நீ இந்த உலகில் இருப்பது வெறும் தற்செயல் அன்று.. பிரபஞ்சத்துக்கு நீ தேவை. நீ இல்லாவிட்டால் ஏற்படும் வெற்றிடத்தை வேறு எதுவும் பூர்த்தி செய்ய முடியாது..உன் இன்மையை பிரபஞ்சம் உணரும். நட்சத்திரங்கள் , சூரியன் , சந்திரன் , மரங்கள் , பறவைகள் என அனைத்தும் ஏதோ ஒன்று குறைகிறதே என எண்ணும் , நீ இல்லாவிட்டால். உன் இடத்தை யாரும் நிரப்ப முடியாது.. பிரபஞ்சம் உன் மீது அக்கறை காட்டுகிறது. கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் , எல்லா திசைகளில் இருந்தும் பிரபஞ்சம் உன் மீது அன்பை பொழிவதை உணர முடியும்
- கடவுள் இறந்து விட்டார் , ஜென் மட்டுமே ஒரே உண்மை எனும் நூலில் இருந்து...
No comments:
Post a Comment