இந்தியாவுக்கு எதற்கு போகிறீர்கள் என தூதரகத்தில் அதிகாரி கேட்டார்..சுற்றுலாவுக்கு என்றேன்.
மீண்டும் எதற்காக என்றார்
மறுபடியும் சுற்றுலாவுக்கு என்றேன்.
பல்வைத்தியர் 'இன்னும் அகலமா' 'இன்னும் அகலமாக' என்பது போல் அதே கேள்வியை திரும்பத்திரும்ப கேட்டார்.
-அ.முத்துலிங்கம்
தேவையானது எது?சிறந்தது எது?’’
சமூகத்தில் தேவையானது, சிறந்தது என்று இரண்டு நிலைகள் உள்ளன
சமூகப் போக்கு தேவையானதை அங்கீகரித்துக் கொண்டு, சிறந்ததைப் புறந்தள்ளுகிறது. இதனால் சமூகத்தில் சிறந்தது ஒதுக்கப்படுகிறது.
சமூகப் போராளியின் கடமை சிறந்ததைத் தேவையானதாக மாற்றுவதாகும்’’
-புத்தர்
சிகரம் படத்தில் வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடல் ரெக்கார்டிங் முடிந்தவுடன் பேசினார்களாம் இப்படி
SPB:ஒரு முறையாவது காதலிக்காதவன் இப்படி எழுத முடியாது.
வைரமுத்து:இருமுறையாவது காதலில் தோற்றவனால் தான் இப்படி பாட முடியும் என்று.
ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.
–அண்ணா
இலக்கியம் பிறப்பது திருத்தும்போதுதான்.அதற்கு முன்பு வெறும் வசனங்களாக மட்டும் இருக்கும்
-அ.முத்துலிங்கம்
வயதாகும்போது புலிகள் வேட்டையாடுவதில் சிரமப்படும். எனவே யானைக்கூட்டத்தை தேடும்.அங்கிருக்கும் யானைக்குட்டியின் கால்களை கடித்துவிட்டு ஓடிவிடும்.நடக்க முடியாத குட்டியை காப்பாற்ற முடியாமல் யானைக் கூட்டம் சென்றபிறகு அதை புலி பதம்பார்த்துவிடும்.
-கோதண்டம் எழுதிய கட்டுரையிலிருந்து
No comments:
Post a Comment