸிங்ஷோ சிகரெட்டும்
தலைகொடுத்தான் தம்பி
விளம்பரம் ஒட்டிய
வெட்டும்புலி தீப்பெட்டியும்
உத்திரத்தின்
கடைசி இடைவெளியில்
(ஒளித்து) வைத்திருப்பான்.

அப்பா வெறுமனே
பத்திரப்படுத்தி வந்த
தாத்தாவின் – பல
தல புராணங்கள்
சிவஞானபோதம்
கைவல்ய நவநீதம்
சைவக்குரவர் சரித்திரங்கள்
பலவற்றை,
வெள்ளையடிக்கச் சொன்ன
எரிச்சலில், பெரிய அண்ணன்
வீசி எறியப் போனான்.

கெஞ்சி வாங்கி
விளக்கு மாடத்தில் அடைத்ததுபோக
உத்திர இடைவெளிகளில்
ஒன்றில் தவிர
அனைத்திலும்
அடைத்து வைத்திருப்பாள்
அவன் அம்மா.

முதல் பிள்ளையை
பெற்றெடுத்துப் போனபின்
வரவே வராத அக்கா
வந்தால்-
தொட்டில் கட்ட
தோதுவாய் – அதை
விட்டு வைத்திருப்பதாயும்
கூறுவாள். . . . . . . . . . . . .

நின்றால் எட்டிவிடும்
உயரம்
என்று சம்மணமிட்டு
காலைக் கயிற்றால் பிணைத்து -
இதில் தூக்கு மாட்டித்தான்
செத்துப்போனார்
சினேகிதனின்
அப்பா.

[20/05, 10:23 am] TNPTF MANI: *கனவுகளின் அர்த்தம்*

அல்வாக் கடைகளே கனவில் வருகிறதா?
நிதி நிறுவனத்தில் ஏமாறப் போகிறாய்!

ஜவ்வு மிட்டாய் கனவில் வருகிறதா?
நெடுந்தொடர் இயககுநர் ஆகப் போகிறாய்!

இ்ன்னோவா மகிழுந்து கனவில் வருகிறதா?
நிச்சயம் நாளை நீ கட்சி மாறுவாய்!

சேலைகளும் சுடிதாரும் கனவில் வருகிறதா?
போலிச் சாமியாராய் ஆவது உறுதி!

முதியோர இல்லம் கனவில் வருகிறதா?
மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கும்!

-வல்லம் தாஜுபால் கவிதை  -
பேராசிரியர் இரா. மோகன் எழுதிய
`கவிதை  வெளியினிலே` எனற  நூலில்

No comments:

Post a Comment