ஒவ்வொருவர் மரணத்திலும் ஒவ்வொருவரும் தன்னுடைய மரணத்தை நினைத்தே அழுகிறார்கள். இன்னொருத்தனுக்காக அழுகிற மனசு இன்னும் வரல
-ஜெயகாந்தன்
தன் பிள்ளைகள் யாரை வெறுக்க வேண்டுமென்பதை தாயால் நிர்ணயிக்க முடியும்..
-மிருதுளா
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நம் மனநிலையிலும், கண்ணோட்டத்திலும், கருத்துக்களிலும் மாற்றங்களேதுமில்லையெனில், போதுமான அனுபவமில்லை.
-மிருதுளா.
மெல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது
வீட்டின் ஓட்டுக்கூரையில் விழும்
மழைத்துளிகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
அதன் சப்தங்களை வைத்து
மெல்ல மெல்ல உறங்கிப்போனேன்
கனவில் நான்
அடித்துச் செல்லப்படுகிறேன்
பெரும் மழை வெள்ளத்தில்
உயிர்பயம் விரவ விரவ
பெருங்குரலெடுத்துக் கத்துகிறேன்
காப்பாற்றச் சொல்லி
யாரையும் காணவில்லை
இன்னும் பலமாய்க் கத்துகிறேன்
காப்பாற்ற வந்து கொண்டிருக்கின்றன
உறங்கும் முன் நான் கேட்ட
கூரை மழைத்துளிகள்
-சௌவி
ஸல்மான் ருஷ்டியைப் பற்றித் தவிர்க்க முடியாத கேள்வி வந்தபோது தாமஸ் டிஷ்ஷின் பதில் மிகவும் சிந்திக்க வைத்தது -
“எந்தப் புத்தகமும், அது கொஞ்சமாவது நல்ல புத்தகமாக இருந்தால், யாரையாவது அவமதித்தே தீரும்”
#சுஜாதா #கணையாழியின்_கடைசி_பக்கங்கள்
நன்றி:எழுத்தாளர் முருகன்
வாழ்க்கையில் தோல்வியுற்றவனுக்கு
தன்னைப் பற்றியே பேசிக் கொள்வதைப் போல வேறு இன்பம் உண்டா?
-க.நா.சு
திங்கட்கிழமை மீது எனக்கு ஒரு கோபமும் இல்லை! அது வரும்போதே நான்கு வேலைநாட்களையும் உடன் அழைத்து வருகிறதே.. அதுதான் பிரச்சனை
-அ.முத்துலிங்கம்
பாரத் கோவை: 💥ஒரு கவிஞருக்குத் தேவையானது சொற்கள்தான். சொற்களுடன் விளையாடுவதுதான் கவிதை.
உங்களிடமிருக்கும் சொற்களை முடிந்த மட்டும் சலித்தெடுங்கள்.
எந்த அளவுக்குச் சலித்தெடுக்கிறீர்களோ அந்த அளவில் உங்களுடைய கவிதைகள் உயிர்பெற்றதாக, மேன்மைப்பட்டதாக இருக்கும்.
-இமையம்.
[13/11, 9:41 p.m.] 💥TNPTF MANI💥: நகரங்கள் தூங்க மறந்து போனதால் கனவு காணும் பழக்கத்தையும் இழந்துவிட்டன
-மனுஷ்யபுத்திரன்
[14/11, 6:39 a.m.] 💥TNPTF MANI💥: கற்பனைகள் காட்டும் கட்டுக்கதை வழியாகவே குழந்தைகள் முதன்முதலில் இந்த உலகத்தை உணர்ந்து கொள்கிறார்கள்
-பாவண்ணன்
[14/11, 7:33 a.m.] 💥TNPTF MANI💥: போன பிறகும் மணம் வீசிக் கொண்டிருக்கும் ஊதுவத்தியைப் போன்றதுதான்
வார்த்தைகள்
-யுகபாரதி
[14/11, 7:33 a.m.] 💥TNPTF MANI💥: கெட்டுப் போறதுன்னாலும் சில பேர் ஓசியில் தான் கெட்டுப் போவார்கள்
-ஜெயகாந்தன்
No comments:
Post a Comment