சூர்யா ஜோதிகா தயாரிப்பில் மற்றுமொரு ஹீரோயின் ஓரியன்டட் படம்.நிறைய பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள்.சமூக கருத்து இருக்க வேண்டுமென்ற ஒரு மெசேஜ் சொல்லும் படம்
#கதை
ஆரம்பக்காட்சியில் இருவரின்மீது துப்பாக்கி சுடும் சத்தத்துடன் துவங்குகிறது படம்.
ஊட்டியில் வசிக்கும் பாக்யராஜின் மகளாக வருகிறார் ஜோதிகா. சமூக அநீதி வழக்குகளை பொதுநல வழக்காக பதிந்து தண்டனை பெற்று தருகிறார் பாக்யராஜ்.15 வருடத்துக்கு முன் குழந்தைகளை கொன்றதாக சைக்கோ கொலையாளி ஜோதி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப் படுகிறார்.மீண்டும் தூசு தட்டி இந்த வழக்கில் ஆஜராகிறார் ஜோதிகா. சுடப்பட்டவரின் தந்தையான பணக்காரரான தியாகராஜன் அவரின் வக்கீலாக பார்த்திபன். இருவரிடையே வாதம்.இறுதியில் நிகழ்ந்ததை நெகிழும்படி முடிகிறது கதை
#டின்ஜ்
*படத்தின் பெரும்பலம் ராம்ஜியின் கேமரா.ஊட்டியை வேறுவிதத்தில் காட்டிய விதம் அருமை.
*மற்றவர்க்கு வந்த வலியை தனக்காக உணரும் மனிதநேயம் எனும் கருத்து
*பெண் காமுகர்கள் சட்டத்தை பயன்படுத்தி தப்பித்துவிடுவதை தைரியமாய் சொல்லியிருக்காங்க
*ஆங்காங்கே பளிச்சிடும் வசனம்
*சமீபத்தில் நடக்கும் சிறுமி பாலியல் துன்புறுத்தல் எனும் வலுவான கதைக்கு பலவீனமான திரைக்கதை.
முதல் ஒரு மணி நேரம் தைரியமாய் ஓட்டிவிட்டு பார்க்கலாம்
*படத்தின் இரண்டாம் ரீலிலேயே தியாகராஜனை காட்டிவிடுவதால் இவர்தான் மச்சி கொலைகாரன் அல்லது இவன் புள்ளைனு யோசிச்சுவிட்டதால் காத்து போன பலூன் ஆகிடுச்சு திரைக்கதை
* Forensic ,evaru போன்ற படங்களில் கொலை நடக்கும் ஆனால் அதை கண்டுபிடிக்க மெனக்கெடும் காட்சிகள் இவரா இவரா என சுவாரஸ்யமா இருக்கும்.இதில் மிஸ்ஸிங்
*ஜோதிகாவின் நடிப்பு ஓகே.
*பார்த்திபன் சாரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
No comments:
Post a Comment