Tuesday, 26 May 2020

25-5-2020

[: ஒரு ஆவணக்குறிப்பில் 1782ம் ஆண்டு உப்புவரி மூலம் 29 இலட்சமும்,1785ல் அது 62 இலட்சமுமாக வருமானம் உயர்ந்தது.இதை தொடர்ந்து 1869ம் ஆண்டு இந்தியாவின் குறுக்கில் கிழக்கு மேற்காக 2500 கி.மீ க்கு புதர் வேலியை அமைத்தார்கள்

- உப்பு வேலி நூலிலிருந்து


ஏற்றிவிட்டுத்தான்
கரைத்தாள்.
கூழ் குடிக்கும் ஆசையில்
இறங்கி வந்துவிட்டது
வளையல்

-கண்மணி குணசேகரன்


திட்டுவதற்கு உபயோகிக்கும் வார்த்தைகள் தீர்ந்தனவே ஒழிய,திட்டுகின்ற கோபமும் ரோசமும் தீராது
- ஜெயகாந்தன்



: கறுத்த கண்ணனுக்கு தங்கச்சி பேரு அன்னக்கொடி.கொணத்துல தங்கமா இருந்தவா உருவத்தில கன்னங்கரேர்னு..அழகு கறுப்புன்னு ஒண்ணு இருக்கு.அவ பாவம் எழவு கறுப்பு. ஒலக்கைக்கு குஞ்சம் வச்ச மாதிரி ஒடிசலா வேற இருப்பா.அவ சிரிச்சா பளீர்னு தெரியிறது பல் இல்ல; ரெண்டு பல்லுக்கு மத்தியில் இருக்கிற விரிசல்தான். 

அதுல ஒரு ஈயோ எறும்போ இடைஞ்சல் இல்லாம போயிட்டு வரலாம்.கொஞ்சம் கூன் போட்ட முதுகு.அது வேற வருசா வருசம் அளவு மாறிக்கிட்டேயிருக்கு. எப்பேர்ப்பட்ட தையக்காரனும் அவ லவுக்கையை தச்சிர முடியாது..

-வைரமுத்து
கள்ளிக்காட்டு இதிகாசம்

No comments:

Post a Comment