கலைஞர் எனும்
-வாஸந்தி
இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து படித்தபோது 1977முதல் 1990 வரை நடந்த விசயங்களை இப்புத்தகத்தில் படிக்க நேர்ந்தது.நான் அறியாத பல விஷயங்களை தெளிவாய் அறிய முடிந்தது.அதிலிருந்து சுருக்கமாக..
இலங்கை தமிழர் விவகாரத்தில் எம்.ஜி.ஆர்-கலைஞர் இருதரப்பினரும் போட்டி போட்டுக்கொண்டு இவ்விஷயங்களை கையில் எடுத்தனர்.
1977 ல் ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நடந்த வன்முறையை அடுத்து 24 ஆகஸ்டில் பேரணி கூட்டி சென்னையில் அடைப்பு அறிவித்தது.
பத்தாயிரம் பேர்க்கு மேல் சென்னையில் பேரணி கூட்டினார் கலைஞர்.
1981ல் யாழ்பாண நூலகம் தீக்கிரையானது அதிர்ச்சியளித்தது. எம்.ஜி.ஆரும்,கலைஞரும் தனித்தனியே பிரதமரை சந்தித்து தமிழர்களை பாதுகாக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றியது. இம்முறை எம்ஜிஆர் செப் 12ல் முழு அடைப்பு அறிவித்தார்
தனபதி எனும் தமிழ்நாட்டு சுற்றுலாப்பயணி இலங்கையில் இறந்தார்.அவருக்கு கலைஞர் ரூ3000 அறிவித்தார்.அப்போது திமுகவினர் இலங்கை ஹை கமிசன் கட்டிடத்தை தாக்கியதால் கைதுசெய்தனர்.பின் கலைஞரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்க இறுதியில் எம்ஜிஆர் அக்குடும்பத்துக்கு 25000 தந்தார்.
கலைஞரின் பணத்தை அக்குடும்பத்தினர் திருப்பி அளித்தனர்.
1983ல் இனப்படுகொலை கண்டித்து அன்பழகனும்,கலைஞரும் ராஜினாமா செய்தனர்.இலங்கை அரசின் சட்டதிருத்தத்தை தீயிட்டனர்.
1984 மே4ல் டெசோ மாநாடு மதுரையில் கூட்டினார்
பிரபாகரனுக்கும் கலைஞருக்கும் நேரிடை தொடர்பு இல்லை. எம்ஜிஆர் தான் எல்.டி.டிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் பிரபாகரனிடம் கலைஞரிடம் எந்த உதவியும் பெறக்கூடாது என சொல்லியிருந்ததால் கலைஞர் உதவ முன்வந்தபோது கூட பிரபாகரன் ஏற்கவில்லை.கலைஞரும் இலங்கை தமிழ் மக்களின் உணர்வுகளை மேடை தோறும் பேசி வந்தார்.
கலைஞரின் நண்பரான டெலோ தலைவர் சிறீ சபாரத்தின்த்தை கொல்லக்கூடாது என பேபி சுப்பிரமணியத்திடம் சொல்லியும் சபா துன்புறுத்தப்பட்டு 1986ல்கொல்லப்பட்டது கலைஞருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.அவ்வளவு சொல்லியும் கொன்றது கோபத்தை ஏற்படுத்தியது.
அதே ஆண்டு(1986)ல் கே.எஸ் ராதாகிருஷ்ணன் திருமணத்தில் பிரபாகரனும்,பேபி சுப்ரமணியமும் வந்திருந்தனர்.வாழ்த்துரையில் சூசகமாக இதனை கண்டித்தார்.
ராஜீவ் இலங்கை தமிழர்களிடம் ஒப்பந்தமிட எம்.ஜி.ஆரிடம் கேட்டார். ஆனால் பிரபாகரன் எம்.ஜி.ஆரின் பேச்சுக்கு இணங்காததால் டிஜிபி மோகன்தாஸிடம் சொல்லி ஆயுதங்களை பறிமுதல் செய்தார். இதனை கருணாநிதி கண்டித்தார்.
இருப்பினும் இந்த ஒப்பந்தம் எம்.ஜி.ஆர் இல்லாமல் கையெழுத்தானது.அவர் 1987ல் இறந்துவிட்டதால் ஒரு சகோதரனை இழந்ததாக பிரபாகரன் சொன்னார்.
1989ல் விபி சிங் பிரதமரானது அமைதிப்படையை திரும்ப பெற்றார்.
1989ல் முதல்வரானதும் போராளிகளின் நடவடிக்கையை கண்டும் காணாது இருந்தார்.1990 பட்டப் பகலில் சென்னையில் கே.பத்மனாபா மற்றும் 12 கூட்டாளிகளை புலிகள் கொன்று விட்டு வேதாரண்யம் மார்க்கமாய் தப்பிச்சென்றனர்.
இதற்கு திமுகதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.இதை கலைஞர் வன்மையாய் கண்டித்தார்.புலிகள் மீண்டும் துரோகம் செய்துவிட்டதாய் நினைத்தார்.இதனை முன்வைத்து சட்டம் ஒழுங்கு.நடவடிக்கை எடுக்க காரணமாய் இருந்தது.பின் ராஜீவை கொன்றதும் அவரை பதைபதைக்க வைத்தது.புலிகள் இந்த அளவுக்கு செல்வார்கள் என நம்பவில்லை என்றார்.எதிர்கட்சியினர் திமுகவும் உடந்தை என அவதூறு சொன்னதால் அப்போதைய தேர்தலில் ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றியடைந்தனர்.பின்னர் ஜெயின் கமிஷனில் திமுகவுக்கும் இப்படுகொலைக்கும் சம்பந்தமில்லை என உறுதிப்படுத்தியது.
தொடர்ந்து வாசிப்போம்
No comments:
Post a Comment