30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-7
Book-13
Pages-482
பெரியாரியம்-சமுதாயம்
-கி.வீரமணி
எனக்கு தெரிய நீண்ட நாள் நான் பார்த்த வரையிலே இந்தியாவிலேயே மேற்கோள் காட்டாமல் தன்னுடைய கருத்து என்ன என்று சொல்லக்கூடிய துணிச்சல் உள்ள ஒரே ஒரு தலைவர் உண்டு என்றால் அது பெரியார் மட்டுமே
-ஏ எஸ் பி ஐயர்
கி. வீரமணியின் புத்தகங்கள் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது அவரின் வாழ்வியல் சிந்தனைகள் தான்.. எண்ணற்ற புத்தகங்களை படித்து கருத்தாலும், விவாதத்தாலும் நல்ல பல அறிய கருத்துக்களை கொடுத்திருப்பார். அந்த வகையில் தற்போது வாசித்து முடித்த புத்தகம்தான் பெரியாரியம் சமுதாயம் என்ற நூல். பெரியார் குறித்த அவர் சிந்தனை குறித்து அவர் புரிந்து கொண்ட விஷயங்களை உரை கோர்வை மூலம் நமக்கு ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொடுத்திருக்கிறார் .
இப்பொழுது எல்லாம் கட்சியை ஆரம்பிப்பது என்றால் கட்சியை ஒருவர் நீக்கிவிட்டால் கட்சி ஆரம்பிப்பது என்று காண்கிறோம். ஆனால் அடிப்படைக் கொள்கைகள்
(Principles)பாலிசி (policy)
என்றால் அந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த கையாளப்படுகின்ற முறைகள் செயல் திட்டங்கள். எனவே ஒரு இயக்கமாக இருந்தாலும் அல்லது கொள்கை வழி நடத்தக்கூடிய அமைப்பாக இருந்தாலும் அந்த அடிப்படை கொள்கையில் இருந்து விட்டுக் கொடுப்பதோ சமாதானப்படுத்திக் கொள்வது கிடையாது என்று பெரியார் வழியே இந்த புத்தகத்தின் முன்னுரையிலேயே நமக்கு சுட்டிக்காட்டி இருப்பார்.
42 கட்டுரைகளில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய பெரியாரின் கொள்கைகளை சுட்டிக்காட்டி ஒவ்வொரு உரையிலும் நமக்கு சொல்லி இருப்பார். பெரியாரியல் என்பது தன்னுடைய அறிவை உலகத்தார் மதிக்க வேண்டும் என்று சொல்வதற்கோ, அறிவாளிகள் பலர் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கோ அல்ல. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்கிற மனிதப்பற்று மானுட பற்று தான் அவரின் சிந்தனையின் அடித்தளமாக அமைந்துள்ளது என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய தத்துவம் உலகம் ஒப்புக்கொண்டதே ஆகும். மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகிறது. இயற்கையையே ஆராய தடைப்பட்டாகிவிட்டது. எந்த காரியம் ஆனாலும் காரண காரியம் அறிந்து செய். சரியா தப்பா என்பதை அந்த காரண காரியம் அறிவுக்கு ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு. எந்த நிர்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு. தவறு என்றால் கைவிட்டு விட வேண்டும். சரிதான் என்று சொன்னால் உலகமே எதிர்த்து நின்றாலும் முன்னாள் ஒரு அடி எடுத்து வைத்து போக வேண்டுமே தவிர பின்னால் வரவேண்டிய அவசியமே கிடையாது என்று சுயமரியாதை இயக்க தத்துவத்தை சென்னையில் உரையாற்றிய சொற்பொழிவில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
பெண்ணுரிமை குறித்த உரையின் போது மேல் ஜாதிக்காரன் எப்படி கீழ் ஜாதி காரனை அடிமையாக்கினானோ அதுபோல பெண்ணை அடிமையாக்கி விட்டு ஆண் என்பவன் எஜமானன் ஆகி விடுகிறான். தனது குடியரசு இதழில் 1928 -29 ஆம் ஆண்டுகளில் பல்வேறு கட்டுரைகள் பெண்ணியம் சார்ந்து எழுதியுள்ளார். சுயமரியாதை திருமணங்களை வலியுறுத்தியுள்ளார். கற்புக்கரசி என்று சொல்லுகிற மாதிரி எங்காவது கற்புக்கரசன் என்ற வார்த்தையை சொல்லி இருக்கிறானா என்று கேட்பார். விதவைகள் மறுமணம் குறித்து பல்வேறு செய்திகளையும் கலந்து கொண்ட நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
பெண்கள் கிராப்பு வைத்துக் கொள்ள வேண்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே இல்லாமல் ஒரே சீருடையாக இருக்க வேண்டும். பெண்களும் பேண்ட் வேண்டும். பொது சமையல் கூடங்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் பெண் உரிமைக்காக குரல் எழுப்பியவர் பெரியாரே.
