எந்த ஒரு விஷயத்தையும் எவிடன்ஸ் இல்லாமல் செய்வது எப்படி?
நண்பர்களின் திருமணமாய் இருந்தாலும் சரி,கெடா வெட்டு,கெட் டூ கெதராய் இருந்தாலும் சரி முதல் சாய்ஸ் சரக்கு தான்.எப்பவும் குடிக்கிறவங்களை விட எப்பவாவது குடிக்கிறவங்களும் நம்ம சமூகத்தில இருந்துட்டுதான் இருக்காங்க.அவர்களும் குடிமகன்கள் தான்.அவுங்களுக்காவும் சில டிப்ஸ் குடுத்துதான் ஆக வேண்டியிருக்கு.
சரக்கடித்து வாழ்வாரே வாழ்வர், பீர் அடிப்போர் எல்லாம் மாட்டிக்கொள்வார் னு காலம் காலமா இருக்கிற விதியை மாத்தனும்.சுதியை ஏத்தனும்.
*கெடா வெட்டு,கெட்டு டூ கெதர் னு வந்துட்டா நமக்கு ஏத்த நண்பர்களை கூட வச்சிக்கனும்.அதாவது பீர் அடிப்பவர்களை..
இது எல்.ஐ.சி பாலிசியை விட சேஃப்டியான பாலிசி
*ஹார்ஸ் பவர் இருக்கா,புல்லட் இருக்கானு பேசிட்டு இருக்கும் போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மாதிரி பேசாம அமைதியா இருக்கனும். ஆர்வக்கோளாறுல ஆக்டிவா இருக்கா,என்பீஃல்டு இருக்கானு கேட்டா பீர் அடிக்கும் குரூப்பிலிருந்து கொல வெறியோடு ரிமூவ் செய்யப்படுவீர்கள்
*அடுத்த ஆப்ரேசன் என்னன்னா பாட்டில் ஓபன் செய்வது.பாராக இருந்தா ஓபனர் இருக்கும்.ஆனா வாய்க்கா மேட்டுல,தென்னந் தோப்பாக இருந்தால் சிக்கல்தான்.பல்லால கடிச்சு நாங்களும் ரெளடிதானு மேச் பன்னனும்.ராஜ் கிரணை மனசுல நினைச்சு நல்லி எலும்பை கடவாயில் கடிப்பது மாதிரி மூடி வேற பாட்டில் வேறயா கடிச்சு எடுக்கனும்.கடிக்க தெரியலைனா ஓபன் செய்து வச்சிருப்பவன் பாட்டிலை எடுத்து வாய் வச்சிரனும்.இந்த ராஜதந்திரம் எல்லா நேரத்துலயும் வொர்க் அவுட் ஆகாது யுவர் ஆனர்.சீக்கிரம் பாட்டில் திறக்க கத்துக்கணும் பிரதர்.
*பீர்க்கு டம்ளர் கேட்டால் அவ்வளவுதான்..பார்'க்கு போய் சீட்டு கிடைக்காதவன் மாதிரி அப்பாவியா நம்மை பார்க்க வச்சிருவாங்க..
அப்புறம் அதகள என்டர்டெய்ன்மென்ட் தான்.சரக்கு தீரும் வரை நம்மை வச்சு செய்வாங்க..ஆகவே பொறுமை முக்கியம் அமைச்சரே
*டிவியை பார்த்துட்டே சாப்பாட்டை தட்டில் வைத்திருப்பவர் மாதிரி இருக்க கூடாது. சரக்கை சீக்கிரமும் அடிக்க கூடாது, வச்சிட்டேயும் இருக்க கூடாது.மீடியமான ரன் ரேட்டுல அடிச்சிட்டே இருக்கனும்.அப்பதான் போட்டியிலும்,பார்ட்டியிலும் ஜெயிக்க முடியும் பங்கு"!
*நல்ல சூப்பர் ஸ்ட்ராங்கா இருந்தால், ஒன்று முடித்து அடுத்த பீர்க்கு போகும்போது வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை தொண்டையில் கிச்சு கிச்சு மூட்டும்.அதுக்கு பேரு வாந்தி.சட்டுனு சுதாரிச்சு நாலு முறை எச்சில விழுங்கி, கொண்டு போன கொய்யா காயையோ,வாழைப்பழத்தை விழுங்கி மேனேஜ் செய்யலாம்.உடம்போ,தலையோ ஒரு குலுக்கு குலுக்கும்.அதை மத்தவங்க பாத்திராமா பவ்யமா பாத்துக்கனும்.
*வல்லவனுக்கு வல்லவன் பேக் ஐடியிலும் உண்டு என்ற பழமொழி மாதிரி,அடிச்சிட்டு அனாவசியமா பேசாம ஆமாஞ்சாமி போட்டுறனும்.இல்லனா எமோசனல் ஆகி சரக்கும் பாடியும் செட் ஆகாம போயிடும்.அப்புறம் ரணம் ரணமா ஆயிடும்.
