Wednesday, 8 January 2025

#கற்கை_நன்றே_10தற்காலத்திய நாகரிக உலகில் மறைந்து போன ஒன்றில் நன்றி சொல்வது என்பது முக்கியமானது.  ஏதேனும் ஒருவர் சந்தேகம் கேட்ட பின் அந்த சந்தேகத்தை தீர்த்து வைக்க பதில் சொன்னவுடன் மரியாதை நிமித்தமாக கூட நன்றி சொல்வதில்லை.சக மனிதர்களுக்கும் நமக்கும் இடையில் பெரிய வெற்றிடத்தை அதிகரித்துக் கொள்கிறோம்இதயபூர்வமாக நன்றியை வெளிப்படுத்துவதற்கு சில வினாடிகள் தான் தேவை என்கிறார் ரூஸ்வெல்ட்.Try Giving Yourself Away என்னும் நூலில் டேவிட் டன் என்பவர் நன்றி பாராட்டும் உக்தியை சொல்கிறார். நாள் முழுவதும் பரபரப்பாக செயல்படும் மனிதர்கள்.. நட்பை வளர்க்கக்கூடிய வாய்ப்புகளை நோக்க வேண்டும். மற்றவர்களின் சந்தோஷத்திற்காகவும் வெற்றிக்காகவும் அவர்களுடைய பிரச்சினைகளையும் நம்பிக்கைகளையும் செவி கொடுத்து கவனிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கும் நிலையற்ற தன்மைக்கும் மத்தியில் பிறருக்கு நம்பிக்கை கொடுக்கலாம். சிறிய உதவிக்கும் நன்றி சொல்வதன் வழியே நமக்கும் அவருக்கும் ஒரு நட்பு பாலம் ஏற்படுகிறது. ரோஜாவின் நறுமணத்தை ஓடும் போது நுகர முடியாது. சற்று நேரம் நின்றால்தான் அதை நுகர முடியும். வாழ்க்கையும் அது போன்றது தான். நின்றால் மட்டுமே கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியும். பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியை தவற விட்டு விடுகிறார்கள். அதற்கு காரணம் அது அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதல்ல; அவர்கள் அதை அனுபவிக்க பொறுமையாக நிற்பதில்லை என்பதுதான்.நற்காலை வணக்கம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment