”இரண்டு விஷயங்கள் மனிதர்களுக்கு ரொம்ப சுலபமானது. கூட்டதோடு கைதட்டுவது. கும்பலில் இருந்து கல் எறிவது.”
இதை யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை (ஒருவேளை நானேதான் சொல்கிறேனோ என்னவோ). இப்போது என் மண்டையைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருப்பது மார்க் ட்வெய்ன் சொன்னது – கீழே:
”நீ எப்போதாவது பெரும்பான்மையின் பக்கம் நிற்க நேர்ந்தால், அப்போது யோசித்துப் பார் நீ என்ன தவறு செய்கிறாய் என.”
-தாருண்யன் ரவி
#பறவை
நின்று கடக்கும்
ரயில் நிலையங்களில் மட்டும்
கொஞ்ச தூரம் ரயிலில்
பயணித்துக்கொள்கின்றன
பறவைகள்.
- திரு வெங்கட்
No comments:
Post a Comment