Sunday, 5 January 2025
Procrastination என்பது ஒரு செயலை உடனே செய்யாமல் தள்ளிப்போடுவது. அது ஒரு உளவியல் சிக்கல். புறத்தில் தடைகளே இல்லாதபோதும் தானாகச் சோம்பலின் காரணமாகவோ, தோல்வி அச்சத்தின் காரணமாகவோ ஒரு செயலைத் தள்ளிப்போட்டபடி இருப்பது.அதைக் கடப்பதற்குச் செயலே மருந்து. செயலின் முழுத் தோற்றமும் தெரியாதபோதும் அதில் இறங்கிவிடுவது நல் விளைவையே தரும். கடலை முழுதாகப் பார்த்த பிறகுதான் கால் நனைப்பேன் என்பதன் அடம் அகத்தின் அழுகலுக்கு வித்திடும். இந்த உளச் சிக்கலுக்கு அழகிய தமிழ்ச்சொல்லை வள்ளுவர் தந்திருக்கிறார். நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்.காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அதிக தூக்கம்.இவை நான்கும் கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் தோணிகளாகுமாம்நன்றி கமலக்கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment