Thursday, 8 September 2022

மாசேதுங்


ஒருநாள் வயலில் நெற்கதிர்களைக் காயவைத்துக் கொண்டிருந்த சமயம்... திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது ஷன்செங்... அவர் மகனிடம், உடனடியாக கதிர்களை அப்புறப்படுத்து. இல்லையென்றால் மழை நாசம் செய்துவிடும்’’ என்றார். அவனும், விரைவாக கதிர்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தான். திடீரென்று, அவனைக் காணவில்லை. தந்தை, வயல் முழுவதும் தேடினார். எங்குத் தேடியும் அவன் கிடைக்காததால்... ஷன்செங், மற்ற வேலையாட்களைவைத்து நெற்கதிர்களைப் பாதுகாப்பாக வீடு கொண்டுபோய்ச் சேர்த்தார்.

மழை நின்றது... மகன் வந்தான். எங்கு சென்றாய்? உன்னிடம் நான் என்ன சொன்னேன்’’ என்று தந்தை கோபத்துடன் கேட்டார். அப்பா... நம்மிடம் வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள், இந்த வேலையைச் செய்வார்கள். ஆனால், பக்கத்து நிலத்தில் இருப்பவர்கள் மிகவும் ஏழைகள். அவர்களுக்கு உதவவே அங்குச் சென்றேன். விளைபொருள்கள் நாசமாகிவிட்டால் அவர்களால் ஈடு செய்ய முடியாது. குத்தகை பணம்கூட கொடுக்க முடியாது’’ என்று நிதானமாகப் பதில் சொன்னான், அவன். உனக்கு உன்வீடு முக்கியமா... இல்லை, அவர்களுடைய வீடு முக்கியமா? என்று மீண்டும் கோபத்துடன் கேட்டார் ஷன்செங். ‘‘அவர்கள் வீடுதான் முக்கியம்’’ என சட்டென சொன்னான் அந்த சிறுவன்  அவனே மாவோ என்ற மா சே துங் ..

நினைவுதினம் #செப்டம்பர்9
#தனக்கென வாழ்வது இறகைவிட #எளிதானது மக்களுக்காக வாழ்வது மலையைவிட #கடினமானது....

No comments:

Post a Comment