கற்றதும் பெற்றதும்-21
*மணி
#தெற்கிலிருந்து ஒரு சூரியன்
-முன்னணி எழுத்தாளர்களின் கட்டுரைகளும்,அரசியல் ஆளுமைகளின் பேட்டிகளும் இடம் பெற்ற நூல்
# திராவிட இயக்க நூற்றாண்டு, கலைஞரின் சட்டமன்றப் பணிகள் 60 ஆண்டுகள் நினைவு கூறும் வகையில் தி இந்து குழுமத்தின் சார்பில் "தெற்கிலிருந்து சூரியன்" எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் எனும் ஆளுமையின் பல்வேறு முகங்களை 208 பக்கங்களில் விவரிக்கிறது.
திராவிட இயக்க வரலாற்றின் ஐந்து முன்னோடிகள் அயோத்திதாசர்,பிட்டி.தியாகராசர், டி.எம்.நாயர்,சி.நடேசனார்,பனகல் அரசர் முதலியோரை குறிப்பிட்டு, பெரியார்,அண்ணா எனும் இரு பெரும் தலைவர்களை கூறி துவங்குகிறது.அடி முதல் நுனிவரை புதிய வரலாற்று கருத்துக்களோடு தொடர்கிறது.
#மொழிப்போர் தியாகிகள்
திராவிட இயக்கத்தின் மிக முக்கிய பங்களிப்பு மொழி உரிமைக்கான போராட்டங்கள். சுதந்திரத்தின் போது நாட்டின் அலுவல் மொழியை தேர்ந்தெடுப்பதற்காக ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்ற இந்தியை மட்டும் அலுவல் மொழியாக கொண்டு வர திட்டமிட்டார்கள். ஆனால் 60% மக்கள் ஒரே நாளில் இரண்டாம் தர குடிமக்களாக ஆகிவிடுவார்கள். ஆகவே ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீடிக்க வேண்டும் என்று மற்ற மாநிலத்தினர் கூறினார்கள். அதன் விளைவாக 15 ஆண்டுகள் வரை ஆங்கிலமும் கூடுதலாக பயன்படுத்தப்படலாம் என்று கெடுவோடு 1950 இல் நடைமுறைக்கு வந்து, 1965 ஜனவரி 26 இந்தியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் எழுந்தன.
# குமரியில் வள்ளுவருக்கு சிலை எடுக்கும் தன் முடிவை கணபதி ஸ்தபதியிடம் கூறியபோது.. "நாடு இங்கே முடியுதுங்கிறாங்களே அது இல்லை; இங்கே நம்ம தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்குகிறதுனு சொல்ற மாதிரி அமையனும்! குமரியிலிருந்து வள்ளுவர் நேரா இமயத்தை பார்க்கிறார்! என்று வள்ளுவர் சிலையை அமைக்கப்பட்டது கலைஞரால்.
ராஜமன்னார் குழு அறிக்கையை தொடர்ந்து 1974 சட்டமன்றத்தில் திமுக மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றியது தனிச்சிறப்பு வாய்ந்தது.மேலும் நாட்டிலேயே ஒரு மாநிலத்தில் திட்டக்குழு முதன்முதலில் அமைக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான்.சிறு நகரங்களை நோக்கி தொழில் வளர்ச்சியைக் கொண்டு செய்வதில் நம்பிக்கை வைத்து உலகமயமாக்கல் சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான கொள்கையை நாட்டுக்கே முன்னோடியாக 1997 கருணாநிதி கொண்டு வந்தார்.
# 1988 செப்டம்பர் 17 அன்று கலைஞர் முன்னின்று தேசிய அளவில் 7 கட்சிகள் சேர்ந்து வி.பி சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது.விபி சிங் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முக்கியத்துவம் வாய்ந்தது.
# ராஜமன்னார் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
*மாநிலங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்குவது *வருவாயை அதிகப்படுத்தி வரி சீர்திருத்தம் கொண்டு வருவது *மாநில அரசுகளின் ஆலோசனையைப் பெற்று ஆளுநரின் அமைக்கப்படுதல் *நெருக்கடி நிலை தொடர்பாக முடிவெடுக்கும் போது மாநிலங்களுக்கிடையே கலந்தாலோசித்தல் *அனைத்து மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம்
மாநில சுயாட்சி என்று பேசிவருவதும்,மாநில பிரதிநிதித்துவமும் கிடைக்க வேண்டுமென கலைஞர் எண்ணினார்.மேலும் இவரின் வலியுறுத்தலினால்தான் மாநில முதல்வர்கள் சுதந்திரதினத்தில் கொடி ஏற்றும் உரிமையினை பெற்றார்கள்.
#டிஸ்மிஸ்
ஆட்சி கலைக்கப்பட்ட போது வீட்டு வாசலில் மருமகன் செல்வம் அமிர்தம் இருவரும் ஆட்சி கலைத்து விட்டார் என்று கூறினார்கள். அப்போதும் கூட "அப்பாடா சஸ்பென்ஸ் முடிந்தது" என கூறிக்கொண்டே தான் பயன்படுத்திய காரை தலைமைச்செயலகத்துக்கு எடுத்துச் சென்று விடுமாறு சொல்லி விட்டு உள்ளே நுழைந்தார்.
1975 ஜூன் 25ல் விடியற்காலை நான்கு மணிக்கு எழுதி கண்டன தீர்மானத்தை திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக கட்சி ரீதியான கண்டன தீர்மானம் நிறைவேற்றிய பெருமிதம் திமுகவுக்கு உண்டு. அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் முரசொலி மாறன் உட்பட 20 ஆயிரம் திமுகவினர் கைது செய்யப்பட்டனர்
#சமூகநலன்
"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்பதன் அங்கமாக தமிழ் தாய் வாழ்த்து எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் தொடக்க பாடலானது.
