Monday, 11 May 2020

Kapata Nataka Paatradhari.. (Kannada)*மணி



பீட்சா,பட்டனத்தில் பெட்டி மாதிரி ஒரு அமானுஷ்ய கதை.இயல்பான ஒரு ஒன்லைன் கதை.பொதுவா பேய்னாலே பழிவாங்கும்.பங்களா, அரண்மனை என இதில் வித்தியாசமாக ஆட்டோவில்.

கதை:

வேலைவெட்டி இல்லாத இளைஞன் ஹீரோ பாலுநாகேந்திரா.வீட்டில் திட்டு வாங்கும் பையன்.கண்டதும் காதல் என வழக்கமாக செல்கிறது. பையனுக்காக அப்பா சேர்த்து வச்ச காசில் ஆட்டோ வாங்கி தருகிறார்.
அந்த ஆட்டோவில் பயணிக்கும் அனைவரும் ஆட்டோவில் உள்ள பேயால்  அடிவாங்கி,பயமுறித்தி பாதிலயே இறங்கி போய்டுறாங்க.
ஆனால் காதலி வந்தால் மட்டும் பேய் ஒன்னும் செய்வதில்லை.சரி பெண்ணென்றால் பேயும் இரங்கும் போல.

அப்பதான் இவன் வண்டியில் வந்த 3 பேர் காணாமல் போய்டுறாங்க. அவங்களை காணோம்னு ரவுடி கம்ளைன்டு கொடுக்க இவனை கூப்பிட்டு விசாரிக்கிறாங்க. இவனும் ஆட்டோவில் ஒரு பேய் இருக்கு..இந்த 3 பேரும் அப்பிடித்தான் திரும்பி வருவதற்குள் மாயமாகிட்டாங்கனு விஜய் சேதுபதி மாதிரி கதை சொல்ல போலிஸ் நம்பி விட்டிடுது.

உண்மையில் அந்த காதலி தான் மூனு பேரையும் ப்ளான் பன்னி ஆட்டோவில் வைத்து கொலை செய்திருக்கும்.காரணம் அவளின் தோழியை வன்புணர்வு செய்து கொன்றதால் அதற்கு பழிதீர்க்க கொல்கிறாள்.எல்லாம் முடிந்து ஆட்டோவில் வழக்கம்போல் செல்லும்போது அவள் தோழி உயிரோடு இருப்பதை பார்க்கிறான். குழப்பமாகிறான்.போலிஸ் ஸ்டேசன் போனால் அவள் காதலி இறந்ததாக அவள் புகைப்படம் போலிசிடம் இருப்பதை பார்த்து பயந்து போயிடுறான்.அப்புறம் என்ன ஆச்சு, ஏன் காதலி கொலை செய்தாள் என்பது நெகிழும்படியான ஒரு ட்விஸ்ட்

#டின்ஜ்

*குழப்பமான கதைக்கு தெளிவான திரைக்கதை பலம்.இசையும் ஒளிப்பதிவும் நன்று.

*படம் 1-45 மணி நேரம்.முதல் 45 நிமிசத்தை வழவழானு போகுது. அதை கொஞ்சம் சுவாரஸ்யபடுத்தி இருக்கலாம்.

*கடைசியில் அடுத்தடுத்து எதிர்பாராத ட்விஸ்ட் விரிவது நன்று.

*பாகவதர் படம் மாதிரி அடிக்கடி பாட்டு வருவது உறுத்தல்.ஹீரோ சொல்வதையெல்லாம் போலிஸ் எப்படி நம்புறாங்கனு தெரியல.
இறந்துபோன அந்த 3 பேரை என்ன செய்தார்களென தெரியல.

*கடைசியா நான் ஈ மாதிரி ஹீரோவுக்கு ஆட்டோ துணையா இருக்கு.

சில பல குறைகள் இருந்தாலும் படம் பார்க்கலாம்.ஒரு த்ரில் அனுபவம்.

-மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment