விழித்திருக்கும்போது நினைவுகளை தவிர்ப்பது மிக எளிமையானது. நினைவுகளை வெட்டிவிட ஏதேனும் ஒரு உடலசைவை பழகிக்கொண்டால்போதும்
-ஜெயமோகன்
: சிந்திப்பதற்கு நாம் வைத்திருந்த மூளையை
தங்கள் சேமிப்புக்கு உரியதாக
மாற்றிக் கொள்கின்றனர்
-யுகபாரதி
: வாழ்க்கை சிலருக்கு இனிப்பாக இருக்கிறது.
சிலருக்கு சுகராக இருக்கிறது..!
வாழத் தகுதியடைவர்கள் யார்?
"சாவதற்கு அஞ்சாதவர்கள்"
-கண்ணதாசன்
: ஒரு நல்ல கதை வாசகனைக் கேள்வி கேட்கும். அந்தக் கதையில் வாசகனுக்கான ஒரு வெளி இருக்கும். எழுதப்பட்டவரிகளுக்கிடையில் அவன் உய்த்து உணர்ந்து பொருள் கொள்ள ஏதுவான எழுதப்படாத வரிகளும் இருக்கும். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அவை மணற்கேணி போல் ஊறி வரும். ஒரு நல்ல கதையை கதாசிரியன் எழுதி முடித்துவிடுவதில்லை. வாசகன்தான் முடித்துக்கொள்ளவேண்டும்.
-பி.ஏ கிருஷ்ணன்
நான் பிறந்தநாளே அடுத்த நாளே
நம் பிறந்தநாள் முடிகிறது
ஆண்டுக்கொரு முறை வருவது
அதன் நினைவு தினமே
-கபிலன் வைரமுத்து
தினமும் குளித்துத் துடைத்து தலைவாரி,ஆடை அணிந்து வெளியே செல்லும்போது ஏதோ ஒரு நாடகத்தில் நடிக்கப்போவது மாதிரியே இருக்கிறது!
-பாதசாரி
No comments:
Post a Comment