#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-7
Book-14
Pages-640
அம்பேத்கரின் வாழ்வும் தத்துவங்களும்
-ஏ.எஸ்.கே
வேறு ஏதேனும் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்திருந்தால் தனக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுக் கொண்டு நிம்மதியாக தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்திருப்பார். அல்லது நல்லதொரு பதவி கிடைத்தவுடன் நடப்பது நடந்தே தீரும்
எல்லாம் விதி என நினைத்துக் கொண்டு நிம்மதியாய் எதை பற்றியும் கவலைப்படாமல் இருந்திருப்பார்.
ஆனால் வரலாற்றில் சில மேதைகள் மட்டுமே தனக்கு பின்னால் வரும் சந்ததியினை நினைத்து பார்ப்பார்கள்.. தனக்கு கிடைத்த வாய்ப்புகள் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணிப் பார்ப்பார்கள் .கீழ் நிலையில் உள்ள மக்களை எப்பாடுபட்டேனும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர நினைப்பார்கள். அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவர் தான் அண்ணல் அம்பேத்கர் இந்த புத்தகத்தில் அவர் வாழ்க்கை வரலாற்றையும் அவர் சமூக நலனுக்காக தீண்டாமைக்கெதிராக எவ்வாறெல்லாம் போராடினார் என்பதை விரிவாக அலசும் நூல் தான் இது.
ஜாதி ஏற்பட்டது எப்படி எனும் கட்டுரையில் பொருள் உற்பத்தி சக்திகளுக்கு இடையே வளர்ச்சியின் காரணமாக சமுதாயத்தில் வேலை பிரிவினை ஏற்படுகிறது. வர்ணப் பிரிவினையை பயன்படுத்தி ஜாதிகள் உருவாகிவிட்டன. ஜாதிகளில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேற்றுமைகள் மனிதனால் ஏற்பட்டவை ஆகும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அப்போதைய காங்கிரஸ் கட்சி என்னென்ன செய்வது என்பதை பட்டியலிட்டு உள்ளார்.
அவரின் அரசியல் பிரவேசத்தில் முக்கியமானது சவுதார் குளம் தீண்டப்படாதவர்களால் அசுத்தப்பட்டது என்று கூறி ஜாதி இந்துக்கள் அதை புனிதப்படுத்த பசிச்சாணியையும்,கோமயத்தையும் கலந்து அதில் கரைத்தனர். இதனால் வெகுண்டு எழுந்த அம்பேத்கர் எதிர்த்தார். 1924 தீண்டப்படாதோர் குளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தீர்மானத்தை மகா முனசிபாலிட்டி 1927 ஆகஸ்ட் நாலாம் தேதி ரத்து செய்தது.அம்பேத்கருக்கு விடப்பட்ட சவாலாக இருந்தது. சத்தியாகிரகம் செய்து தீண்டாமை கொள்கையை அறவே ஒலித்திட போராட்டங்களை செய்தார்.
1930 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை மிகவும் பெருமையாக நினைப்பார். ஏனெனில் இதுவரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை, எதிர்கால சரித்திரத்தை யாரும் வழங்கியது இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் கொடுமைகளை பதிவு செய்யும் வாய்ப்பாக சைமன் கமிஷனர் கலந்து கொண்டார்.
பூனா ஒப்பந்தத்தில் என்னென்ன கோரிக்கைகள் இருந்தன என்பதை விரிவாகவும் தெளிவாகவும் புத்தக அளசி உள்ளது.
அரசியல் அதிகாரத்துக்கு பங்கு இல்லை என்றால் தாழ்த்தப்பட்ட சமுதாய முன்னேறுவது கடினம் என்று உணர்ந்த டாக்டர் அம்பேத்கர் 1936 ஆம் ஆண்டு சுயேட்சை தொழிலாளர் கட்சியை துவக்கினார். அதனை தொடர்ந்து பல போராட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக பல்வேறு நிலைபாடுகளை எடுத்து போராடியும் உள்ளார்.
அன்றும் சரி இன்றும் சரி ஒரு உண்மையான சமூகம் என்பது ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல .மாறாக உடனடியாக குறிப்பான பல்வேறு லட்சியங்களை கொண்ட சில குழுக்களின் தொகுப்பே சமூகமாகும் .ஆனால் இந்து சாதிய முறைக்கும் இந்து அமைப்பு இல்லாத வர்க்க முறைக்கும் இடையிலான வேறுபாட்டை இந்த ஒப்பிட்டு மூலம் மறைத்துக்கொண்டு இவ் விசயத்தில் பேசுவதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை என கூறி விட முடியாது. ஆகவே சிக்கல் மிகப்பெரியது என்பது உண்மை
#ரசித்தது
*கடவுள் தீண்டாமையை ஏற்பாரே ஆனால் அக்கடவுளை கடவுள் என்று நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். ஏதோ பண்டைய காலத்தில் உயர் ஜாதியினர் எதெச்சாதிகார செயலினால் தீண்டாமை ஏற்பட்டது ஒரு வியாதி.இவ் வியாதியை அறவே ஒழிக்க வேண்டும்.
*ஆயிரம் ஆண்டு அடிமையாய் தன்மானம் இழந்து இருப்பதைவிட, அரை நிமிசம் வாழ்வாங்கு வாழ்ந்து அமரர் ஆகலாம்
*தனித்தொகுதி என்பதை தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் அளிக்கவில்லை. இந்திய கிறிஸ்தவர் ஆங்கில இந்திய ஐரோப்பியர் முஸ்லிம்கள் சீக்கியர் ஆகிய அனைவருக்கும் அளித்தார் இருக்க ஏன் காந்தி மட்டும் பிரித்து இந்த நிலைமை எடுத்துள்ளார் எனக் கூறியிருக்கிறார்.
*புத்தர் தலைவிதியையோ பிறவியில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதையும் எள்ளளவும் நம்பவில்லை. மாறாக இவைகளை எதிர்த்து வந்தார்.
*எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று முறைப்படுத்தப்பட்ட கூற்றுகளே மதமும் நீதிநெறியும் ஆகும். வாழ்க்கை போராட்டத்தில் தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் ஆன பற்கள் நகங்கள் கொம்புகள் கூச்சல்கள் போன்ற கருவிகளை போலவே நாம் நீதிநெறி விளக்கத்தை கருத வேண்டும்
தீண்டாமை வெளிச்சம் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை குறித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசியல் கட்சிகள் எவ்வாறெல்லாம் உதவி செய்தது எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தனர் என்பது பற்றி எல்லாம் விரிவாக கூறியுள்ளார் மனசு உறுதியில் எவ்வாறெல்லாம் ஜாதிகளை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தாழ்த்தப்பட்டவர்களை எவ்வாறு இழிவாக நடத்துனர் என்பது குறித்து ஒவ்வொரு புதிய தகவல்களையும் அவர் முன்மொழிகிறார். நூலின் பிக்சர் கையில் அவர் ஆற்றிய உரைகளையும் தொகுத்து கூறியுள்ளனர்.
இறுதி காலங்களில் தன்னை துன்புறுத்துவதும் மருத்துவ செய்வதும் தாழ்த்தப்பட்ட மக்களை இன்னும் முன்னேற்ற முடியவில்லை என்று தன் இயலாமையை வெளிப்படுத்தி உள்ளார் அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போய்விட்டது.. எனக்கு பின்னல் இந்த இயக்கத்தினை பெறுபவற்று தொடர்ந்து நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment