*தமிழ் ஹைக்கூ 1⃣0⃣1⃣ ஆண்டு*
பகுதி - 23
ஹைக்கூ படைப்பாக்கத்தில் உள்ள 13 மனநிலைகளில் இன்று 3..
ஏற்புத்தன்மை..
ஏற்புநிலை என்பது இயற்கை நியதிகளை ஏற்றுக்கொள்ளல் என பொருள் கொள்ளலாம்..
இயற்கையிடமிருந்து கற்கும் மனப்பக்குவம் ஹைக்கூவில் ஏற்புநிலை..
நேற்று கிழக்கில்
இன்று மேற்கில்
கோடை மின்னல்
- கிகாகு
முதிர்ந்து உதிர்ந்து இறக்கும்
பல வண்ண மலர்கள்
அனைத்திற்கும் ஒரே கரிசல் மண்
-ரையூசூயி
இயற்கை உண்மைகளுடன் வாழ்வின் உயர்வு தாழ்வுகளையும் ஏற்க வேண்டும் என்கிறது..
என் பழைய ஆடையும், செருப்பும்..
இன்னும் அணிகிறேன்
ஆண்டு முடியும் வேளை..
- பாஷோ
என் மடிந்த நம்பிக்கைகள்
வாடிய கனவுகள்.. ஆனால் இன்னும்
ஒவ்வொறு வசந்தத்திலும் பூ..
-சுசுகி
நம் துன்பத்தில் பிறர் இன்பத்தை வெறுத்தல் மானுடம் அல்ல ; பிறரது இன்பமே நமது இன்பம் என்கிறது சுசுகி யின் கவிதை
நாளை ..
4 ம் நிலையான மௌனம்..
*பெருநதி 2018 அக்டோபர் 16 வரை உங்களை நனைக்கும்*
ஸ்ரீதர்
🍀 திண்டுக்கல் 🍀
No comments:
Post a Comment