அப்பாவின் மாத்திரைகள்
அருவருப்பான
என் தொண்டைக்குக் கீழிறங்கும்
மாத்திரைகளை கவனி மகனே
அவை கூறுகின்றன
உன்னை யாரும் கவனிப்பதில்லை
உன்னை எல்லோரும் கைவிட்டார்களென்று
என் இனிய அருவருப்பான
தொண்டை கொண்ட தகப்பனே
நீ வேளைக்கு வேளை
விழுங்குவது மாத்திரைகளை அல்ல
உன் கசப்பான மகனை
-ச.துரை
No comments:
Post a Comment