Sunday, 27 June 2021

சேயோன் யாழ்வேந்தன்

காவல்காரியாய் சில நேரம்
எங்கள் குற்றங்களைக் கண்டுபிடிக்கும்
புலனாய்வு அதிகாரியாய் சில நேரம்

எங்களுக்காக அப்பாவிடம் வாதாடும்
வழக்கறிஞராய் சில நேரம்

எங்கள் பிணக்குகளை விசாரித்து
தீர்ப்பு சொல்லும் நீதிபதியாய் சில நேரம்

பல வேடம் போடும் அம்மா
எப்போதும் வீட்டுச் சிறையில்
கைதியாய்!

-சேயோன் யாழ்வேந்தன்

No comments:

Post a Comment