1477. இதுதான் இந்து தர்மமாம்!
================================
இந்து தர்மம் என்றால் என்ன? என்பதை கோல்வால்கர் தன்னுடைய நூலில் எழுதுகிறார் (கோல்வால்கர்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய குருநாதர்). ஆங்கிலேய அதிகாரி ஒருவர் தென்னாட்டில், தெருவில் தன் பியூன் பின்தொடர நடந்து வந்தாராம். அவருடைய ஏவலாளர் (அதாவது பியூன்) பிராமண வகுப்பைச் சார்ந்தவராம். எதிரில் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கிற ஒரு அதிகாரி வந்தாராம் அவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவராம். அவர் இந்த ஆங்கிலேய அதிகாரியிடம் கைகுலுக்கி விட்டு பின்னால் நின்ற அந்த பியூன் பிராமணரிடம் காலைத்தொட்டு வணங்கினாராம். இப்போது இந்த ஆங்கிலேய அதிகாரி கேட்டிருக்கிறார் "நான் உன்னுடைய அதிகாரி என்னைக்கூட நீ கையை தொட்டுதான் குலுக்கினாய் ஆனால் அவர் காலைத் தொட்டு வணங்குகிறாயே?" என்று கேட்டபோது "இது தான் எங்களுக்கு இந்து தர்மம் நாங்கள் பிராமணர் காலில் விழவேண்டும்" என்று அவர் சொன்னாராம். இதை பெருமையுடன் கோல்வால்கர் தன்னுடைய "Bunch of Thoughts" என்னும் புத்தகத்தில் 138வது பக்கத்தில் எழுதியிருக்கிறார். ஆம் பார்ப்பனர்களை மதிப்பதுதான் இந்து தர்மம் என்று சொல்லித் தருகிறார்கள்.
நன்றி.குமரகுரு
No comments:
Post a Comment