Friday, 3 March 2023

துரை


அப்பாவின் மாத்திரைகள்

அருவருப்பான
என் தொண்டைக்குக் கீழிறங்கும்
மாத்திரைகளை கவனி மகனே
அவை கூறுகின்றன
உன்னை யாரும் கவனிப்பதில்லை
உன்னை எல்லோரும் கைவிட்டார்களென்று

என் இனிய அருவருப்பான
தொண்டை கொண்ட தகப்பனே
நீ வேளைக்கு வேளை
விழுங்குவது மாத்திரைகளை அல்ல
உன் கசப்பான மகனை

-ச.துரை

No comments:

Post a Comment