Saturday, 10 February 2024

அண்மையில் ஜப்பானில் நடந்த விமான விபத்திலிருந்து பயணிகள் கூட்டத்தை எப்படி இரண்டு மூன்று நிமிடங்களில் பாதுகாப்பாக வெளியேற்றினார்கள் என்று தெரியுமா? அதை ஏன் textbook evacuation என்று சொல்கிறார்கள்? விமானம் நெருப்பு பிடித்ததும் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் யாருமே எழவில்லை. எதையும் குழப்பவும் இல்லை. ஒருவர் கூட பொதிகளை எடுக்க ஓடவில்லை. விமான பணியாளர்களின் தகவல்களுக்காகக் காத்திருந்தார்கள். புத்தகத்தில் இருக்கிற Safety rules ஐ பின்பற்றி மக்கள் அமர்ந்திருந்தார்கள். இதனால் இலகுவாக அனைவரையும் வெளியேற்றி காப்பாற்ற முடிந்தது. குழப்பம் நிகழ்ந்து தாமதம் ஏற்பட்டிருந்தால் அனைவரையும் காப்பாற்ற முடியாமல் போயிருக்கும். தப்பிக்க வேண்டும் என்கிற Survival instinct உந்தியபோதும் அந்த மக்கள் அப்படி இருந்திருக்கிறார்கள்! இதே நிலை நமது இலங்கை இந்திய விமானங்களில் ஏற்பட்டால் என்னாகும் என்று சிந்தித்தே பார்க்க முடியவில்லை. இதுதான் நிலை. எப்போதும் கூட்டத்தை யாரும் கட்டுப்படுத்தமாட்டார்கள். Self decipline அவ்வளவு முக்கியம். இதை எப்போது எப்படி கற்றுக்கொடுக்கப் போகிறோம்?-சுதர்சன்

No comments:

Post a Comment