Reading_Marathon2024
#24RM050
மணிகண்ட பிரபு
Book no:6/100+
A1 எனும் ஏழாம் அறிவு
-ஹரிஹரசுதன் தங்கவேலு
பொதுவாக வெற்றியடைந்தவர்களின் கதைகளை கடைசி பக்கம் மட்டுமே நாம் படிக்கிறோம் என்ற வரி மிகவும் முக்கியமானது. உதாரணத்திற்கு ஜெர்மனி எவ்வாறு வெற்றி அடைந்தது என்றால் அவர்களிடம் படை இருந்தது, மக்கள் இருந்தனர் என்று பொத்தாம் பொதுவாக சொல்லி சென்று விடுவார்கள். ஆனால் உண்மையில் ஜெர்மனியின் வெற்றி எவ்வாறு அமைந்தது என்பதன் ஒரு பகுதியை இந்த நூலில் படித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்று வெற்றிக்கு மிக அருகில் சென்றவர் தான் ஜெர்மானியர்கள் .தொழில்நுட்பங்கள் நமக்கு எவ்விதத்தில் எல்லாம் கை கொடுக்கின்றன தொழில்நுட்பங்கள் வந்த வரலாற்றையும் இந்த புத்தகத்தின் மூலமும், அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய மேதையை பற்றியும் 17 கட்டுரைகளில் செயற்கை நுண்ணறிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.
மனிதனைப் போலவே சிந்திக்க கூடிய ஓர் இயந்திரத்தை நான் உருவாக்கப் போகிறேன். அது ஒரு அளவற்ற நினைவகமும் ஒரு ஸ்கேனரும் கொண்டு இயங்கும். நமது கட்டளைக்கு ஏற்ப நினைவகத்தில் இருக்கும் ஒவ்வொரு குறியீடுகளையும் இந்த ஸ்கேனர் மூலம் முன்னும் பின்னும் ஆக நகர்ந்து தேடும் .பின்பு அதுவே சரியான முடிவுகளை வெளிப்படுத்தும் என்று செயற்கை நுண்ணறி உருவகத்தின் தந்தையாக போற்றப்படும் ஆலன் டூரிங் கண்டுபிடித்தது தான் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் செயற்கை தொழில்நுட்பத்தின் ஆதாரப்புள்ளி.
இரண்டாம் உலகப்போரில் மற்றவர்கள் ஆயுதங்கள் படைபலங்களை நம்பிய போது தொழில்நுட்பத்தை நம்பி ஜெர்மானியர் எனிக்மாவும் என்ஸ்கிரிப்ஷன்,அல்ட்ரா உளவு, தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி போரில் கையாண்டார் என்பதை இந்த நூலில் புதிய விஷயமாக தெரிந்து கொள்ள முடிந்தது. அது எவ்வாறு உளவு வேலை பார்த்தது எதிரிகள் கண்டுபிடித்தாலும் அதனை கையாளத் தெரியாத புதிய உத்தியையும் பயன்படுத்தியது தெரிய வருகிறது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதைப் போல இதனையும் அழித்தொழிக்க இன்னொருவன் வருவான் அவன் தான் ஆலன்.
நவீன தொழில்நுட்பத்தை உடனே ஏற்றுக் கொண்டார்களா உணவுக்காக ஆயுதங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டிய கணிசமான தொகையை வெறும் தொழில்நுட்பத்துக்கு ஒதுக்கலாமா என ஆலன் டூரிங் சந்தித்த சவால்கள் ஏராளம். முதன்முறையாக எலிக்மாவின் ரகசிய தகவல்களை ஆலன் கண்டுபிடித்தார். அது attack at dawn என தொடங்கிய செய்திகள். முழுமையாக எலிக்மாவின் திட்டத்தை தவிடு பொடி ஆக்கினார்கள் இது ஆலனுக்கு கிடைத்த முதல் வெற்றி.
ஆலன் டூரிங்கின் அடித்தளத்தை ஒட்டி இன்றைய கணினி வல்லுநர்கள் பலரும் அவரது தொழில்நுட்பத்தின் மேலே கட்டமைத்து வந்தனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றதில் முக்கியமானவர்கள் மார்பின் மின்ஸ்கி மற்றும் ஜான் மெக்கார்தி.. அதன் பிறகான ஐம்பது வருட தொழில்நுட்பத்தில் இவர்களின் பங்கு முக்கியமாக முக்கியமானது.
கணினி நிரல்கள் COBOL மொழி அறிமுகம் எலிசா என கணினியின் செயற்கை நுட்பங்கள் பரிணாம வளர்ச்சி அடைய தொடங்கியது 1973 ஆம் ஆண்டு ஜப்பானில் ஆண்ட்ராய்டு ரோபோட் உருவாக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு பின்தங்கிய காலம் பின் மீண்டும் எழுச்சி பெற்றது. சதுரங்க கணினி,டீப் ப்ளூ ஆகியவற்றின் மூலம் பிரபலமடைந்தது. அதன்பின் விளையாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் செயற்கை நுண்ணறிவு நுழைந்தது அதன் மூன்று நிலைகளையும் வகைப்படுத்தி விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
இயந்திர கற்றல் சோபியா ஓபன் போன்ற பல்வேறு தகவல்களை விளக்கத்துடன் இதில் கட்டுரையாக எழுதியிருப்பார்.
இத்தனை பெருமைகளும் கூறிய ஆசிரியர் இதன் எல்லா தீமைகளையும் இறுதியில் கொடுத்திருப்பார். அவை இனி அனைத்தும் தகவல்களாக மட்டுமே இருக்கும். பண இழப்பு அதிகரிக்கும். உடனடி மருத்துவர்கள் வருவார்கள். கதைகளை செயற்கை நுண்ணறிவோடு எழுதிக் கொள்வார்கள். மனிதர்களின் தேவை என்பது அருகிவிடும். வேறு துணை எதற்கு என்ற நிலையை மனிதன் ஏற்படுத்துவான். உறவுகள் சிதையும். இதில் ஏதாவது தொழில்நுட்பக் குறைபாடுகள் நிகழ்ந்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்
#ரசித்தவை
*காடுகளில் வேட்டை ஓநாய்கள் தாக்கும் யுத்தியை நீர்மூழ்கி தாக்குதலுக்கு அமல்படுத்தினார்
*மிக நீண்ட நாட்கள் நடந்த உலகின் நவீன கடற் போர் அட்லாண்டிக் போர் தான் 2074 நாட்கள்
*எப்போதெல்லாம் விரக்தி தலை எடுக்கிறதோ அப்போது ஓட்டத்தை தான் தேர்ந்தெடுப்பார் ஆலன் என்னில் அவர் மாறத்தான் ஓட்டப்பந்தய வீரரும் கூட
*இன்று நாம் பாஸ்வோர்ட் டைப் செய்யும் போது நட்சத்திர குறியீடு வருவதற்கு அடித்தளமாக அமைந்தது எனிக்மாவும் டன்னியும் தான்
*கார் சாவி எங்கு வைத்தோம் எனத் தேடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மனித மூளை தோராயமாக ஒரு exaFLOP அதிவேகத்தில் தான் இயங்குகிறது
*2021 ஆம் ஆண்டு ஆலன் பிறந்த நாளான ஜூன் 23ம் தேதி அன்று இங்கிலாந்து வங்கியின் 50 யூரோ தாளில் ஆலன் டூரிங் படம் அச்சிடப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டது
*கணினி அறிவியல் என்பது மிகப்பெரும் தொழில்வெளி. ப்ரோக்ராம்கள். உள்ளீடு ஒன்று கொடுத்தால் அதன் நிரலுக்கு ஏற்ப வெளியீடு ஒன்று வெளிவரும் .அதுவே செயற்கை நுண்ணறிவு என்றால் உள்ளீடு வாங்கிக் கொண்டு தன்வசம் உள்ள பெரும் தகவல் குவியலிலிருந்து ஒன்று அல்லது பல்வேறு பதில்களை வெளியிடாக தரும்
*நியூரான்கள் இல்லாமல் சிந்தனை சாத்தியம் இல்லை. செயற்கையான அறிவு உருவாக்கப்பட்ட இந்த செயற்கை நியுரான்கள் கூட்டம் தான் இயந்திர மூளை கணினி
எல்லா விவரங்களும் சாபத்தோடு தான் வருகின்றன ஒரு முறை டைட்டில் பார்க் திறப்பு விழாவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கேள்வி எழுப்பும் போது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி சொன்னார்.. கணினிகள் இயந்திரங்கள் என்பவை தேக்கி வைக்கப்பட்ட அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீர். மனித மூளை என்பது ஊற்று என்று சொல்லி இருப்பார். இருப்பினும் வருங்காலத்தில் அந்த ஊற்றினையும் கண்டுபிடித்துவிடும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை எனலாம். மனித அறிவை மிஞ்சாதவரை மட்டுமே அனைத்து கண்டுபிடிப்புகளையும் மனிதன் போற்றுவான். மனிதனையும் மிஞ்சி விட்டால் அனைத்தும் இயந்திர மயமாகி மனிதனுக்கு மதிப்பில்லாமல் போகும் என்பது ஒரு கசப்பான உண்மை
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment