பாக்கெட் கடிகாரம் ஒன்றை திருடி விட்டதாக ஒருவன் குற்றம் சுமத்தப்பட்டான். கடிகாரத்தை திருட்டுக் கொடுத்தவர் கொஞ்சம் பார்வை குறைபாடு உள்ளவர். மேலும் கண்ணாடி அணிந்தால் மட்டுமே அவரால் பார்க்க முடியும். இந்த ஆளை உங்களால் அடையாளம் காண முடிகிறதா இந்த ஆள் தான் உங்களது கடிகாரத்தை எடுத்துக் கொண்டாரா என்று நீதிபதி கேட்டபோது,அந்த மனிதர் இது கொஞ்சம் கடினமானது.
ஏனெனில் நான் கண் கண்ணாடி இல்லாமல் சரியாக பார்க்க முடியாது. மங்களாகத்தான் தெரியும். ஆகவே திருடியவர் இந்த ஆள் தானா இல்லையா என்று சரியாக கூற முடியாது என்றார். மேலும் இதனை கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லாததால் அந்த மேஜிஸ்ட்ரேட் திருடியவரை விடுதலை செய்யும்படி ஆயிற்று.
நீதிபதி திருடிய வருடம் நீ போகலாம் என்றார். அவன் ஆச்சரியமாய் விழித்தான். இப்போது நீ போகலாம் என்று இரண்டாவது முறை கூறினார். உடனே அவன் அப்படியானால் நான் இந்த கடிகாரத்தை வைத்துக் கொள்ளலாமா? என்று கூறினான்.
நீங்கள் அவர்கள் கூறுவதை கேட்டுக் கொண்டே இருந்தால் முடிவில் அவர்களது வேதாந்த தத்துவங்கள் எல்லாம் பயனற்றவை என்பதை நீங்கள் கண்டு கொள்கிறீர்கள். முடிவில் உண்மையை காட்டிக் கொடுக்கின்ற ஏதோ ஒரு கேள்வியை கேட்டு விடுவார்கள்
-ஓஷோ
No comments:
Post a Comment