Thursday, 2 January 2025

கற்கை நன்றே-2


உலகில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். செய்பவர்கள், பார்ப்பவர்கள், வெறுமனே இருப்பவர்கள்.

 முதல் பிரிவில் இருப்பவர்கள் 'செயல் வீரர்' என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆர்வமும் உற்சாகத்துடன் எதையாவது புதிதாக செய்து கொண்டே இருப்பார்கள். அது வெற்றி பெற வேண்டும் என முழுமையாய் நம்புவார்கள். தோல்வி ஏற்பட்டாலும் துவண்டு விடமாட்டார்கள். 

இரண்டாவது வரும் பிரிவினர் ''பார்ப்பவர்கள்' புதிய முயற்சியில் ஆர்வம் இருக்கும். அதே சமயத்தில் தயக்கமும் இருக்கும். புதிய முயற்சியில் ஒருவர் வெற்றி பெற்று விட்டால் உடனே இவர்கள் அதனை தொடர்ந்து செய்யத் தொடங்கி விடுவார்கள். வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சியும் தோல்வியடைந்தால் பின்வாங்கியும் விடுவார்கள். 

இறுதியாக வருபவர்கள் தான் 'வெறுமனே பார்ப்பவர்கள்' இவர்களுக்கு எந்த ஆர்வம் இருக்காது. முயற்சித்துப் பார்ப்பதில் ஆசையும் இருக்காது. தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு இறுதிவரை பொழுதை போக்கி விடுவார்கள். இதில் எந்த ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் 

இனிய காலை 

#கற்கை_நன்றே_2

No comments:

Post a Comment