பரிச்சயமில்லாதவர்களிடமிருந்து எனக்கு வரும் கடிதங்களைப் பெரும்பாலும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். உங்கள் கையெழுத்திட்ட போட்டோ ஒன்று அனுப்புவீர்களா?
2. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். நான் எழுதியுள்ள கள்ளும் முள்ளும் என்கிற காவியத்தை உங்கள் மேலான பார்வைக்கு அனுப்ப விரும்புகிறேன். அனுப்பலாமா?
3. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். நான் ஆண்டிப்பட்டி இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் ஃபிட்டர் தொழில் பரீட்சை பாஸ் பண்ணிவிட்டு வேலையில்லாமல் இருக்கிறேன். உங்கள் தொழிற்சாலையில்....
பரிச்சயமில்லாதவர்கள் நேரில் வந்து சந்திக்கும்போது அவர்கள் கேட்கும் கேள்விகளும் பெரும்பாலும் மூன்று வகைப்படும்.
1. உங்களுக்கு எல்லாம் எப்படி ஸார் டயம் கிடைக்கிறது எழுதுவதற்கு?
2. இதுக்கெல்லாம் எவ்வளவு கொடுப்பான் உங்களுக்கு?
3. நான் படிக்கிறதில்லை. என் ஒய்ஃப்தான் படிப்பாள் இதெல்லாம்....
உண்மையான ரசிகர்கள் கடிதம் எழுதுவது அல்லது நேரில் வந்து சந்திக்கிற ஜாதியில்லை.
No comments:
Post a Comment