ஜிடி நாயுடுவுக்கு உரிய மரியாதை தனது கண்டுபிடிப்புகளுக்கு தரவில்லை என்று ஒரு பொதுக்கூட்டம் கூட்டி அறிஞர் பெருமக்களை அழைத்து அந்தக் கூட்டத்திலேயே தான் கண்டுபிடித்த பொருட்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் .ஆனால் பெரியார் இந்த கோபம் எல்லாம் கருவிகளிடம் காட்டாமல் அதிகாரத்தின் பக்கம் திரும்பி இருக்க வேண்டும் என்று தன்னுடைய ஆணித்தரமான கருத்தை வலியுறுத்தி சொல்லுகிறார்.
அண்ணா அவர்கள் மே தின உரைகளில் தெளிவாக ஒன்றை சொல்லுவார் கஷ்டப்பட்டு போராடி தொழிலாளி பட்டினி கிடந்து கடைசியில் கூலி உயர்வு பெற்று போனஸ் கிடைத்தால் சாமி தான் கொடுத்தது என்கிறார்கள். சாமி வரமாட்டார் என்றால் மற்றவர் வழியாக புகுந்து வருவார் என்று சொல்லுகிறார்கள் .அந்த அளவுக்கு அவர்களுடைய மூளையிலே விளங்கு போட்டுவிட்டு சாயம் ஏற்றப்பட்டு விட்டது என்பது உண்மைதான்.
#ரசித்தது
*ஒரு கட்சியில் இருந்து விலகி விட்டார் என்றால
கவலைப்படாதீர்கள். குடியிருந்த வீட்டுக்கு கொள்ளி வைக்க நினைப்பவர்கள் வெளியேறுகிறார்கள் என்று மகிழ்ச்சியடைய வேண்டும்.
*பட்டினி கிடந்தால் உனக்கு மோட்சத்தில் இடம் கிடைக்கும் என்று சொல்லி வைத்து விட்டான். உலகம் பொய்யானது மோட்சம் தான் உண்மையான வாழ்க்கை என்று சொல்லி நம் ஆட்களை ஏமாற்றினார்கள். உலக வாழ்க்கை சிற்றின்பம் இதைப் பற்றி கவலைப்படாதே பேரின்பம் என்ற மோட்சத்திற்கு போ என்கிறான் இதையெல்லாம் நம்ப வேண்டாம்.
*மனிதனுக்கு சரீர உழைப்பு தேவை தான். ஆனால் அது உடல் நலத்துக்கு தான் .ஆனால் கஷ்டப்பட்டு எலும்பு முறிய வாழ்நாள் பூராவும் உழைத்தாலும் பலனை உழைத்தவன் அனுபவிக்க முடியாது
*மனுதர்மத்தில் சூத்திரனுக்கு கூலி கொடுத்தாலும் அல்லது கொடுக்காமலும் வேலை வாங்கலாம். ஏனென்றால் அவன் பிறவிலேயே அடிமை. அப்படி கூலி கொடுக்கும்போது எவ்வளவு சாதாரண உணவு கொடுக்க வேண்டுமோ அதுதான் கொடுக்க வேண்டும். கூலியை தாராளமாக கொடுக்கக் கூடாது.
*பிச்சை போடாவிட்டாலும் நாயை பிடித்து கட்டு (பிச்சை எடுக்க ஒருவன் போனான் வீட்டுக்காரர் நாயே அவிழ்த்து விட்டு விட்டான் .அதற்கு பிச்சைக்காரன் சொன்னான்.. ஐயா பிச்சை போடாவிட்டாலும் பரவாயில்லை நாயே பிடித்துக் கட்டினாலே பிச்சை போடுவதை விட மேலாகும் என்று சொன்னானாம்.
*எப்பொழுது நமக்கு அரசியல் பயன்படும் என்று சொன்னால் எப்பொழுது இந்த மக்கள் தெளிவடைகிறார்களோ, எப்பொழுது நமது இனத்தின் பலம் கட்டுப்பாடு ஒற்றுமை இவைகளை பற்றி என்றைக்கு உணர்கிறார்களோ அன்றைக்கு தான் அரசியல் பயன் அளிக்கும்.
இது போல் எண்ணற்ற கருத்து குவியல்களை பெரியார் எவ்வாறெல்லாம் பயன்படுத்தினார் என்பதை வீரமணி அவர்கள் ஒவ்வொரு கட்டுரைகளிலும் முறைகளிலும் முறை கோர்வையாகவும் பயன்படுத்தி நமக்கு மிக அழகாக கொடுத்திருப்பார்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment