பூவா? மலரா?
தொல்காப்பியர் எல்லா இடங்களிலும் ‘பூ’ என்ற சொல்லையே கையாண்டுள்ளார். மலர் என்னும் சொல்லை ஓரிடத்தில் மட்டும் அதுவும் ‘மலர்தலை உலகத்து’ என்று உலகுக்கு அடைமொழியாக கூற பயன்படுத்தியுள்ளார் என்று கூறுகிறார் கோவை இளஞ்சேரன்.
ஏன் தொல்காப்பியர் ‘பூ’ என்ற சொல்லை மட்டும் தேர்வு செய்துள்ளார்?
பூ என்பதே பொருத்தமான சொல். ஏனெனில், மலர்ந்த பூக்களையே ‘மலர்கள்’ என்று அழைக்க முடியும். ஆனால், மலராத பூக்கள் (Cleistogamous Flowers) பல உலகில் உள்ளன என்கிறார் குவி.கிருஷ்ணமூர்த்தி.
ஆகவே அனைத்தையும் பொதுவாக அழைக்க அறிவியல்ரீதியாகவும் ‘பூ’ என்ற சொல்லே பொருத்தமாகிறது.
-நக்கீரன்
No comments:
Post a Comment