Saturday, 9 May 2020

அன்னையர் தின வாழ்த்துகள்

why mother is god
*மணி

# கேட்காமலே டி.வி ரிமோட் கொடுத்துவிடுவதால்

#எல்லாரும் டிவி பார்க்கும் போது
அம்மாக்கள் மட்டுமே டிவியில் உள்ள
அழுக்கை பார்த்து துடைப்பதால்

#சும்மா இருக்கும் போதும் ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பதால்

#பழைய சோறும் பழைய மொபைலுமே போதுமென்பதால்

#துன்பத்தில் எல்லாம் ஆறுதல் சொல்லி அரவணைப்பதால்

#மாசக்கடைசியில் பணம் தருவதால் 

#பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் நம்மைப் பற்றி பெருமையாக கூறுவதால்

 #பரிட்சையில் பார்த்து எழுதுனு வெள்ளந்தியாக சொல்வதால்

#பகலில் தூங்கும்போது சாப்பிட்டு தூங்கு என கனிவுடன் பேசுவதால்

# நடைபழகிய நாள் முதல் வெளியே கிளம்பும்போது சொல்லும்வார்த்தை 
" ஓரமாப் போ"

# சாலையை கடக்கும் போது தன் குழந்தையின் கையை இறுக பற்றி செல்வது..

#பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மாதக்கணக்கில் வைத்துக்கொள்வது

#பேருந்து சரியான சில்லறை சேகரித்து வைத்திருப்பது

#பிய்ந்து போன பட்டனுக்கு பின்னூசி தருவதால்

#தோசை நம்ம தட்டுக்கே வந்தா அம்மா சமைக்கிறாங்கனு அர்த்தம்,
தோசை இருக்கிற இடத்துக்கு தட்டை தூக்கிட்டு நாம போனா மனைவி சமைங்கிறாங்கனு அர்த்தம்

# விஷேச வீட்டுக்குப் போனா மைசூர் பாகை கர்ஷீப்பில் எடுத்து வந்து கொடுப்பதால்

# பழைய சாதத்தையெல்லாம் அவங்க சாப்பிட்டு, சூடாக நமக்கு செய்து கொடுப்பதால்

# பீரோவில் ஒரே ஒரு ரேக்கில் மட்டும் துணி வைத்திருப்பதால்

# அதி காலையில் வெளியே கிளம்பும்போது வரக்காப்பி யுடன் வந்து நிற்கும் தெய்வம்

#  மீதமிருக்கும் அசைவ உணவை எப்போதும் கடைசியில் சாப்பிடுவது

# அடுப்படியே அலுவலகமாக்கி, சோர்வில்லாம் தாமே வேலை செய்யும் ஒப்பற்ற மேனேஜர்

# கம்மி மார்க் எடுத்தா புரோக்ரஸ் கார்டில் கையெழுத்து போட்டுத்தருவது

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோவில்
அவளே என்றும் என் தெய்வம்.!

-அன்னையர் தின வாழ்த்துகள்

-மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment