நடந்த தடங்களில்
பின்னோக்கி நடப்பதற்கும்,
பாதையோரத்தை
அன்போடு பார்ப்பதற்கும்,
தொடங்கிய இடத்திற்கு
நன்றி சொல்வதற்கும்,
குரைக்க எழுந்த நாயை
அமர்த்துவதற்கும்,
எதிர்பட்டவர்களின்
இன்முகம் காண்பதற்கும்,
ஒரு காலம்
வாய்க்கும்.
அதை முதுமை
என்கிறோம்..!
-மகுடேசுவரன்
No comments:
Post a Comment