ஒரு நிகழ் கலையில் VERB மட்டுமே இருக்க அங்கே NOUN என்று எதுவும் இருக்காது.அந்த அளவிற்கு “செயல்” நிகழ்த்துபவரை அது ஆட்கொண்டுவிடும்’
-ஓஷோ
அப்பாவின் கைபேசி எண்ணை
அவர் இறந்து
பத்து வருடங்கள் கடந்தும்
என் கைபேசியில்
சேமித்து வைத்திருக்கிறேன்
அப்பாவின் குரலை
அது அநேக முறை
தொலைதூரத்தில் இருந்து
அழைத்து வந்திருக்கிறது
அந்தக் குரல்
என்னைக் கண்டித்திருக்கிறது
தண்டித்திருக்கிறது
அவ்வப்போது
மன்னித்தும் இருக்கிறது
கண்ணாடி பிம்பம்போல்
கைதொடும் தூரத்தில்
இப்போதும் இருக்கிறது
அப்பாவின் கைபேசி
நம்பர் நாட் இன் யூஸ்
என்று திரும்பத் திரும்பச் சொல்லும்
பெண் குரலைத்தாண்டி
அப்பாவிடம்
பேசிவிடும் ஆவலில்
அவ்வப்போது
அழைத்துக்கொண்டே இருக்கிறேன்
உறவினர் புடை சூழ
உடன்வந்தோர் விடை வாங்க
அரிச்சந்திர காண்டம் பாடி
அப்பாவை அன்றொரு நாள்
சிதையில் வைத்தோம்
அப்பாவை எரிக்கலாம்
அவர் குரலை
எப்படி எரிப்பது ?
.
நா. முத்துக்குமார்
No comments:
Post a Comment