Wednesday, 20 December 2017

கந்தர்வன்

என் சோகத்தை
உன் சோகம் வந்து
எட்டித் தள்ளவில்லை
கட்டிப் பிடித்துக் கொண்டது.

நூலிடையாள் என்றார்கள்
இடை மட்டுமல்ல
நீயே நூலாகத்தான்
நடந்து வருகிறாய்.

ஒரு வேலை இல்லாததால்
ஆணுக்குரிய அத்தனை தகுதியையும்
ஒரு சேர நான் இழந்துவிட்டேன்.

உலகம் ஒரு நாடக மேடை
ஏழைகள் நமக்குத்தான்
நடிக்கத் தெரியவில்லை.

*கந்தர்வன்*

No comments:

Post a Comment