*2000-ல் தமிழர்களின் சராசரி வயது 66 என்றானது. சிசு மரணம் தவிர்க்கப்பட்டது. இதனை தடுத்த மருத்துவ செவிலியருக்கு ஒரு சவரன் தங்கம் பரிசாக தரப்பட்டது. கேடயம் பரிசு வழங்கப்பட்டது. கிராமங்களில் வீடுகளில் மருத்துவ பயிற்சி இல்லாதவர் பிரசவம் பார்ப்பதை தடுக்க வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் செவிலியருக்கு ஒவ்வொரு பிரசவத்துக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தமிழர்கள் சராசரி ஆயுட்காலத்தை 60 ஆக உயர்த்தி இருக்கின்றன.
*பெங்களூரில் திருவள்ளுவர் சிலையும்,சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறந்து நட்பும் நெருக்கமும் பாராட்டினார்.
#முரசொலி
நம் நாடு, திராவிட நாடு ஆகிய இதழ்கள் எல்லாம் சிறிது காலத்துக்குப் பின் நின்றுவிட்டன. ஆனால் முரசொலி நீடித்தது மூன்று விஷயங்களில்
1. கலைஞர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை இதில் போட்டுக்கொண்டே இருந்தார்
2 அவருடைய அபாரமான எழுத்துத் திறனும் நிர்வாகத் திறனும்
3 தன்னுடைய எழுத்துக்களோடு மட்டுமல்லாமல் அண்ணா, சிற்றரசு, மதியழகன் என்று ஏனைய தலைவர்களுக்கும் எழுத முக்கியத்துவம் கொடுத்தது.
*உன்னைத்தான் தம்பி
முரசொலியில் பயன்படுத்திய பிரபலமான ஒன்று "உன்னைத்தான் தம்பி"! என உத்தரவிடும் தொனியில் அண்ணா விரல் நீட்டி பேசுவது. இந்த ஓவியம் 1914 பிரிட்டன் அரசு ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக வெளியிட்ட விளம்பரத்தை மாதிரியாக கொண்டது. ஆல்பிரெட் லீ உருவாக்கியது.பிரிட்டனின் அப்போதைய அமைச்சர் கிட்ச்ணர் பிரபு முகம் இருந்த இடத்தில் அண்ணாவின் முகத்தை பொருத்திவிட்டார் கருணாநிதி.
#சமூக நீதிச்சட்டங்கள்
1968இல் இந்து திருமண சட்டத்தில் புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வந்தது. அதன் விளைவாக தாலி கட்டாத திருமணங்களும், சமய சடங்கு இல்லாத திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்றானது. இந்தியாவிலேயே இப்படிப்பட்ட ஒரு சட்டப்பிரிவு எந்த மாநிலத்திலும் இன்றுவரை இல்லை.
உள்ளாட்சித் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில்.. தமிழ்நாட்டில் 2016 ஆம் வருடம் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டியாய் மாறியதில் கலைஞருக்கு பங்குண்டு.
1999இல் உலகத் தமிழ் இணைய மாநாடு முக்கியமான செயல்பாடாக விளங்கியது. இணைய உலகில் தமிழ் முன்னே நிற்க விதைபோட்ட நிகழ்வு. அதன் தொடக்கமாக திருவள்ளூர்,திருவாரூர் மாவட்டங்களில் மின் நிர்வாகத்தை கொண்டுவந்தார். இதன் பின்னிருந்த அவரின் கனவுகள் பெரியவை.
# இந்தியாவிலேயே பெண் காவலர்கள் முதலில் நியமிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. மகளிர் காவல் நிலையங்கள் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு." எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்ணின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் என்று சொன்னபோது "அந்த பெண்ணை எட்டாம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டிய நிலை ஏற்படும்" அதனால் பெண் கல்வி உயரும்! என்றார்.
2009 இல் கலைஞர் காப்பீட்டுத் திட்டம். உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு ஒரு லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு 4 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. இது ஒரு தொலைநோக்குப் பார்வையான திட்டம்.
#கதாசிரியர்
திருக்குவளையில் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர் தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதி.
*10 நாவல்
*21நாடகம்
*6 தன் வரலாற்று புத்தகம்
*37சிறுகதைகள்
*8கவிதை நூல்கள்
*6உரை நூல்கள்
*12 கடிதத் தொகுப்புகள்
#பார்வையை பறித்த விபத்து
இரு விபத்துகள் கருணாநிதியின் கண்ணை பறித்தன. 1953 பரமக்குடி கூட்டம் முடிந்து திருச்சி நோக்கி புறப்பட்ட போது தூக்கக்கலக்கத்தில் ஓட்டுநர் கண்ணயர சாலை விபத்து ஏற்பட்டது.கண்ணில் அடி. முதலுதவி சிகிச்சை முடித்து திருச்சிக்கு வந்தார்.பின் இடது கண் வீங்கி கண்ணில் அறுவை சிகிச்சை நடந்தன. 1967ல் தொழுப்பேட்டில் நடந்த மற்றொரு கார் விபத்தில் கண்வலி அதிகப்படுத்தியது. பின்பு 1971 ஆம் ஆண்டு முதல்வரான பின் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார் கருணாநிதி. அதற்குப் பின் ஒரு கண்பார்வை பலத்தில் மட்டுமே இன்றுவரை அவர் இயங்கிருக்கிறார். ஒரு கண் பார்வையோடு ஒரு தலைவர் இவ்வளவு வாசிக்க முடியுமா? எழுத முடியுமா? செயல்பட முடியுமா? தன்னம்பிக்கையும் அயராத உழைப்புமே கருணாநிதி!
-தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment