Sunday, 10 December 2017

@மணி

பெருந்தன்மை என்பது உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது,
பெருமை என்பது உங்களுக்கு தேவையானதை விட குறைவாக எடுத்துக்கொள்வது
-கலீல்ஜிப்ரான்

# நீ
ஊரில் இல்லாதபோது
ஊரே
இல்லாமல் போகிறது
-நர்சிம்

# தண்ணீர் கேட்டு
காலிக் குடங்களுடன்
ஊர்வலம் சென்ற சாலையில்
மறுநாள்
குடம் கேட்டு
ஊர்வலம் போகிறது
மழை நீர்
-வைகறை

#வாய் சுடுகிறது
மனம் குளிர்கிறது
காலையில் டீ

   -ஜாய் சத்தியா

No comments:

Post a Comment