Friday, 1 May 2020

1-5-2020

[ இழக்க அதிகமில்லாதவனுக்கு அதிக பயமி்ல்லை; இழக்க அதிகமுள்ளவனுக்கு பயத்தைத் தவிர வேறேதும் அதிகமில்லை 

-ராஜேஷ்வர்



[கடினமாய் உழைத்தவர்கள் முன்னேறவில்லை,
கவனமாய் உழைத்தவர்களே முன்னேறியுள்ளனர்.!!

-மணி

-உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


 எல்லாத் தகவல்களை
அழித்த பின்னர்
முன் திரையில்
கொள்ளை
அழகுகாட்டிச்
சிரிக்கிற
குழந்தையின் புகைப்படத்தை
என்னசெய்வதென்று
விழிக்கிறான் 
செல்பேசியைக் களவாடியவன்

-ஆத்மார்த்தி

: #படம் வரையும் மரபு

அக்காலத்தில் நாவலை தொடராக எழுதிப் பிரபலமாக்கியது சார்லஸ் டிக்கன்ஸ்தான்.அவர்தான் தன் கதைகளுக்கு ஏற்ப சித்திரம் வரைந்து பிரசுரித்தால் வாசகரிடம் வரவேற்பு கிடைக்குமென எண்ணி Samuel luke fields என்பவரை அணுகினார். அன்றுமுதல் அவர் கதை சித்திரத்துடன் வெளிவந்தது.இது இன்றுவரை தொடர்கிறது

#info

"மனித வாழ்க்கையின்
மிகப்பெரிய ஆச்சர்யம்
அன்புக்கு உரியவர்களை
எந்த இடத்தில்
எப்படி சந்திக்கப் போகிறோம் என்பதும்
எங்கே
எப்போது
எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும்
முன்கூட்டியே
தெரியாமல் இருப்பதுதான்""

-நா.பார்த்தசாரதி


இந்த நாட்டில் யார் அதிகமாகக் கடன் வாங்கிறார்களோ,
அவர்களுக்குத் தான் மதிப்பு அதிகம்

-சாவி


குருவியின் கண் மட்டுமே தெரிந்த
அர்ச்சுனனுக்குத் தெரியவில்லை
அதன் உயிர்
*

நான் பிடித்த முயலுக்கு
மூன்றே கால்
அய்க்கூ!
*

தீக்குச்சியை உரசிய
அதே கணத்தில்
வானத்தில் மின்னல்!
*

மாதுளையை உதிர்த்தபோது
பார்த்தே பார்த்துவிட்டேன்
ஒரு கணம்… கடவுளை!
*

ஊருக்குப் போகிறேன்
வானம்
பார்க்க வேண்டும்
*
தவளை கத்துகிறது
தண்ணீர்…
ண்ணீர்…
ணீர்…
*
கசியுமா கண்ணீர்
நெற்றிக் கண்ணில்…
*
யாருமற்ற குளத்தின் படிக்கட்டு
மெல்ல இறங்கிக்கொண்டிருக்கிறது
வெளிச்சம்
*
கடந்து செல்லும்
ஒவ்வொரு தெருவிலும்
ஒவ்வொரு சூரியன்
*

*~லிங்குசாமி
[01/05, 6:16 pm] மணிகண்ட பிரபு: பத்திரப்படுத்துபவனாக அவன்
எதிர்நோக்கியிருக்கிறேன் நான்
அவனிடமிருந்து
பாக்கிச் சில்லறைக்கான
சில பதில்களையாவது

-கடற்கரய்



முற்காலம் என்றால் 
போருக்கு போய் 
செத்திருக்கலாம்,
தற்காலத்தில் எல்லாமே
சாகவிடாத யுத்தங்கள்

-படித்தது

No comments:

Post a Comment