Sunday, 10 December 2017

மணி

சிரமத்திற்கு வருந்துகிறேன்
.....................................................

சிரமத்திற்கு வருந்துகிறேன்
ஒரே இரவில்
உங்கள் தன்னம்பிக்கையை சிதைத்து
பைத்தியமாக்கியதற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
பிச்சைகாரர்களாக  வாழ்வது
என்றால் என்னவென்று
120 கோடி பேருக்கு ஒரே நேரத்தில்
உணர்த்தியதற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
உங்கள் ஈமச்சடங்களுக்காக
நீங்கள் ரகசியமாய் சேர்த்துவைத்த பணத்திற்கு
ஈமச்சடங்கு செய்தற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
மாடு மேய்ப்பவர்களை
ஒரே இரவில் கடன் அட்டைகளை
பயன்படுத்துபவர்களாக
மாற நிர்பந்தித்தற்காக

சிரமத்திற்கு வருந்திகிறேன்
ஒரு தேசத்தையே சில்லரைக் காசாகவும்
செல்லாக்காகவும்
மாற்றி விளையாட நேர்ந்தற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
நோயுற்ற ஒரு குழந்தையை
செல்லாத நோட்டுக்ளுடன்
மருத்துவமனை வாசலில் சாகவிட்டதற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
உங்கள் சொந்த குருதியின் பணத்தை
பிடுங்கிக்கொண்டு
அதை திரும்பத் தருவதற்காக
உங்களை நீண்ட வரிசையில்
முடிவற்று நிற்க வைத்ததற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
வரிசையில் நிற்க முடியாத ஒருத்தி
திரும்பிவந்து மாடியில் இருந்து
குதித்துவிட்டதற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
உங்கள் நகக்கணுவில்
இன்னும் எத்தனை ஊசிகளை
ஏற்றினால் நீங்கள்
பொறுமையாய் இருப்பீர்கள் என்று
சோதித்துப் பார்க்க நேர்ந்தற்காக

12. 11. 2016
மாலை 6. 44

- மனுஷ்ய புத்திரன்

TNPTF MANI💥: படிப்பு என்பது என்ன?

சிகாகோவிலிருந்து கல்கத்தா திரும்பிய விவேகானந்தர் உரை

எனது சிகாகோ பேச்சை புகழ்ந்து பேசினீர்கள்..உங்களுக்கு ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன்

படிப்பு என்றால் என்ன?

வெள்ளைக்காரன் வாந்தி எடுத்ததை குடித்து விட்டு மீண்டும் வாந்தி எடுப்பதுதான் படிப்பா? குமாஸ்தா வேலைக்கு தயார்படுத்துவதுதான் படிப்பா? உங்களுடைய படிப்பு ஒடுக்கப்பட்ட,அழுத்தப்பட்ட,நசுக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படவில்லை என்றால்,அந்த படிப்பை தூக்கி கடலிலே எறியுங்கள்..அந்த படிப்பின் மீது காறித் துப்புங்கள்
[12/11, 6:37 a.m.]

💥TNPTF MANI💥: என் பார்வையை
இழுத்துச் செல்கிறது                                             சுவரேறும் கட்டெறும்பு
- நாணற்காடன்

💥TNPTF MANI💥: ஓரங்கிழிந்த பாய்
காரைபோன சுவர்
ஒட்டடை ஜன்னல்
ஒசை எழுப்பும் மின்விசிறி
கழுவாத பாத்திரம்
என்றாலும் என் வீடு இனிது
ஏனெனில் எதிர்வீடு உனது

-யுகபாரதி

VIJAI TNPTF: இருந்திருக்கலாம்..

ஒவ்வொரு வீடு வீடாக
ஒவ்வொரு தெருத் தெருவாகப்
பூத்துக்கொண்டே போனது
போகிற திசையெல்லாம்
பூச்செடி நாற்று விற்கிறவரின் சைக்கிள்
அடுத்த தெருவில் கேட்கும்
அவருடைய குரல்
இந்தத் தெருவில் சற்று முன் பூத்த
எல்லாப் பூவையும்
பறித்து போகாமல்
இருந்திருக்கலாம்.
_கல்யாண்ஜி...

No comments:

Post a Comment