Monday, 6 January 2025

நீராவி எஞ்சின், ரயில் பாதையின் கண்டுபிடிப்பு எல்லாம் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மாற்றமான நிகழ்வு. ரயில் என்பது மனிதனின் கண்டுபிடிப்பில் ஒரு பெரும் ஆச்சரியம் தான், கரும்புகையை கக்கிக்கொண்டு ரயில்கள் வந்த போது மனிதர்கள் அதை கண்டு அஞ்சி ஓடிஒளிந்திருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு உலகம் முழுவதும் ரயில்கள் வந்துவிட்டன. இந்த வரைபடத்தில் வட ஆப்பிரிக்க நாடுகளில் ரயில்கள் இல்லாமல் இருப்பது தெரிய வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சரக்கு போக்குவரத்தில் 40% இன்றைக்கும் ரயில்களின் மூலமே நிகழ்கிறது. உலகம் முழுக்க 11,48,186கிமி துரம் ரயில்களால் இணைக்கப்பட்டுள்ளன, அதில் இந்தியாவில் மட்டும் 68,584 கிமி துரத்திற்கும் ஊர்கள் ரயில்களின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இரயில் பாதைகள் உலகம் முழுவதும் உள்ள சமூகங்கள், பொருளாதாரங்கள் மற்றும் நிலப்பரப்புகளை மறுவடிவமைத்துள்ளன, இன்றைக்கும் ஒரு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து செல்லும் ரயில் பயணங்கள் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.-,அ.முத்துகிருஷ்ணன்

No comments:

Post a Comment