*சரக்கடித்து முடித்தவுடன் கொஞ்சம் கட்டெறும்பு கன்னத்தில் ஊறுவது போல இருக்கும்.எல்லாம் யூரின் போற வரைக்கும் தான்.தள்ளாடம ஸ்டெடியா நெஞ்சை நிமித்திக்கிட்டு,மீசையை முறுக்கிட்டு ரத்தின வேல் பாண்டியன் மாதிரி போய் ஒரு சேர்ல உட்கார்ந்து, ஏவிஎம் சரவணன் சார் மாதிரி கையை கட்டி போஸ் கொடுக்கனும்.எந்த ஒரு காட்சியையும் அஞ்சு நிமிசத்துக்கு மேல பார்க்க கூடாது.பரபரப்பா எல்லா இடத்தையும் பாத்துக்கிட்டே இருக்கனும்
*பந்திக்கு போனால் எல்லாமே அளவா சாப்பிட்டு,லைட்டா எல்லாரையும் பார்த்து சிரிக்கனும்.(வாயைத் திறக்காம).நம்ம இலைனு நினைச்சு பக்கத்து இலையில சோத்தை பிணையாம கையை கன்ட்ரோல் செய்யனும்.சர்வரையெல்லாம் அதிருப்தி எம்.எல்.ஏ போல் பார்க்காம, எதிர்கட்சி எம்.எல்.ஏ வை பார்ப்பது போல் சிரித்த மாதிரி பார்க்கனும்.
*சல்மான் கானுக்கு ஜாமின் கிடச்ச மாதிரி,அவ்வளவு ஈஸியில்ல வீட்டுக்கு போவது.பத்துப் பொய்யை மனசுல சொல்லிப்பார்த்து அதுல எது பெஸ்ட் பொய்யோ அதை ரைமிங்கா டைமிங்கா போனில் மனைவியிடம் லேட் ஆனதுக்கு காரணம் சொல்லனும்
*நம்புற மாதிரி கிரீன் சிக்னல் கிடைத்தவுடன்,அப்படியே டாப் கியரில் இன்னும் ஒன்றிரண்டு விஷயத்தை கோர்த்து சொல்லனும்.சரிமா கிளம்பிட்டேன்;சீக்கிரம் வந்துடுறேன் சொல்லி போன் ஐ வச்சிடனும்
*கண்ணுல சரளை மண்ணு கொட்டுன மாதிரி கலங்கியிருக்கிற கண்ணோட டோனை சரிசெய்யனும்.டவுன் பஸ் ட்ரைவர் ஸ்டேரிங்கை துடைக்கிற மாதிரி முகத்தை கர்சீப்பால் துடைக்கனும்.
*பீடா வைப்போட்டு வாயில் மென்னுகிட்டே வீட்டுக்கு கிளம்பனும்.அப்புறம் வீதி முக்கில் வாய் கொப்பளித்து ஒரு டீ குடிச்சிக்கிட்டே நேராக,சைடாக கண்ணாடியில் பார்த்து நமக்கு நாமே மார்க் போட்டுக்கனும்
*எலிமினேட் ஆகுற மாதிரி தெரிஞ்சா சென்டர் பிரஸ்,டிக் டாக்,ஹால்ஸ் மிட்டாய்,தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளித்து நிலைமையை மேனேஜ் செய்யனும்.விக்ஸ் வாங்கி தேய்ச்சிக்கனும்
*வீட்டுக்குள் நுழையும் போது செருப்பை பவ்யமா விடனும்.அதட்டல் இல்லாம அமைதியா பேசனும்.நைசா பாத்ரூமுக்கில் போய் கோல்கேட் பேஸ்ட்,பிரஷ் எடுத்து பல்லு விளக்கிடனும்.இதுதான் நாகாஸ்திரம்.இதுதான் என்டு கார்டு.இதுக்கும் மேல சொர்க்கம் தான்.
*கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு வீட்டுக்குள் நுழையனும்.
முதலில் நம் முகம் பார்த்து சந்தேகம் வரலைனா தப்பிச்சிட்டோம் அர்த்தம்.உடனே ஜீன்ஸ் படத்தில வரும் பேச்சியப்பன் நாசர் என்சைக்ளோபீடியா எடுத்து படிப்பது மாதிரி, புக் எடுத்து படிக்க ஆரம்பிச்சுடனும்.
*உலக அளவில் நம்ம நாட்லதான் விவாகரத்து எண்ணிக்கை அதிகரிச்சு வருவதாக தகவல் வருகிறது.உலக அரங்கில் நம் நாட்டுக்கு எவ்வளவு அவமானம்.ஆண்களாக நாம் என்ன செய்யப் போகிறோம்.இது போன்ற முன் எச்சரிக்கையாக செயல்படும் ஆண்களால் தான் நம்பிக்கை ஏற்படுகிறது.பல குடும்பங்கள் விவாகரத்து ஆகாமல் இருக்க செய்யும் அந்த ஆண்களுக்கு ஒரு சபாஷ் சொல்லாமே"!
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment