மார்னிங் குளோரி என்ற மலரொன்று இருக்கிறது. மலர்களுக்கே உரித்தான வெளிறிய நீல நிறத்திலும் மாவ் [ mauve] என்று சொல்லப்படும் வண்ணத்தோடு கலந்த ஊதா நிறத்திலும் தனிப்பட்டதொரு வெள்ளை நிறத்திலும் அவை இருக்கும். ஊதுகுழல் வடிவத்திலுள்ள அந்த மலர்கள் காலையில் மலர்கின்றன. மலர்ந்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அவை உதிர்ந்து மடிந்து விடுகின்றன. நீங்கள் அம்மலர்களைப் பார்த்திருக்கலாம். அவை கொடியினில் மலர்ந்திருக்கும் போது எத்தனை அழகுடன் இருந்தனவோ அத்தனை அழகுடனே அவை மடியும் போதும் இருக்கின்றன. அம்மலர்கள் சில மணி நேரங்களுக்கே மலர்ந்திருக்கின்றன. பின்னர் அவை இல்லாமல் போய்விடுகின்றன. அவை உதிர்ந்து மடியும் போதும் ஒரு மலரின் தன்மையை இழப்பதில்லை.
நாம் முப்பது, நாற்பது, அறுபது அல்லது எண்பது வருடங்களுக்கு மிகப் பெரும் போராட்டத்திலும் , துன்பத்திலும், நிலையிலா இன்ப சுகங்களிலும் வாழ்ந்து விட்டு , பின்னர் அத்துன்ப நிலையிலேயே , நமது உள்ளத்தில் மகிழ்ச்சியே இல்லாமல் மரணித்து விடுகிறோம். வாழ்வில் நாம் எவ்வளவு அவலட்சணமாக இருந்தோமோ அவ்வண்ணமே தான் மரணித்திலும் இருக்கின்றோம்.
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
நன்றி சக்திவேல்
No comments:
Post a Comment