கெடுவாய்ப்பாகப் பல நேரங்களில் நாம் விரும்புவதுபோல வரலாறு அமைவதில்லை.
பொதுவாக, கடற்கரையிலிருந்து கடல் நோக்கிச் செல்லச் செல்ல சீராக கடலின் ஆழம் அதிகரித்துச் செல்வதாக நாம் கருதுகிறோம். உண்மையில் கடலலைகள் தாலாட்டும் நீரின் எல்லையிலிருந்து நிலத்தின் விளிம்பு பல கிலோமீட்டர்கள் உள்ளே தள்ளியிருக்கும். இதனை காண்டினென்டல் ஷெல்ப் (continental shelf) என்பார்கள். இந்த காண்டின்னென்டல் ஷெல்புக்கு அப்பால்தான் கடல் ஆழம் மிக அதிகமாக இருக்கும். இந்த காண்டினென்டல் சரிவு (continental slope) தொடங்கும் இடத்தையே புவியியல் ரீதியாக நிலத்தின் எல்லையாகக் கொள்ள முடியும். (விவரப்படம் பின்னூட்டத்தில்)
இவ்வாறு எடுத்துக்கொண்டால் நிலவியல்ரீதியில் இந்திய நிலப்பரப்பு இலங்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. ஆனால், அதற்கு அப்பால் continental slope தொடங்கிவிடுகிறது. அதாவது இலங்கையைத் தாண்டி எந்த கண்டமும் இப்போது கடலில் புதைந்து கிடக்கவில்லை. மனிதன் தோன்றிய சில இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பும்கூட அப்படியான நிலப்பகுதி எதுவும் இருந்ததற்கான தடையங்கள் எதுவும் நம்மிடையே இல்லை.
இப்படி இருக்க, சங்க இலக்கியத் தடங்களைத் திரித்துப் பொருள்கொண்டு கற்பனையான ஒரு குமரிக் கண்டத்தை உருவாக்கி அதுதான் உலகின் மையமென்றும் அங்கேதான் மனித சமூகம் தோன்றிப் பரவியது என்றும் தமிழர்கள்தான் ஆதி மனிதர்கள் என்றும் தமிழ்தான் முதல் மொழியென்றும் கதைப்பது நமக்கு நாமே சொறிந்து விட்டுக்கொள்ள மட்டுமே பயன்படலாமேயன்றி, எந்த நிலவியல், மொழியியல், மானுடவியல் தரவுகளும் இந்த கருத்துக்குத் துணையாக இல்லை.
படத்தில் தெரிவது கடல்கள் இல்லாத புவியின் தரைப்பகுதி.
No comments:
Post a Comment