கை கட்டியவாறே நிற்பது....
கை கட்டியவாறு பேசுவது பற்றி..
ஏ.வி.எம். சரவணனிடம் ஒருமுறை நீங்கள் எவ்வளவு மதிப்பானவர்?
ஏன் எப்போதும் கை கட்டியவாறே இருக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.
அவர் கூறிய பதில்..
இதில் போய் என்ன மதிப்பு குறைந்தது? எனக்கு ஓரிடத்தில் நிற்கும்போதோ பேசும்போதோ கையை எங்கு வைத்து கொள்வது என்ற குழப்பம் வரும். சற்று அசௌகரியமாகவும் கூட இருக்கும்.
கையை தொங்க விட்டவாறு பேசுவதா?
பேன்ட்பாக்கெட்டில் கை விட்டபடி பேசுவதா என பலவித குழப்பங்கள்.
அப்போது ஆரம்பித்ததே கை கட்டியவாறு இருப்பது.
இப்படி கை கட்டி நின்று பேசினால் மிகவும் வசதியாகவும் உள்ளது, அத்தோடு நான் பணிவாக பேசுவதாக எதிரில் நிற்பவரும் நினைத்து என் பேச்சை கூர்ந்து கவனிப்பார்கள்.
இப்போது கைகட்டி பேசுவது ஏ.வி.எம். சரவணன் ஸ்டைல் என்று எனக்கு ஒரு அடையாளமும் வந்துவிட்டது என்றார்.
No comments:
Post a Comment