இந்தியா பிரிந்தவுடன் முகமது அலி ஜின்னா..காயிதே மில்லத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லீம் லீக் கட்சியின் வரவு செலவு பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான பங்குத் தொகை என்னிடம் உள்ளது.இதனை என்னிடம் நீங்கள் பெற்றுச் செல்லலாம் என எழுதினார்.
அதற்கு பதில் எழுதிய மில்லத் "தற்போது பிரிவினையில் நீங்கள் பாகிஸ்தானிலும் நான் இந்தியாவிலும் இருக்கிறேன்.ஒரு வேளை நீங்கள் அளித்து நான் பெறுவதாய் இருந்தால் என் கை கீழேயும் தங்கள் கை மேலேயும் இருக்கும். இந்தியரான எங்களுக்கு கொடுத்துத்தான் பழக்கம் வாங்கிப் பழக்கமல்ல.எனவே அப்பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றாராம்.அதுதான் கண்ணியமிகு காயிதே மில்லத்.
தேவிகுளம்,பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு சேரும் சூழல் நிலவியபோது..தனது கட்சிக்கு கேரளாவில் செல்வாக்கு அதிகம் இருந்தும் அங்கு தமிழர்கள் அதிகம் வசிப்பதால் தமிழகத்தோடுதான் இவைகளை இணைக்க வேண்டும் என்றார்.
தேசிய மொழியாக தொன்மையான தமிழ்மொழி இருக்க வேண்டுமென குரல் கொடுத்தவர் மில்லத்
காயிதேமில்லத் பிறந்ததினம்
No comments:
Post a Comment