MILITARY REMINISCENCES - EXTRACTED FROM A JOURNAL OF NEARLY FORTY YEARS' ACTIVE SERVICE EAST INDIES. BY COLONEL JAMES WELSH,
OF THE MADRAS ESTABLISHMENT - என்கிற புத்தகம். அதிலிருந்து சிறிய பகுதி: 1830 வெளி வந்த புத்தகம்.
தொடர்ந்து மூன்று நான்கு மாத முற்றுகைக்கு பிறகு 24-5-1801 அன்று பஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்தது. இது கட்டப்பொம்மனின் மரனத்திற்க்கு பிறகு.
எப்படி கோட்டை வீழ்ந்தது, என தெளிவாக விவரித்திருக்கிறார். ஒரு சினிமா படத்துக்கு தேவையான அனைத்து விபரமும் இருக்கிறது.
பாளையக்காரர்களின் வீரத்தையும் தீரத்தையும் மிக உயர்த்தி எழுதியிருக்கிறார் இந்த ஆங்கிலேய போர்வீரன். இப்படிச் சொலிக் கொண்டே வரும் அந்த பிரித்தானிய போர்வீரன், அவனது புத்தகத்தில், இறுதியாக ஒரு சம்பவத்தைச் சொல்லி இந்தப் பகுதியை முடிவு செய்ய விரும்புகிறேன் என்கிறான்.
“ இறுதிகட்ட போரில், ஒரு முதிய பாளையக்காரர் படுகாயம் அடைந்தார், அந்த நேரத்தில், அவர் எங்களிடம் “உங்கள் படைத் தலைவர் மெகோலேயிடம் கொண்டு செல்லுங்கள்” என்றார்.
நாங்களும் அவரை படைத் தலைவருக்கு முன் ஒரு நாற்காலியில் அமர்த்தினோம், உடல் முழுவதும் படுகாயம் அடைந்திருந்த அந்த மூத்த மனிதர் கூறினார் “ நான் இங்கு வந்தது, ஒரு பாளைக்காரன் எப்படி மரணிப்பான் என்பதை ஆங்கிலேயர்களுக்கு காட்டத்தான்” என தன் இரு கைகளாலும் தன் மீசையை முறுக்கினார், அப்படியே உயிர் பிரிந்து தரையில் விழுந்தார்.
-படித்தது
No comments:
Post a Comment