: செத்துச் செத்துப்
பிழைத்தாய் நீ
வாழ்ந்து வாழ்ந்து
அழிந்தேன் நான்
-சுந்தர ராமசாமி
: பெண்ணுக்கு நல்ல
எதிர்காலம் உள்ள ஓர் ஆண்
தேவைப்படுகிறான்..!
ஆணுக்கு நல்ல கடந்த காலம்
உள்ள ஓர் பெண்
தேவைப்படுகிறாள்..!”
- வளர்மதி.
தேர்வு முடிந்த
கடைசி நாளில்
நினைவேட்டில்
கையெப்பம் வாங்குகிற
எவருக்கும்
தெரிவதில்லை
அது
ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று..!”
- கவிஞர். அறிவுமதி.
மார்வாடிக் கடையில்
நிரம்பிக் கிடக்கிறது
தமிழரின் உழைப்பு
– பாரதி ஜிப்ரான்
No comments:
Post a Comment