தம்பிக்கு எந்த ஊரு,பிச்சைக்காரன், நானும் ஒரு தொழிலாளி, உனக்கும் எனக்கும் பட பாணியிலான கதை.ஆனால் இன்றைய பெருமுதலாளிகளின் மனதை மாற்றும் எளிய பொறிதான் கதை.குமுதம் அரசு பதில்களில் தான் இப்படம் குறித்து படித்தேன்.2மணி நேரத்தில் இயல்பாய் கதை சொல்லி படம்.
1979-ல் சரண்சிங் தலைமையிலான மத்திய அரசானது இடதுசாரி தலைவர்களிடம் ஆதரவு கேட்டபோது, அமைச்சர் பதவி ஏதும் கேட்டுப் பெறாமல் அவசரநிலை (எமர்சென்சி) காலத்தில் பணிநீக்கம் செய்யப்ட்ட இரயில்வே ஊழியர்களை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், எல்லா தண்டனைகளையும் இரத்து செய்ய வேண்டும், ஊழியர்களுக்குப் போனசு வழங்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளோடு ஆதரவு வழங்கியது. இதன் தொடர்ச்சியாகவே மாநில அரசின் ஊழியர்களுக்கும் போனஸ் என்ற வாசல் திறக்கப்பட்டது.போனஸ் என்பது மிகை ஊதியமல்ல, மதிப்பூதியம்.
#கதை
பரம்பரை பணக்காரர்கள் அதாவது மூணு தலைமுறையாய் ஒரு பெரு நிறுவனத்தை நடத்திவரும் குடும்பம். பேரன் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டிய தருணம்.ஆனால் மிக தாராளமாய் நவீன பொருளாதாரம் படித்தவராய் பணத்தின் மதிப்பு தெரியாமல் இருக்கிறார்.
அப்போது போன்ஸ் கொடுப்பதற்கான கூட்டம் நடக்கிறது. அதில் எதற்கு போனஸ் கொடுக்க வேண்டுமென வாதித்து தாத்தாவுடனான மோதலில் பேரன் ஒருமாதம் மும்பையில் சாதாரண மனிதனாய் வாழ சம்மதித்து அங்கிருக்கும் சேரியில் குடியேறுகிறார்.
அங்கு சந்திக்கும் இடர்கள், சூ கடையில் தன் கட்டுப்பாட்டில் உள்ள காலணியை சக தொழிலாளி திருடிவிட்டு போனதால் ஏற்படும் அவமானம், மாத முடிவில் ஏற்படும் மனமாற்றம் என படம் நீள்கிறது
#டின்ஜ்ஜூ
*பெங்கால் என்பதால் தாத்தா கம்யூனிச சித்தாந்தம் பேசி தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்.
*ஷோனு சூட் சாயலில் இருக்கும் ஹீரோ இயல்பாய் பொருந்துகிறார்.
எதிர்பாராது கிடைக்கும் காதலியின் ஊக்குவிப்பு பாதியில் சென்றிடலாம் எனும்போது தடுக்கிறது.
*ஒன் மந்த் சேலன்ஜ் இதற்கு முன் பல படங்கள் வந்தாலும் இது முதலாளியின் மனதில் ஏற்படும் மாற்றம் ரசிக்க வைக்கிறது.
*இசை,ஒளிப்பதிவு படத்திற்கேற்ற தன்மையை கொடுக்கிறது.
*ஒரு பிச்சைக்காரனுக்கு கூட பிச்சையிடாதவன்..ஒரு சேரி முழுக்க சொந்தங்களை பெற்றுத் தருகிறது.
படம் மெதுவாதான் போகும். ஒன்றிரண்டு பாட்டு உண்டு.ஒரு இனிய அனுபவத்தை ரசிக்க பார்க்கலாம்
-மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment